36 ஆண்டுகள் கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றி ஒரு கல்வியாளர்,எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் என்று பெற்ற முகவரிகள் மட்டுமே என்னுடையவை அல்ல.

நிகழ்ச்சியை நடத்திய திரு அரவிந்தசுவாமி அவர்கள் எங்களோடு மிகுந்த உற்சாகத்துடனும் அறிவார்ந்த தளத்திலும் உரையாடியது என்றென்றும் எங்கள் இருவரின் நெஞ்சங்களிலும் பசுமையாகநிலைத்திருக்கும்.
விஜய் டிவியில் அந்தக்குறிப்பிட்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றுவோர் எங்களுக்கு அன்போடு செய்த பல உதவிகளும் எங்களால் மறக்க இயலாதவை.
மகிழ்ச்சியோடு நாங்கள் கலந்து கொண்ட அந்தநிகழ்வில் பெற்ற வெற்றி ஒரு புறமிருக்க... தொலைக்காட்சி ஒளிபரப்புக்குப் பிறகு உலகின் எங்கேங்கொ மூலைகளிலிருந்தெல்லாம் என் அன்பு மாணவிகளும் 40 , 45 வருடங்களுக்கு முன் சந்தித்துப்பழகியநட்புக்களும் என்னோடு தொடர்பு கொண்டு தாங்கள் என் மீது கொண்டிருக்கும் நட்பையும் அன்பையும் மதிப்பையும் கைபேசி மின்னஞ்சல் எனப்பலவகைகளில் பரிமாறியபடி என்னை அன்பு வெள்ளத்தில் திக்கு முக்காடச்செய்து வருகிறார்கள்...ஊடகத்தின் வலிமை அத்தைகையது....
குடும்பத்திலுள்ள குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்னும் மகிழ்ச்சியோடு நான் ஒரு நல்ல ஆசிரியையாக இன்னும் கூட என் மாணவியர் நெஞ்சில் உறைந்திருக்கிறேன் என்ற பெருமிதமும் நிறைவும் என்னை நெகிழச்செய்து கொண்டிருக்கிறது....
நிகழ்ச்சியைக்காண்பதற்கான இணைப்புக்கள்;
http://www.hotstar.com/tv/neengalum-season-3/9265/great-expectations/1000108337
http://www.hotstar.com/tv/neengalum-season-3/9265/little-shobhanas-surprise/1000108475
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக