30.5.11

தில்லியிலிருந்து ’தினமணி..’

’தினமணி’ நாளிதழ் ஜூன் மாதத்திலிருந்து புதுதில்லிப் பதிப்பாகவும் வெளிவரவிருக்கிறது.
தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் போற்றவேண்டிய நற்செய்தி இது.
ஜூன் 3ஆம் தேதி நிகழவிருக்கும் வெளியீட்டு விழாவில்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு குரேஷி அவர்கள் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பிக்கவிருக்கிறார்.


பி.கு;
தில்லிப் பதிப்பை ஒட்டி வெளிவரவிருக்கும் தினமணி-சிறப்பு மலரில்
‘வைகையிலிருந்து யமுனைக்கு’என்ற என் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது.
மலர் வெளியான பின் என் வலைத் தளத்திலும் அது வெளியாகும்.

4 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்!
    தில்லியில் தமிழ் நாளிதழ் இதுவரை இல்லாதது பெரிய வியப்பு!

    பதிலளிநீக்கு
  2. தினமணிதான் இப்போது அச்சாகவிருக்கிறது.தினகரன் ஏற்கனவே தில்லிப் பதிப்பாக வந்து கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. தினமணியை இனி தினம் தினம் வாசித்து மகிழ்வோம்
    தங்கள் கட்டுரையும் வெளிவருகிறது என்பது
    சந்தோசமாக உள்ளது .
    வாசகன்
    தேவராஜ் விட்டலன்

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி அம்மா..கட்டுரை படிக்கும் ஆவலுடன் கலாநேசன்

    பதிலளிநீக்கு