பிரபஞ்சத்தில் ரத்தமும் சதையுமாய் நமக்கு முன் வாழ்ந்து நடமாடிய உண்மையான சில மனிதர்களை - அவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவற்றோடு தனது புனைவுகளையும் ஒருங்கிணைத்தபடி சிறுகதைகளாக்கும் பாணியைக் கையாண்டபடி ’அறம்’வரிசைச் சிறுகதைகள் வரத்தொடங்கிய புதிதில்,’’ஜெயமோகனின் தளத்தில் சிறுகதை மழையாய்க்கொட்டத் தொடங்கி விட்டது.பார்வையை வேறெதிலும் திருப்ப முடியாதபடி மனிதர் தன் எழுத்தால் வசியம் செய்து கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகனைப் பொறுத்தவரை, இது கதை உதிர் காலம்.!’’என்றும்,’