துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.9.18

பரப்புரைப் பயணம் வெல்க!





பெண்மை வெல்க என்றான் பாரதி.
மானுடத்தின் முழு வெற்றி பெண்மையின் வெற்றியிலும்தானே அடங்கியிருக்கிறது..
தொடர் சங்கிலிகளாகிக் கொண்டிருக்கும் குடும்ப, சமூக வன்முறைகளும் பச்சிளம் பிஞ்சுகளின் மீதான பாலியல் தாக்குதல்களும் செய்தித்தாள்களின் பக்கங்களை நாளும் நிரப்பியபடி பாலின சமத்துவத்தை இன்னும் கூட ஒரு தொலைதூரக்கனவாக மட்டுமே ஆக்கி வரும் இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் பலவும் கூடி  நடத்தத்திட்டமிட்டிருக்கும் ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு காலத்தின் இன்றியமையாத தேவையுமாகிறது.  
மானுடம் தழைக்கவும் மனிதம் உயரவும் இப்பேரணியை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வழிநடத்தி இதில் பங்கு கொள்ளும் அனைத்துப் பெண்களுக்கும் தோழமையோடு கூடிய அன்பு வாழ்த்துக்கள்.


அரசியலமைப்புச் சட்டப்படியும், ஜனநாயக அடிப்படையிலும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை மீட்பதையும், அன்பும்  அமைதியும் நிறைந்த  வன்முறையற்ற சமூகத்தை முன் நிறுத்துவதையும்  நோக்கமாகக்கொண்டு இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நிகழ்த்துவதே  ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் இந்தப் பரப்புரைப் பயணம் ..
 அமைதிக்கான உரையாடல் வழியே இந்தியாவை உருவாக்க முனையும்  பெண்களின் பரப்புரைப் பயணம் இந்தியாவின் ஐந்து முனைகளில் இருந்து (காஷ்மீர், டெல்லி, அசாம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து இடங்களில்) 2018 செப்டம்பர் 22ஆம் நாளில் தொடங்கி அக்டோபர் 13 வரை தொடர்ந்து தில்லியில் நிறைவுறுகிறது..  









தமிழகத்தில், பெண்கள் தலைமையில் கன்னியாகுமரியில் பரப்புரைப் பயணம் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.







திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திருமயம், புதுக்கோட்டை, பேராவூரணி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம், தாம்பரம், வழியாக செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்தடைந்து, சென்னையில் ஒரு பெரிய அரங்கக் கூட்ட நிகழ்வுக்குப் பிறகு, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர் , குடியாத்தம், வழியாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் வழியாக டெல்லி நோக்கிப் பயணிக்க உள்ளது. 

சென்னைக்கூட்டம்



அக்டோபர் 13 ஆம் தேதி அனைத்துப் பெண்களின் மாபெரும் கூட்டம் இறுதியாக தில்லியில் நிகழ்கிறது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....