26.12.11

’முகம்’விருது பெறும் ஜெயமோகன்...

சுற்றுச் சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஊட்டுவதில் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் எழுதி விஷ்ணுபுர வட்டத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலவசமாக வெளியிட்டுள்ள யானை டாக்டர் என்னும் சிறு நூல் பெரும்பங்காற்றி வருகிறது.குறிப்பிட்ட அந்தச் சிறுகதை அடங்கிய ‘அறம்’சிறுகதைத் தொகுப்பிற்காக  குக்கூ என்னும் சேவை அமைப்பு[மாற்றுத்திறனாளிகளுக்கான கல்விக்கும் அடித்தள மக்களுக்கான கல்விக்குமாக ஆத்மார்த்தமாக சேவை செய்து வரும் நண்பர்களின் அமைப்பு] அவருக்கு ‘முகம்’விருது வழங்கி கௌரவிக்கவிருக்கிறது.



27/12 செவ்வாய் மாலை 4 மணிக்கு அவினாசி அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தில் உள்ள திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. 
விருது பெறும் திரு ஜெயமோகனுக்கும் விருதை வழங்க முன் வந்த குக்கூ அமைப்பினருக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்...
காண்க;
முகம் விருது

இலக்கிய,சூழியல் ஆர்வலர்களின் பார்வைக்கு....



இணையத்தில் யானை டாக்டர் தமிழ்ச் சிறுகதை மூலம்;
Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433
Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439
யானை டாக்டர் சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்;
http://www.albanytamilsangam.org/vishvesh/ED_1.htm

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....

பரவலான கவனம் பெற்ற பதிவுகள்