துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.8.13

ஜி.யூ.போப்மொழிபெயர்ப்பு விருது-காணொளி




எஸ் ஆர் எம் பல்கலையில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழாவில் அறிமுகத்திற்காக உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி -  இணைப்பில் .....
http://www.youtube.com/watch?v=qAyrjg2S-Xc

23.8.13

தமிழ்ப்பேராய விருது விழா

எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருது விழா 24.8.13 சனிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் காட்டாங்கொளத்தூரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திராயன் 1,2 திட்ட இயக்குநர் ,முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விழாத் தலைமை ஏற்க,எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தா.ரா.பச்சமுத்து அவர்கள் விழாப்பேருரை ஆற்றி விருதுகளை வழங்கவிருக்கிறார்.தமிழ்ப்பேராயத்தின் துணை வேந்தர் முனைவர் பொன்னவைக்கோ வரவேற்புரை அளிக்க,தமிழ்ப்பேராயச் செயலர் கவிஞர் அபி அவர்கள் நன்றியுரை கூற ,புறநானூற்று நடன நிகழ்வோடு விழா சிறப்புற நடைபெறவிருக்கிறது.

விருது பெறுவோர்;

1.புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
‘’அறம்’’சிறுகதைத் தொகுப்பு- திரு ஜெயமோகன்

2.பாரதியார் கவிதை விருது
‘’பெருநயப்புரைத்தல்’’- திரு இலக்குமி குமாரன் ஞான திரவியம்

3.அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது
  ‘’அமேசான் காடுகளும்,சகாராபாலைவனமும் எப்படித்தோன்றின-       பெ.கருணாகரன்
   ‘’குட்டியானையும் சுட்டிகளும்-கொ.மா.கோதண்டம்
     ‘’உங்கள் சுட்டிக்குழந்தைக்குச் சுவையான குட்டிக்கதைகள்-
        கமலா கந்தசாமி

4.ஜி யூ போப் மொழிபெயர்ப்பு விருது
‘’அசடன்’’-எம்.ஏ.சுசீலா

5.பெ நா அப்புசாமி அறிவியல் தமிழ் விருது
‘’நேனோ-அடுத்த புரட்சி’’-மோகன் சுந்தரராஜன்

6.ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது
‘’இராஜராஜேச்சரம்’’-குடவாயில் பாலசுப்பிரமணியன்

7.முத்துத்தாண்டவர் தமிழிசை விருது
‘’மண்ணும் இலயமும்’’-அங்கயற்கண்ணி

8.வளர்தமிழ் விருது
‘’திணைக் கோட்பாடும் தமிழ்க்கவிதையியலும்’’-க.ஜவஹர்

9.விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது
‘’அமெரிக்காக்காரி’’-அ.முத்துலிங்கம்

10.பரிதிமாற்கலைஞர் விருது
  சிறந்த தமிழறிஞர்,மதிப்புறு தகைஞர்-கோவை ஞானி

11.பாரி வேந்தர் பைந்தமிழ் விருது
   தமிழ்ப்பேரறிஞர்,வாழ்நாள் சாதனையாளர்-தமிழண்ணல்

தமிழ் இலக்கியப்படைப்பாளிகளையும்,தமிழ் அறிஞர்களையும் பாராட்டி விருதளிக்கும் இவ்விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்க எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம் அன்புடன் அழைக்கிறது....







21.8.13

விகடனில்....

இன்றைய ஆனந்தவிகடன் இதழில் [28.8.2013]வெளியாகியிருக்கும் நேர்காணல்...

தமிழ்மகன்,

திசைஎட்டும் விருதுநிகழ்வு


18.8.2013 அன்று கடலூரில் நடைபெற்ற நல்லி - திசை எட்டும் ’’பாஷா பூஷண்’’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவில்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பரிசு பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார்.


என் மொழியாக்கத்தில் பாரதி புத்தக வெளியீடாக வந்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவல் மொழிபெயர்ப்பும் விருது பெற்றது.

3.8.13

’அசடன்’- மேலும் ஒரு விருது

தஸ்தயெவ்ஸ்கி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்....

காலத்தால் அழியாத அவரது இடியட் நாவலின் மொழியாக்கமான ‘அசடன்’ மூன்றாவதாக ஒரு விருதை வென்றிருக்கிறது. 
எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கும் மொழியாக்கத்துக்கான ஜி யூ போப் விருது ‘அசடன்’ மொழியாக்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வரை ’அசடன்’ மொழியாக்கத்துக்குக் கிடைத்துள்ள விருதுகள் மூன்றாகியிருக்கின்றன ;

1.னடா இலக்கியத் தோட்ட விருது
2.திசை எட்டும் விருது
3.ஜி யூ போப் விருது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....