துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.4.13

அழைப்பு-அறிவிப்பு

அண்மையில் ஐந்து வயதுப்பெண்குழந்தைக்கு தில்லியில் இழைக்கப்பட்ட  கொடூரமான பாலியல் வன்முறையை எதிர்த்த பீனு ராவத் [Beenu Rawat] தாக்கப்பட்ட காட்சி கீழே....
சற்றே மனச்சாட்சியும்....சமூக மாற்றத்துக்கு நம்மால் முடிந்த எதையேனும் செய்தே ஆக வேண்டும் என எண்ணுபவர்களும் இத்துடன் உள்ள மனுவில் கையொப்பமிடலாம்....
இத்துடன்....change.org தளத்திலிருந்து வந்திருக்கும் கடிதமும் கோரிக்கையும்....

We need 25,000 signatures before we deliver this petition to Home Minister, Sushilkumar Shinde.
Sign My Petition
Dear SUSILA 

I was slapped repeatedly by Assistant Commissioner of Police, B.S. Ahlawat. You might have seen this video in the news. He slapped me when I was inside the hospital demanding justice for the 5-year-old girl who was brutally raped in Delhi.
We all know that the Delhi Police grossly violated the law in this case. They delayed filing a missing complaint for the 5-year-old, tried to bribe the girl’s father and slapped me when I was protesting, while other policemen just watched.
If the police had responded promptly and responsibly, the girl could have been rescued earlier. It is time this police impunity ended. They should be made responsible for their actions.
That’s why I support Kapil’s demand telling Home Minister, Sushilkumar Shinde to dismiss and take strict action against all these errant police officers.
I have been protesting along with others on the streets of Delhi for more than five days. I am shocked by the lack of strict action against these police officers.
Together we need to ensure that immediate steps are taken to hold Delhi Police responsible for their actions. We will deliver this petition to the Home Ministry soon, but before that we need more support.
Join me and tell Home Minister, Sushilkumar Shinde, to immediately dismiss and take strict action against all the policemen who refused to file the complaint, tried to bribe and watched as the ACP slapped me.
Help us reach 25,000 signatures before we deliver this petition to Mr.Shinde. Please sign this petition and forward my mail to your friends and family asking them to join us.
Thanks for taking action,
Beenu Rawat via Change.org
--
News sources:
Zee News: Delhi rape case: ACP suspended for slapping protester:
NDTV: Women protestor at Delhi hospital slapped by senior policeman:
Deccan Herald:  Three police officers suspended:

21.4.13

’பரதேசி’-விமரிசனக்காணொளி



இந்த ஆண்டு 2013இல் நான் இதுவரை பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் நெஞ்சைப்பிழிந்து உலுக்கிப்போட்ட படம் பாலாவின் பரதேசி.


 ‘ரெட் டீ’ என்னும் நாவலின் தூண்டுதலால் இப்படம் உருவானதாக பாலா சொன்னபோதும் படம் முழுவதும்  வெளிப்படிருப்பது அவரது உழைப்பும், தனித்துவமான ஆளுமையுமே. சேது, நந்தா,பிதாமகன்,நான்கடவுள் ஆகிய தன் படங்கள் வழியே தமிழ்த் திரையை அதற்குப் பரிச்சயமில்லாத ஒரு தளத்துக்கு முன்னகர்த்திச் சென்ற பாலா ‘அவன் - இவ’னில் சற்றே சறுக்கி விட்டதில் வருத்தம் கொண்டிருந்த நான்
’’பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’’என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போது அந்த நல்ல நாளின் உதயத்தில்...
தன் ‘பரதேசி’யின் மூலம் தமிழ்த் திரைக்கு அவர் புதிய பரிமாணம் சேர்த்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.



தில்லியில் அது வெளியிடப்பட்ட முதல்நாளே அதைப்பார்த்து மனம் கசிந்து, அதில் வசனப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடனுடன் தொடர்பு கொண்டு என் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்தேன்.விரிவான விமரிசனத்தை உடன் எழுத முடியாமல் வேறு ஏதேதோ வேலைகள். நான் அதை எழுத முனைவதற்குள் பல விமரிசனங்கள் இணையத்தில் குவிந்து விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்க எண்ணி எழுதாமலிருந்து விட்டேன்.

தற்போது பாலாவின் ‘பரதேசி’ பற்றி மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களது உரையடங்கிய காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு  அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காணொளிக்கான இணைப்பு;


குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர். 

dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி, கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் மு ராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

அண்மையில் தன் திரை அனுபவங்களைத் தொகுத்து
 ‘திரை வளர்த்தநான்,நான் வளர்த்த திரை’ என்ற பெயரில் நூலாக்கியுள்ள திரு மு ரா , மிகச்சிறந்த திரை விமரிசகரும் கூட.
அவரது வழக்குஎண் 18/9 பற்றிய ஒரு விமரிசனக் காணொளியை இந்தத் தளத்தில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இணைப்புகள்;
ஏழாம் உலகமும் நான்கடவுளும்







2.4.13

தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்

தில்லி தமிழ்ச்சங்கம் ஏப்ரல் 6ஆம் நாள்[2013] மாலை வழங்கவிருக்கும் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகளுக்குரியவர்களில்  நானும் ஒருத்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.சிறுகதைத் துறைக்கான ‘அமரர் சுஜாதா விருது’ எனக்கு அளிக்கப்படவிருக்கிறது.

தில்லி தமிழ்ச்சங்கத்தாருக்கும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் மூத்த எழுத்தாளர்கள்,இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.

எழுத்துத் துறையில் முனைப்போடும்,மேலும் உற்சாகத்தோடும் இயங்க இவ்வாறான விருதுகள் புத்துணர்வு நல்கும் என்ற நம்பிக்கையோடு அதனை ஏற்கவிருக்கிறேன்.

தினமணி செய்தி-கீழே...
http://dinamani.com/edition_new_delhi/article1526394.eceபுது தில்லி,
First Published : 02 April 2013 12:59 AM IST
தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது',பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....