துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.8.16

’வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமல்ல’


என் நாவல் ’’யாதுமாகி’’ குறித்த - மனதுக்கு அண்மையான- மற்றுமொரு கடிதம்...




லோகமாதேவி
தாவரவியல் பேராசிரியர்
பொள்ளாச்சி

அன்பின் சுசீலாம்மா

சென்ற வாரம் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த உங்களின் ’யாதுமாகி’ குறித்த என் அபிப்ராயங்களை எழுதுகிறேன் என்னால் ஆய்வு நோக்கில் எந்த படைப்பையும் வாசிக்கவோ அன்றி விமர்சிக்கவோஇயலாது. நான் ஒரு வாசகி அவ்வளவே. இலக்கிய மற்றும் நவீன இலக்கியப் படைப்புக்கள் எதுவாகினும் நேரடியாக அதன் சுவையையும் பொருளையும் அறிந்து இன்புறுவேன்,  

எனக்கு முதலில் இந்தத் தலைப்பு மிகவும் பிடித்தது,”யாதுமாகி”. எங்கும் நிறைந்ததல்லவா அன்னைமை? மிகப் பொருத்தமான தலைப்பு. 4 தலை முறைகளைக் காட்டி இருக்கிறீர்கள் இதில் அன்னம், அவர் மகள் தேவி, அவர் மகள், பின் அவரின் மகள் என்று. 4 தலைமுறைகளாக மாறாத பெண்மையின் துயரத்தைப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பால்ய விவாகத்தில் மணம்செய்துவைக்கப்பட்டு அடுப்படியே உலகமென வாழும் அன்னம்மாவைக்குறித்து மிக அதிகம் சொல்லப்படவில்லையெனினும் அவர்கள் தொடரும் அனைத்து நிகழ்வுகளயும் இணைக்கும் சரடாகவே  இருக்கிறார்கள். 

பின் இந்தக் கதையின் முக்கியமான ஆளுமை தேவி, காலம் காலமாகத் தொடரும் பெண்மையின் துயரமனைத்திற்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாகவே இருக்கிறார்கள் அவர்கள், இருப்பினும் அத்தனை இன்னல்களிலும் அசராத தன்னம்பிக்கையும் கம்பீரமும் தாய்மையும் அழகும் பெண்மையும் மிளிர்கின்றது அவர்களின் பாத்திரப்படைப்பில். அவர்களை அறிமுகப்படுத்துகையில் காட்டப்படும் நைட் குவின் மலர் விதவைக்கான  ஒரு குறியீடா? என்னைப்பொறுத்த வரையிலும்  எல்லா மலர்களையுமே  உற்பத்திக் காரணம் கொண்டு குறியீடாகவே நான் காண்கிறேன், எந்த நிறமானாலும், எந்த நேரத்தில் மலர்ந்தாலும் அது பெண்மைக்கானதே.மென்மையின் வல்லமையை, வாழவும் வாழ்விக்கவும் வந்த மலர்களும் பெண்களும் மட்டும் தானே சுசீலாம்மா காட்டமுடியும்? தொடர்ந்து உலகம் இயங்குவதும் இவற்றால் மட்டுமே அல்லவா?

தேவியின் சிறுவயதுத் திருமணம், தொடரும் அறியாத வயதின் விதவைக் கோலம், சுப்புலட்சுமியின் அமைப்பில் சேர்க்கை, அப்பாவின் மரணம்,கிறிஸ்துவப் பள்ளியில்   பணி, மாற்று மதத்தைச் சேர்ந்த தோழியின் நட்பு, வளரும் தன்னம்பிக்கை,, விலகும் சில உறவுகள், அதனால் ஏற்படும் சில தடுமாற்றங்கள்,பின் மறுமணம், பெண்குழந்தைகள், மீண்டும் கணவரின் இழப்பு, புதிய பணி,அதில் அவரின் கண்டிப்பு, நேர்மை, மகளின் திருமணம் அதன் தோல்வி, அதில் ஏற்பட்ட உளவியல்  ரீதியான பாதிப்பு, சீர்குலையும் ஆரோக்யம் பின் அவரின் இறுதி, இப்படி ஒரு முழுமையான  life cycle மிக அழகாக சித்தரிக்கப்படுள்ளது. இது புனைவு வெளி அல்ல என்பதை நான் அறிவேன் சில புனைவுக் காட்சிகள் இருக்கலாம்.

மாறிவரும் காலகட்டங்களை மாற்றி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும் குழப்பமின்றிக் கதை கோர்வையாகவே செல்வது இந்த படைப்பின் சிறப்பம்சம். வெறும் வாழ்க்கைச் சரித்திரமாக மட்டுமாகவல்ல நீங்கள் அன்னையின் கதையை ஆவணப்படுத்தியது அதில் அந்தக் கால கட்டத்தின் அவலங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பெண்விடுதலைக்கான முயற்சிகள்,விதவா விவாகம்,அப்போதைய சாதி ரீதியான ஆதிக்கங்கள், ஆண் குழந்தையை நம்பி வாழும் வாழ்வு முறை,என்று பல முக்கிய விவரங்களைப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.
சகோதரி சுப்புலட்சுமி
தேவியைப் பற்றின விவரிப்புகளில் அவரின் காலந்தவறாமை பட்டுப்புடவைகளை மெத்தைக்கு அடியில் மடித்து வைப்பது, செடி கொடிகளின் மேலான அவரின் நேசம்,சிந்தால் சோப்பின் உறையை பத்திரப்படுத்துவது ஐஸ் ஹவுஸ் எதற்காக கட்டப்பட்டது,சகோதரி சுப்புலட்சுமியின் வாழ்க்கைக் குறிப்பு, பூணூல் கல்யாணம், பெண்கள் வேதமந்திரம் சொல்ல இருந்த தடை,பலாச்சுளைகளைத் தேனில் தடவி உண்டது என எத்தனை எத்தனை குட்டிகுட்டித் தகவல்கள்?

முன்னாள் ஐஸ் ஹவுஸ் கட்டிடம்
[இன்றைய விவேகானந்தர் இல்லம்]

சாம்பசிவத்தின் பழமையில் ஊறிய தாயார், (அன்னத்தின் மாமியாரையும்) கணக்கில் எடுத்துக்கொண்டால் 5 தலைமுறைகளை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள்? 5 தலைமுறையை சேர்ந்த பெண்களின் வாழ்வை இதனை சிறிய புத்தகத்தில் அடக்கியதே ஒரு சாதனைதான்


அதிலும் தேவியின் புடவை பற்றிய குறிப்புகளை நான் மிகவும் ரசித்தேன், அடர்ந்த கேசத்துடன் இருக்கும் அழகிய தேவி அணிந்திருப்பது பட்டுதான் என்று கருப்பு வெள்ளைப் புகைப்படத்திலும் தெளிவாகவே தெரிகிறது.முன்பு விதவையாயிருந்தபொழுது அணிந்த வெண்ணிற புடவை மறுமணத்திற்க்கு பிறகு அருமையான வண்ணங்களில் பட்டாக மாறினாலும் அதற்கும் வெள்ளை ரவிக்கையே அவர்கள் அணிந்தது அவர்  விதவையாயிருந்தவர்  என்பதை மறக்கமுடியாத, நினைவின் ஒரு சிறு நீட்சிதானோ என்னவோ ?


சுசீலாம்மா, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் விவரிப்பேன் அந்த அளவிற்கு இதை ஆழ்ந்து படித்தேன். உங்கள் தாய்க்கு இந்த புத்தகம் வெறும் அஞ்சலி மட்டுமல்ல பெரும் கெளரவமும் கூட. ,உங்களை நட்பாக்கிக்கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி.  அவரும் என்னைப்போலவே தாவரங்களை நேசித்தவர் என்பது கூடுதல் மகிழ்வை அளிப்பதாக இருந்தது..

சுகாவின் தாயர் சன்னிதி படிக்கக் கிடைக்கவில்லை என்பதை ஏனோ இப்போது இதை எழுதி முடிக்கையில் நினைவுகூர்கிறேன். வாங்கிப் படிக்கவேண்டும்.பிறக்கையிலேயெ கருவறையுடன் பிறப்பவர்களல்லவா நாமெல்லாம்? எல்லாஅன்னைகளுமே கருவறைகொண்ட சன்னதிதான். அவற்றின் முன்பு தலை வணங்கியே ஆகவேண்டும் தலைமுறைகள். 

நீங்கள் உங்கள் வணக்கத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் இந்தப் புத்தகம் வாயிலாக. நன்றி சுசீலாம்மா யாவற்றிற்கும்

மாறா அன்புடன்
லோகமாதேவி



11.8.16

என் நாவலும்,ஓர் அஞ்சலும்...

’’ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம்  அவரது
படைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.’’

என் ’’யாதுமாகி’ நாவல் வெளிவந்து  கிட்டத்தட்ட ஒன்றரைஆண்டுகள்கடந்து விட்டன....

திண்ணைஆம்னிபஸ் ஆகிய  இணைய இதழ்களிலும்
,உங்கள் நூலகம் இதழிலும்  விமரிசனக்கட்டுரைகளும், அந்திமழை,
தினமணி,தினமலர் முதலிய இதழ்களில் சில அறிமுகக்குறிப்புக்களும் நாவல் குறித்து வெளிவந்தன.தனிப்பட்டமுறையில் நண்பர்களும், முகம்
தெரியாத சில நபர்களும் கூட எனக்கு அவ்வப்போது
நாவல்பற்றிமின்னஞ்சல் செய்ததுண்டு...ஆனாலும் கூட...என் படைப்பு,
அதன் மிகச்சரியான வாசகரை இன்னும் சென்று சேரவில்லையோ
என்னும் ஏக்கமும் , அது குறித்த  மிகச்சரியான வாசிப்பு இன்னும் கூட
நிகழ்ந்தாகவில்லையோ என்ற வருத்தமும், ஒரு புறம்  என்னுள்
ஓடிக்கொண்டே இருந்தது.

நூலின் உள்ளடக்கத்தைக்  கொஞ்சம் கூட உட்செரிக்காமல் முன்னுரை,
அணிந்துரை, பின்னட்டைக்குறிப்புக்கள் இவற்றிலிருந்து
ஒப்பேற்றி,,,ஒப்புக்கு எழுதப்படும் மொண்ணைத்தனமான குறிப்புக்களுடன் வெளிவரும் நூல்அறிமுகங்கள்..[அது கூடச்சொந்தமாக இல்லாமல்,மேற்சொன்னவற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்டவையே] ஒரு  பக்கம் என்றால் இதன் மறு பக்கம் இன்னும் மோசமானது..இது வாழ்க்கைச்சரித அடிப்படையிலான புனைவு என்பதால்  வரிகளுக்கு இடையே, வேறு பொருளைத் துருவித் தேடிப் பார்க்க எண்ணி வாய்க்கு
அவலும்  வம்பும் கிடைக்குமா என அலையும் இன்னொரு  கூட்டம்

எனக்கு அறிமுகமான நண்பர்கள்,மாணவிகள் என்னப்பலரும்-  என் நாவல்பற்றிக்கூறிய  பாராட்டுரைகள் எனக்கு உகப்பானவையாக இருந்தாலும் கூட  அவர்கள் என்  மீது வைத்திருக்கும் தனிப்பட்ட  அன்பின் சார்பும் அதில் பிணைந்து கிடந்தது.அதனால், அவர்கள்  முன் வைத்த ரசனையோடு கூடிய கட்டுரைகளிலும், கடிதங்களிலும்,விமரிசனங்களிலும்  அகவய நோக்கு[subjectivity] கலந்து விடுவதென்பது மிக இயல்பானது;  தவிர்க்க முடியாதது. அதன் காரணமாகவே - அவற்றோடு மட்டுமே  நிறைவு கண்டுவிட  என்னால் இயலவில்லை.

என்றேனும் ஒரு நாள்  ஒரு   மெய்யான...கறாரான, புறநிலை
விமரிசனத்தை [OBJECTIVE ] , இலக்கிய அணுகுமுறையோடு கூடிய
மதிப்பீட்டை நான் அடையக்கூடும் என்ற நம்பிக்கையில்... மாதக்கணக்கில்  காத்திருந்தேன்....

காரணம், நான் முன் வைத்தது ஒரு வாழ்க்கை என்றாலும் அதை
வெற்றுச்சரித்திரமாகச்சொல்லி விட்டுப்போகாமல்,முடிந்தவரை  ஒரு
புனைவு இலக்கியமாக மாற்றித் தருவதில் என் உயிரை உருக்கித் தவம்
இயற்றி இருந்திருக்கிறேன்....அதில் நான் எந்தஅளவு  வெற்றி
பெற்றிருக்கிறேன்,.... எந்தெந்தக் கட்டங்களில் புனைவுக்கலை என் கை
நழுவிப்போய் விட்டிருக்கிறது, நான் முன் வைக்க நினைத்த மையத்தை
சரியாக முன் வைத்திருக்கிறேனா.., அறிமுகமே அற்ற நல்ல
வாசிப்புக்கொண்ட எவரேனும் ஒருவர் அதைக்கண்டடைதல் என்றேனும்
கூடுமா  என்ற ஐயங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமிக்கத்
தொடங்கியிருந்தன.,  .

பேசாமல் நானே  இதற்கு ஒரு விளக்கம்தந்து இதை எந்த அடிப்படையில்
புனைவாக்கி எப்படியெல்லாம் கட்டமைத்திருக்கிறேன் என்று சொல்லி
விடலாமா என்று கூட யோசிக்கத் தொடங்கியிருந்தஒரு கட்டத்திலேதான்
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு,   வாசகி ஒருவரிடமிருந்து
கீழ்க்காணும், சுருக்கமான  ஆங்கில மின்அஞ்சல்,   எனக்கு வந்து
சேர்ந்தது....


//I just now finished reading your fictional autobiography ’Yadumagi’ which speaks about someone who was everything to those whom her life touched. You have reconstructed the past in a realistic and humane manner and therein lies the success of the work. 
We have spoken much about child marriages, child widows,  widow remarriages  and visionaries like sister Subbulakshmi in their respective slots.But we have not had any attempt made as you have done to bring out how the emotional havoc of one generation can affect the next generations too and what i liked best is the way out of such a one simply presented in the course of the work. 

The titles of the chapters do align well with 'Yadumagi ' though special mention should be made of "Asaivaru mathi Ketten".
The photographs/sketches belong well. Do have the work translated. I do so much want to see Devi.//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

’கண்டனன் கற்பினுக்கு அணியை’ என்று இலங்கையில்
சீதையைக்கண்டதும் தாவிக்குதித்த அனுமனின் பரவச  நிலை எனக்கு
சித்தித்ததும்..., மிகத் தேர்ந்த வாசகி ஒருவரை நான் இனம் கண்டு
கொண்டதும் அந்தநொடிப்பொழுதில் நிகழ்ந்த மாயங்கள்....

என் படைப்புக்குழந்தையின் மிகச்சரியான வாசகி கிடைத்து விட்ட
மகிழ்வில் அஞ்சல் பார்த்த மறுநொடியே  
‘’என் படைப்பு ஓராண்டுக்கும் பிறகு அதன் சரியான வாசகரான உங்களை
இப்போதுதான் கண்டடைந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு
முக்கியத்தேவை புகழ் பணம் அல்ல,தன் படைப்பை அதன் ஜீவனோடு
புரிந்து கொள்ளும் சக ஆத்மா மட்டும்தான்.அது உங்கள் வழி வாய்த்ததில்
மகிழ்கிறேன்’’என்று  மறுமொழி அனுப்பி வைத்தேன்...

அதற்குப்பின்பு  தொடர்ச்சியாக நிகழ்ந்த   எங்கள் உரையாடல்களில்,,, மின் அஞ்சல்களில் ’யாதுமாகி’ குறித்து அவ்வப்போது அவர் வெளியிட்ட கருத்துக்களை இங்கே தொகுத்துத்தந்திருக்கிறேன்...


//You know madam,
I have been trying to know what exactly i feel after reading the book. 
To put it in Tamizh Dukkamairukku. //
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//I spoke to one of my Tamil colleagues and  expressed my unhappiness over reading the book rather late (after almost a year i guess after its pub).. She wanted my opinion on the style. I liked the way you introduced Devi's life. I am not exaggerating - I read the book in two hours and am still thinking about - will continue to do so. What untold pain for all concerned. What callousness by all concerned - in the midst Devi with ’Asaivaru mathi’. I guess it was accidental that you linked ma’ ganga with her.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


//Devi, Charumma and Neena have become so close to me that i seem to be living their lives at times. Even Sambasivam and his wife are - i keep scolding Samba for not having the guts - ’Soozhnilai Kaithikal’.
Just before I read your ’Yadumagi’, I read Paul Kalanithi's  ’When Breath becomes Air’. An autobiography of a 36 year old Neuro scientist and surgeon - it left me bewildered - amazing wisdom of a different kind - economically written. Then Joe D'Cruz's ’Hasthinapuram’ - a 416 pages domestic novel where the author shows how each household is a hasthinapuram in microcosm - left me thinking. But yours is where i have ruminated for days at a stretch and feel as though the senseless injustice has been done to me.//
​,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//Well, I knew all about you in that first reading of ’Yadumagi’ the surface and the deeper meaning. If you remember my initial comments - i wrote Dukkamairrukku.  If you were to ask why? i have a thousand reasons but i felt and feel that you like me or may be vice-versa feel the Dukkam and it would haunt us through our lives - me without knowing Devi and you having lived her life, looking at her - when i read the lines"Appa varappogum seidi vandadume evaluvudan...thigattadu" a part of me said this Susila is great to understand and appreciate this feeling of a woman who reserves it for her child's father and the other side berated so many who were insensitive to it. I had objectivity and you were subjective despite maintaining an aesthetic distance...
You know ...you excelled yourself in your writing - but to be back to the point - i felt, feel and will feel when i recollect these and a thousand other things in the book.//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//The first that struck me when I read your 'Yadumagi' is this ruminative voice in the writing. It is the voice of the soul trying to grapple with life's experiences and with the incomplete in oneself. The book is a wonder, especially where you write about the 'agalin vemmai' [p 207-208] ,
it transcended the barriers of prose and became sheer poetry. Your short stories - everyone of them carry the voice of someone debating within about every issue. This is the reason why your translation of Dostoevsky  has become a possibility. An interior monologue at times dialogue too. There is no loneliness in your writings including your letters as much as aloneness. You have mastered the art of being alone//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

//The success of the whole writing lies in not writing about the sadness or harassment but about taking it in the stride and standing tall despite everything.
All human life is one way or the other a tale of sadness and successful individuals have just gone on by laying it aside. 
An insightful reader and writer share this philosophical/ melioristic disposition.

May you get many more to urge  you to do your next.​//
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அந்த வாசகி,சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் பணியாற்றிய  ஆங்கிலப்பேராசிரியையான முனைவர் காதம்பரி  என்பதும்.., 
தமிழ் உட்படப் பல மொழிகளில் தேர்ச்சி  கொண்ட மிகச்சிறந்த
கல்வியாளர், கூர்மையானநுண்ணுணர்வு கொண்ட  திறனாய்வாளர் மற்றும்மொழிபெயர்ப்பாளர் என்பதும் ...அதன் பின்னால் நான்  அறிய நேர்ந்தவை.

ஒரு படைப்பாளியின் மீது காட்டும் நேசம் , அவரது
படைப்புக்குறித்த பூரணமான புரிதலில் மட்டுமே முழுமை பெறுகிறது.
என்னை எவரென்று  அறியாமல்.... என் படைப்பை மட்டுமே அறிந்தவராய் அவர் எழுதியமடல் ,எங்கள் நட்புக்குப்பாலம் அமைத்து விட…,.
 நாங்கள்  இருவரும், இப்போது இலக்கியப் பரிமாற்றங்களால்  அதை வளர்த்துக்கொள்ளும்  நல்ல தோழியராகி விட்டோம் 


5.8.16

தஸ்தயெவ்ஸ்கி எனும் மனிதன்- ஒருகடிதம்


செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள
தஸ்தயெவ்ஸ்கி நினைவகத்தின் முன் 



தஸ்தயெவ்ஸ்கி
நினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையுடன்


நந்தகுமார்.

அன்புள்ள சுசீலாம்மா அவர்களுக்கு,

நன்றி அம்மா!

உங்களின் அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி சிறுகதைகள் மூன்றையும் படித்தேன்.
முரட்டு சூதாடியையும், கிறுஸ்துவான அசடனையும் ஒரு சேர மரணத்தின் விளிம்பினில் இருந்து தரிசித்துக் கொண்டிருக்கிறேன். மனிதக் கீழ்மைகளின் அடி ஆழத்தைத் தோண்டி ஆன்மாவைக் கண்டடையும் பெரும் பிரவாகத்தில் அடித்து செல்கிறார்.

வார்த்தைகளில் என்னால்  நுட்பமாக விளக்க இயலவில்லை.

இந்த சிறந்த தமிழ் மொழிப்பெயர்ப்புகளுக்கு நன்றி அம்மா!

அவரின் மற்ற படைப்புகளையும் நீங்கள் தமிழில் கொண்டு வர வேண்டும்.

நன்றி!

அன்புடன்,

நந்தகுமார்.
................................................................


அன்பின் நந்தகுமார்
மிக்கநன்றி.......

இப்படிப்பட்ட எதிர்வினைகளே என்னை இயங்கவைத்துக்கொண்டிருப்பதால்  நன்றிசொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை.

இப்போதுதான் தஸ்தயெவ்ஸ்கி மண்ணை தரிசிக்கும் தீராத ஆசையுடன் ரஷ்யாசென்று மீண்டிருக்கிறேன்...

விரைவில் கீழுலகின் குறிப்புக்களும் [NOTES FROM THE UNDERGROUND]
இரட்டையர்-[THE DOUBLE] என்றநாவலும் என் பெயர்ப்பில் அடுத்த புத்தகக்கண்காட்சியில் உங்களுக்குக்கிடைக்கும்.

அதற்கேற்ற உடல் மனநலம் வாய்க்க மட்டும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அசடன், குற்றமும் தண்டனையும், ஆகியவற்றையும் நற்றிணை பதிப்பகத்தார் மிகவிரைவில் அடுத்த செம்பதிப்பாகக்  கொண்டு வருகிறார்கள் 

உங்கள் ஊக்க மொழிகள் என் உயிர்தீயை ஓங்கச்செய்யும் என்னும் நம்பிக்கையுடன்

எம் ஏ சுசீலா


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....