துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.2.11

மலேசியா வாசுதேவனின் நினைவாய்....

மிகச் சிறந்த பாடகராக மட்டுமன்றி ஒரு தேர்ந்த நடிகராகவும் விளங்கியவர் திரு மலேசியா வாசுதேவன்.
’60களின் பிற்பகுதியில் எங்கள் சிறுநகரத்துக் கோயில் விழாக்களில் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினரோடு சேர்ந்து மேடையில் பாட வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் பிரபலமடைந்திருக்கவில்லை.
இளையராஜா போன்றோர் அளித்த வாய்ப்புக்களைப் பற்றிக் கொண்டபடி மேலேறிச் சென்ற வாசுதேவனின் குறிப்பிடத்தக்க பல பாடல்களில் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இசைப்பது..
‘பூங்காற்று திரும்புமா..?’
டி.எம்.எஸ்ஸை அடுத்து சிவாஜியின் குரலுக்குப் பொருத்தமானதாக அமைந்தது மலேசியாவாசுதேவனின் குரல் மட்டுமே..
பூங்காற்றாய் நெஞ்சை வருடும் ஒலியலைகள் அமரத்துவம் அடைந்து விட்ட அந்தக்கலைஞனை என்றென்றும்....சாஸ்வதமாக்கிக்கொண்டே இருக்கும்!
மலேசியாவாசுதேவனுக்கு அஞ்சலிகள்..

17.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3) நாஞ்சிலின் ஏற்புரை

ஏற்புரை வழங்கும்
நாஞ்சில் நாடன்
.பாராட்டு விழாவுக்கே உரிய வழக்கமான சம்பிரதாயங்கள்...மாலை,சால்வை மரியாதைகள் முடிவதற்குச் சிறிது நேரமாகி விட்டபோதும் -
ஊசி குத்தும் குளிரிலும் தனது நிறைவுரைக்காக ஆவலுடன் காத்துக் கிடந்த சிறு கூட்டத்தை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி விடாமல் அரியதொரு உரையை நிகழ்த்தினார் நாஞ்சில் நாடன்.

16.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது.
தில்லித் தமிழ்ச்சங்கப் பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன்

 பிப்ரவரி பிறந்ததிலிருந்து சிறிது அடங்கத் தொடங்கியிருந்த குளிர், சிறு மழை காரணமாகச் சீறிச் சிலிர்த்தெழுததால்,விழா தொடங்கச்

14.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)


இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம்
 16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில் 

13.2.11

காதல்...கசப்பதுண்டு !


’’காதலோ...பொருளோ...வேலையோ..பதவியோ எதுவானாலும் அடைந்து முடிந்தபின் அவற்றின் கவர்ச்சி குன்றித்தான் போய்விடுகிறது....’’

9.2.11

சாபமும்,வரமும்...


’’வகுப்பறைப் பாடங்களுக்கு நடுவே வாழ்க்கைப் பாடங்களையும் சேர்த்துப் புகட்டும் தெளிவும் நல்லுணர்வும் ஆசிரியர்களுக்கு வாய்க்கட்டும்’’
’’இன்றைய அன்றைய பேராசிரியர்களை ஒப்பிட்டு

4.2.11

கதை உதிர் காலம்...!



தமிழின் சிறந்தசிறுகதைகளில் இதுவரை படிக்காமல் தவற விட்டவற்றைத் தேடித் தேடிச் சேர்த்து ஒரு நாளைக்கு ஒன்றாகக் குறைந்த பட்சம் வருடத்தில் 300 கதைகளையாவது படித்து முடிக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்தபடி கடந்த வாரம்தான் தீவிர வாசிப்பைத் துவங்கினேன்.ஐந்து வெவ்வேறு படைப்பாளிகளின் அருமையான சிறுகதைகளைப் படித்து நிமிர்வதற்குள்

3.2.11

’அறம் பாடுதல்’-ஒரு மீள்பார்வை


’’இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருப்பது உண்மைதான் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை’’

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் நிலவி வந்த ஒரு மரபு ’அறம்’பாடுதல் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....