tag:blogger.com,1999:blog-973777845258784986.post51737610659916417..comments2024-02-18T21:03:57.334-08:00Comments on எம்.ஏ.சுசீலா: மொழியாக்கம் - கலந்துரையாடல்Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-973777845258784986.post-59448851476249187042011-05-09T03:13:51.124-07:002011-05-09T03:13:51.124-07:00பொதுவாகவே மாண்வர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் குறைந்த...பொதுவாகவே மாண்வர்களுக்கு வாசிக்கும் ஆர்வம் குறைந்து வருவது வருந்தத் தக்க விஷயம்.<br />கலந்திரையடலுக்கு வரும் மாணவர்கள் அந்தத் தயாரிப்பு இல்லாமல் வருவது கண்டிக்கத்தக்கது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-40910501310272270792011-05-05T05:04:29.888-07:002011-05-05T05:04:29.888-07:00உங்கள் வருத்தம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருப்பி...உங்கள் வருத்தம் புரிந்து கொள்ளக் கூடியதே. இருப்பினும் இந்தப் புத்தகங்கள் சற்றே தீவிர வாசகரைத் தவிர பிறரைக் கவருவதில்லை - அதுவே காரணம். அப்படியே செறிவானக் கலந்துரையாடலுக்காகப் படிக்கச் சொன்னாலும் புரட்டி விட்டு வருவார்களே ஒழிய படித்துவிட்டு வருவார்களா என்பது சந்தேகமே. (பொழுது போகப் படிப்பவர்கள் தான் அதிகம் என்பது என் எண்ணம். இலக்கிய தாகம்/ஆர்வம் கொண்டு படிப்பது மிகக்குறுகிய வாசகர் வட்டம்.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-2513340401134632172011-05-04T19:42:52.290-07:002011-05-04T19:42:52.290-07:00கோபி ராமமூர்த்தி அனுப்பிய கடிதம்..
எம்.ஏ.சுசீலாவால...கோபி ராமமூர்த்தி அனுப்பிய கடிதம்..<br />எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.<br /> அன்புள்ள சுசீலா மேடம் அவர்களுக்கு<br />ஒரு ஆவலில் கரமசாவ் சகோதரர்கள் நாவலிலிருந்து ஒரே ஒரு பத்தியை இருதினங்களுக்கு முன் நான் மொழிபெயர்த்துப் பார்த்தேன். ஐந்தாறு முறை அந்தப் பத்தியைப் படிக்கும்படி ஆயிற்று. எவ்வளவோ மெனக்கேட்டும் சரிவர மொழியாக்க முடியவில்லை. குறிப்பாகச் சில ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை (impulse, vices).<br /> <br />முழு நாவலையும் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்கள் பிரமிப்பை வரவழைக்கிறார்கள். இருமொழியிலும் வல்லவராக இருக்கக் கூடியவர்கள் மட்டுமே செய்யக்கூடிய வித்தை இது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒருவிதத்தில் இவர்கள் பொறாமையை வரவழைக்கின்றனர். மொழியாக்கம் சிறப்பாக வரவேண்டுமென்பதால் எப்படியும் இரண்டு \ மூன்று முறை ஆங்கில வடிவத்தைப் படித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. தஸ்தயெவ்ஸ்கி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை படிக்கும் வாய்ப்புள்ளவர்கள் நிச்சயமாகப் பெரும் பேறுபெற்றவர்கள்.<br /> <br />இந்த நேரத்தில் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் (முன்னுரையில் என்று நினைக்கிறேன்) ஜெமோ குறிப்பிடும் ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. மொழியாக்கம் செய்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதுதான் அது. அது இந்தியாவின் பிற மொழி நூல்களைத் தமிழாக்கம் செய்பவர்களுக்கு மட்டுமா அல்லது உலகப் பேரிலக்கியங்களை மொழியாக்கம் செய்பவர்களுக்கும் அதே நிலைதானா?<br />அன்புடன் <br />கோபி ராமமூர்த்திஎம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-41432960480484970732011-05-03T03:51:19.856-07:002011-05-03T03:51:19.856-07:00தமிழாக்கம் என்றவுடன் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும...தமிழாக்கம் என்றவுடன் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் சோதனைகளையும் (தமிழ் கலாசாரத்துக்கு ஏற்குமா?) பற்றி விவாதம் நடத்துக்கிறோம் - பெரும்பாலான உலக இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவையே என்ற உண்மையை மறந்து மொழிபெயர்ப்பானாலும் அப்படியே ஏற்கிறோம். (படிக்கும் சிலருக்கு மூல நூலின் எந்தப் பகுதியை வெட்டினார்கள் என்ற சந்தேகமும் வரும் :) <br /><br />எனினும், இது போன்ற தீவிர இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து தமிழில் சேர்த்திருப்பது அசத்தலான சாதனை - சோதனைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட சாதனையைப் பாராட்டி ஏற்பது மேல் என்று தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-24732664666902259762011-04-30T21:24:13.151-07:002011-04-30T21:24:13.151-07:00சொந்த மொழியிலேயே படைக்கப்படும் ஒரு நாவல் அல்லது சி...சொந்த மொழியிலேயே படைக்கப்படும் ஒரு நாவல் அல்லது சிறுகதையைப் படிப்பது போன்ற சரளமான ஓட்டம் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களைப் படிக்கையில் சாத்தியமாவதில்லையே என்ற வினா குற்றமும் தண்டனையும் நாவலை வாசிக்கும் போது எனக்கு ஏற்படவில்லை ஏனெனில் தெளிவான மொழிபெயர்ப்பில் எந்தவித நெருடல்கள் இன்றி வாசிக்க முடிந்தது. <br /><br />இந்த கலந்தாய்வில் நானும் கலந்து கொண்டிருந்தால் பல அரிய விசயங்களை ஆலோசித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-1957495277267506122011-04-30T20:27:09.820-07:002011-04-30T20:27:09.820-07:00அம்மா உங்கள் படைப்பு அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற...அம்மா உங்கள் படைப்பு அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற வாழ்த்துக்கள் .suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-973777845258784986.post-78198032944793206882011-04-26T04:48:27.925-07:002011-04-26T04:48:27.925-07:00நல்ல விவாதம். //கூடுவிட்டுக் கூடு பாய்கிறவனே சிற...நல்ல விவாதம். //கூடுவிட்டுக் கூடு பாய்கிறவனே சிறந்த ஆக்கங்களை முயல முடியும்// அருமையான விளக்கம். <br />//,உலகப் பேரிலக்கியங்களை நெருக்கமாக அணுகிச் சென்று மொழியாக்கும்போது பெறும் வாழ்க்கையின் தரிசனமும் ,<br />கதைத் தொழில்நுட்ப உத்தி அறிவின் சித்திப்பும் சொந்தப் படைப்பாக்கத்தை மேன்மேலும் செழுமைப்படுத்தவே உதவுகின்றன என்பதையும் சொந்த அனுபவங்களின் வழி எடுத்துக் காட்டி விளக்கமளித்தேன்.// சிறந்த கருத்து.<br />அந்த மாணவி உங்கள் மொழியாக்க நூலை முன்பே படித்திருந்தால் இந்த விவாதத்திற்கு வாய்ப்பே வந்திருக்காது என்று நினைக்கிறேன். <br /><br />இந்த பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.com