துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.4.14

பொதிகை தொலைக்காட்சியில் என் உரை....

தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை அறிமுகம் செய்து நான் ஆற்றியுள்ள உரை இன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியமும்-3 15 மணி அளவில்-பொதிகை தொலைக்காட்சி இலக்கிய நயம் பகுதியில் ஒளிபரப்பாகிறது. சங்க இலக்கியம்,காப்பிய இலக்கியம் ஆகிய பகுதிகளில் வேறு சிலர் வழங்கும் உரைகளைத் தொடர்ந்து தற்கால இலக்கியம் பகுதியில் என் உரை ஒளிபரப்பாகும்.
கு அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறா’ரில் தொடங்கி ஜெயகாந்தன்,நாஞ்சில்நாடன்,ஆர் சூடாமணி,ஜெயமோகன்[சோற்றுக்கணக்கு],வாஸந்தி,சுஜாதா,காவேரி லட்சுமி கண்ணன் ஆகியோரின் எட்டுசிறுகதைகள் குறித்து சிறிய அறிமுகம் தந்திருக்கிறேன்.இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் கருத்துப்பதிவு செய்தால் அது என்னை மேலும் மேம்படுத்த உதவும்.
நவ,2013இலேயே மதுரை பொதிகையில் உரைகள் பதிவு செய்யப்பட்டு விட்டன;ஒளிபரப்பு தற்போது; இன்று ஏப்.1 முதல்...ஒவ்வொரு செவ்வாய் மதியமும் தொடர்ந்து 8 வாரங்கள்...
தமிழ்ச்சிறுகதையை அடுத்த தளத்துக்கு உயர்த்திச்சென்று படைப்பிலக்கியத்தில் சமூக உணர்வோடு அழகியலையும் இணைக்க முயன்ற இயக்கம் மணிக்கொடி இயக்கம்.அந்த இயக்கத்தின் வழி வந்த படைப்பாளிகளின் வரிசையில் தவிர்க்க இயலாத ஓர் எழுத்தாளர் கு அழகிரிசாமி.
‘ராஜா வந்திருக்கிறார்’சிறுகதையை அறிமுகம் செய்து நான் வழங்கியிருக்கும் உரை இன்று மதியம் 3 15 மணி அளவில் பொதிகை தொலைக்காட்சியில் வேறு சில இலக்கிய உரைகளைத் தொடர்ந்து - இக்கால இலக்கிய உரைத்தொடரில் ஒளிபரப்பாகிறது.கேட்டுக்கருத்துப்பதிவு செய்ய அழைக்கிறேன்....
ராஜா வந்திருக்கிறார் குறித்த என் வலைப்பதிவு
http://www.masusila.com/2012/08/2.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....