துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

17.12.22

’ஊர்மிளை’ சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்

2012 மே 13 தினமணி கதிரில் வெளிவந்த என் 'ஊர்மிளை’ சிறுகதையைப் பேராசிரியரும் எழுத்தாளருமான வி காதம்பரி அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். மைஸூரிலுள்ள த்வ்ன்ய லோகாவிலிருந்து வெளிவரும் ’சரசா’[  ] இதழில் அது வெளி வந்திருக்கிறது. காதம்பரி அவர்களுக்கும், ’சரசா’ இதழுக்கும் நன்றி.

ஊர்மிளை- தமிழில்

 ’ஊர்மிளை’ சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம்

URMILA

(M.A.Susila, Dinamani Kathir, 13.5.2012) 

Translated by V.Kadambari

 

The chariot was standing in the porch of the mansion ready to leave at an hour when it had not dawned yet and darkness still lingered. Grim faced Lakshmanan was standing next to it waiting for Sita.

 

“ As he was in deep sleep,  I waited for a while for him to wake up! But he has not yet woken up…the whole of yesterday he was thoughtful and worried about something. So I  didn’t have the heart to wake him up forcefully to take leave. What is there …he had bid me farewell yesterday evening itself isn’t it? Come let’s go…” Sita chirped away as she advanced.

 

She was overcome by unalloyed joy about the freedom from the overcrowded harem to once again breath the fresh outside air.

 

Not able to converse with her normally, Lakshmanan stammers and mumbles, “ Get on to the chariot, carefully, Anni (Sister-in-law)

 

A slight rustle is heard then. Urmila comes there totally unexpected, gets on to the chariot and settles next to Sita with a very serene face as though it is already planned. Lakshmanan is slightly perturbed by this unexpected move. Even so, a slight consolation spreads on his face. He need not face the embarrassment of having to travel with Sita alone! Maybe, sensing this delicate feeling, she has joined to help him. When he lifts  his eyes to see her with gratitude, Sita is conversing with her about something. “ Oh.. Urmila? It didn’t even occur to me to bring you along with me! This Lakshmanan also didn’t think of it. Do you know how happy I am to have you with me on this journey. Let it be! You have come along for my sake or because you cannot be without Lakshmanan any more? Tell me the truth…” Smiling mischievously at her, Sita holds her hands like a merry child.

 

Urmila’s reciprocating smile is lifeless and Sita who is in a different world fails to register it.  “Atleast once must look at the flowing Ganga, the waves in it… and bathe in the chill water happily Urmila. But for the royal women like us it can only be a dream.  Because of Kaikeyi athai* (aunt) I had that good fortune. The boons she received may be in the eyes of the world a curse. But it had opened many precious avenues for me. Had we been in the palace, duties as a King would have just swallowed him. Till got caught by Ravana I relished his nearness always, and it wouldn’t have been possible otherwise.”

 

Sita who had kept the flow of conversation realises a missing beat suddenly and is embarrassed by the glances exchanged by Lakshmanan and Urmila.

 

“…. You are really very bad Lakshmana! However close you are to your brother is it right to have been separated from your wife for 14 long years? You didn’t even think of taking leave of her as we hastily made preparations to go to the forest isn’t it? How many times we have discussed it during our stay in the forest? …” She takes the liberty to scold him and turns to Urmila.

“Fourteen years…more than five thousand long days and nights…! How did you endure the separation Urmila? Whereas I was shaken by even the Asokavanam days! But people say that you slept in addition on all those days, his sleep also…! What for the gossip mongers? Only when it comes to oneself one will know the pain.”

 

“People people, people…everywhere everyone is worried only about people. I stayed away from the outside world only to escape its horrid mouth Sita…! I did not come out for any reason – good or bad. That’s why this title…” Urmila answers in dry tones .

 

“Oh leave it Urmila… you don’t detest Lakshmanan for that. Apart from the time he served his elder, his mind was occupied only with thoughts about you. The long nights during which he guarded us with the bow in hand, outside the parnasala,* (thatched living quarters) the copious  tears that rolled down from his eyes had carried fresh memories of you. Then, despite his striving to control himself his lips had mentioned only your name repeatedly. This truth had been told by Guhan who kept him company. Even the rage he felt when he cut the nose off Surpanaka was born out his love for you isn’t it?”

 

Urmila tries to divert the direction the conversation is taking. “Enough…enough…let’s talk about something else, Sita. We both have quite surprisingly come together for the first time. Why don’t you unknot from your memory your experiences connected with the scenes on the way? I will listen. There in the palace we both have no time to entertain such sharing.”

 

As if waiting only for that cue, Sita says, “the scenes and experiences we have encountered at distressing moments when recollected, do become fond caressing memories isn’t it Urmila…” She goes on to unfold the register  of memories and tells about Chitrakootam, Dandakaranyam, Ashokavanam etc.

 

Returning to Ayodya, after the fall of Ravanan, to restart life she had dreamt of travelling through those lands of her past, especially after she conceived. Without the former confusions and burdens and with the newly acquired  calmness and fulfilment she had wanted to visit those places. She had even shared her thirst for it with Rama. It would have been more memorable if he had accompanied her. Though it was not possible, her heart somewhere felt proud of the husband who remembered her craving and fulfilled it at the right time.

 

               The reckoning of her unsullied mind increases the burden in the mind of Lakshmanan. Wishing to lay to rest that burden, when he looks up at Urmila, the emptiness in her eyes and what they hide behind increase his restlessness. Her serious attention to Sita looks to him as a disturbing game.

 

          Yester night’s moments worm through his consciousness.

 

 

———————————

 

Though he had trained himself to listen to the elder brother’s words ever since he started thinking on his own, that day …that moment, Lakshmanan did not have the strength to withstand the shock given by his elder’s words. He stood like a silent sculpted rock in front of his brother, pushing inward with utmost effort, the words that tried to surface like water-balls.

 

“Do you also think that I am doing this with conviction”…Not able to sustain anymore after listening to these tear filled words of Rama, Lakshmanan bursts and splinters.

“ Those who wear the thorny crown cannot always function listening  to one’s gut feelings alone, Lakshmana. There are thousands of guidelines in thousand directions waiting for them. If only Bharathan had continued to bear this burden, I would have had a life where I would listen only to what my mind dictates.

 

Even the few words which Lakshmanan  wants  to utter in retaliation, when had dissolved in the tears of the brother, “will certainly finish your order tomorrow anna”,*( elder brother ) was all he  manages to say before quickly leaving the place to go to his harem. Urmila who understands his troubled self at the time of serving food, combs his hair with her fingers endearingly and asks,”What burden has been shifted by your brother today to your head?”

 

The question though irritated Lakshmanan and a very light anger emanated from within, he was nevertheless surprised to find her perfect reading of his mind. Along with the surprise, a  tiny speck of joy too spread! Despite leaving her within a few days of their marriage and the long absence that ensued like a moat between them, the fact that their hearts had not moved away gave him solace.

 

For a single word of the people, contrary to the dictates of his mind he was under duress to take anni to the forest to leave her there. His brother’s Kingly dharma had manacled his hands and he describes it despairingly to Urmila.

Urmila who for a second remains stupefied recovers her balance as quickly as she has lost it.

“When will your brother understand that the crown is given only to set aside unethical guidelines and to weed out the wrong kinds of justice from being practiced? “

Don’t accuse anna, Urmila.  Only when we perceive it from his position we will be able to envisage  completely what kind of crisis will come from where.”

 

“Will battle ground enemy alone be external enemy? Chasing them alone cannot be a King’s duty isn’t it? Doesn’t he have the duty of dusting age old laws and cast aside the unwanted? Alright. Let it be. I just want to know in which law book it is written that  one can be punished twice for a crime not practiced?”

 

“There is no use in discussing this further Urmila. I am at present gnawed by the worry about how to disclose it tomorrow to anni and how to face her anguish?”

“Which means you are prepared to implement your brother’s orders is it?”

“What else can be done?”

“Just asking for argument’s sake. In future supposing you have to face a similar situation…you are commanded by your brother to kill yourself by getting into Sarayu?”

    “I will certainly do it Urmila”… Urmila moves away from him releasing her hands from his grip as though she has some other work.”

 

————————————-

 

 The chariot was nearing the place where Sita would get off. The mountain ranges and hillocks surrounded the emerald green valleys dotted with palm woven huts. Crystal clear babbling streams, lotus ponds, the chirpy birds winging their freedom, deer running on their slim legs like balls. “This place is so calm and soothing to the eyes. Shall we relax a little here and then go on Lakshmana?” The irony of those words uttered by the unaware Sita pains Lakshmanan all the more…

 

He just answers, “ we will do so”.

 

Skimming the chill brook with her legs and chattering to Urmila continuously, Sita seems to have lost her sense of time even. Lakshmanan goes near them as sunset time approaches.

“ Do you see that deer brother…? Does it not look like the one which came earlier? Don’t be scared. I won’t send you behind it.”

“They need not be  caught hold with force anni. All the deer here will be roaming  around the Seer  Valmiki’s Ashram only.”

“ What…Sage Valmiki is it? Urmila, shall we go and have his Darshana?

“There is no need to go just to have Darshana anni. This is the place where you will be staying henceforth. It is anna’s wish.”

 

Without an iota of any emotion, collecting all his strength together when Lakshmanan finished saying it, he feels his entire life drained. Sita who for less than a second twitched in pain as though a venomous snake had hurt her, collects herself and looks up… “Only, if it had not happened this way I would have been surprised. Now I understand the darkness clouding his face! Do you have his permission to accompany me to show the way to the ashram?

 

Lakshmanan leads her to the sage’s ashram as though dead to the world around. Just before reaching  the entrance…

“There will be no need for your help anymore. You can take leave…” says Sita firmly and turns away.

Turning to go to the chariot with the guilt of a heinous sin weighing heavy on him he remembers Urmila suddenly and returns to take her with him. She had by then reached him.

“you don’t have to wait for me. I have decided to stay here to keep Sita company,” she says and without waiting for his reply, holds Sita’s hand in a firm grip and gets inside the ashram.

As Lakshmanan starts his journey on the chariot, the russet sun manoeuvres to hide himself behind the clouds.

 

 

***********

 

 

 

 

 

 

 

 

 

 

 

29.9.22

விஜயா வாசகர் வட்ட மொழியாக்க விருது

 விஜயா வாசகர் வட்டம் சார்பில் இவ்வாண்டு -2022, திரு கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் நினைவாகப் புதிதாக நிறுவப்பட்ட மொழியாக்க விருது எனக்கும் கன்னட த்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் திரு நல்லதம்பி அவர்களுக்கும் 28/8/2022 அன்று அளிக்கப்பட்டது. விஜயா பதிப்பக நிறுவனர் திரு வேலாயுதம் அவர்கள் ஜூன் மாதமே  இச்செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டினார். விருதை விடவும் உளப்பூர்வமான அந்தப்பாராட்டு என்னை மகிழ்வித்தது. திரு வேலாயுதம் அவர்களுக்கும் விஜயா வாசகர் வட்டத்தார்க்கும் என் நன்றி.








28.4.22

இணைய உரை- தமிழ் இலக்கியத்தில் மனித உளவியல்

28.04.2022 அன்று பூ சா கோ கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைய வழி நடத்திய ‘தமிழ் இலக்கியங்களில் உளவியல் சிந்தனைகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் மனித உளவியல்’ என்ற தலைப்பில் என் தொடக்க உரை.



 

27.4.22

பிரம்மாஸ்திரம்-மொழியாக்கச் சிறுகதை

 சொல்வனம் இணைய இதழில் வெளிவந்திருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை-ஏப்ரல் 24,2022



                                      பிரம்மாஸ்திரம்

வங்க மூலம்: ஆஷாபூர்ணாதேவி

ஆங்கில வழி தமிழாக்கம்: எம் ஏ சுசீலா

 


ப்படி ஒரு யோசனையை ரோனபிர் முன்வைக்கக்கூடும் என்று ஓஷிமா இதுவரை கனவு கூடக் கண்டதில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், ‘’அது சாத்தியமா என்ன?’’என்றாள்.

‘’ஏன் அப்படிச் சொல்றே.. , அதென்ன அப்படி நடக்கவே முடியாத ஒரு காரியமா?”

சிறிது எள்ளல் கலந்த தொனியில் எரிச்சலோடு சொன்னான் ரோனபிர்.

‘’ஒருவேளை இதை செஞ்சா புத்தியில்லாத முட்டாள் மாதிரி வெட்கப்பட்டுக் கூசிக்குறுகிப் போக வேண்டியிருக்கும்னு நினைக்கிறியோ?’’

’’அதுக்காக இல்லை, இது ஒண்ணும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையே. ஆனா, எத்தனையோ நாளா சந்திக்கவே இல்லை, எந்த வகையான தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது திடீர்னு இப்படி ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டுப் போனா…’’

தன் குரலைக் கசப்புணர்ச்சியால் நிறைத்து வைத்திருந்த ரோனபிர் அவள் சொன்னதைக்கேட்டு பலமாகச் சிரித்தான்.
‘’பின்னே? புருஷனோடயும்,குழந்தைகளோடயும் வாழ்ந்துக்கிட்டிருக்கிற கல்யாணமான ஒரு பொண்ணு, தன்னோட காதலனை தினம் தினமா இப்படி ஒரு கோரிக்கையோட சந்திச்சுக்கிட்டிருப்பா? நீயே சொல்லேன்’’

‘’நிறுத்துங்க. இப்படி அநாகரிகமா பேசாதீங்க’’


’‘இதுக்கு முன்னாலே நான் ரொம்ப ரொம்ப நாகரிகமான ஒரு மனுஷனாத்தான் பேசிக்கிட்டிருந்தேன், ஆனா நீ அதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாம இருந்ததுதான் எனக்கு எரிச்சல் மூட்டிடிச்சு. இத பாரு…ஏன் அது சாத்தியமில்லைன்னு சொல்றே? அப்படி என்ன இருக்கு அதிலே? சின்னவங்களா இருக்கும்போது ’அப்படி இப்படி ஏதாச்சும் ஒரு விஷயம்’ நடந்திருக்கலாமில்லே, ஆனா, எத்தனை வருஷமானாலும் மனுஷங்களாலே அதை அத்தனை சுலபமா மறந்திட முடியறதில்லை. அதையெல்லாம் அப்படி மறந்திடத்தான் முடியுமா என்ன? வாலிப வயசிலே கோஷல் சாஹிப் உன்னைக் காதலோட பார்த்திருக்கார்.அதனாலே இப்ப நீ கேக்கற உதவியைக் கட்டாயம் செய்வார், சொல்லப்போனா ரொம்பசந்தோஷமாவே செய்வார்’’

ஓஷிமா அவன் பக்கம் திரும்பி சற்றுக்கோபமாகவே சொன்னாள்.

‘’ நீங்க ‘அப்படி இப்படி ஏதோ ஒரு விஷயம்’ , சின்ன வயசிலேன்னு இன்னிக்கு என்னென்னெவோ புதுசு புதுசா சொல்றீங்க. உங்க மனசிலே நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னும் எனக்குப் புரியுது . ஆனா, எது எப்படி இருந்தாலும்..ஒரு வேளை அந்த மனுஷனுக்கே கூட அதிலே சந்தோஷம் இருந்தாலும் நான் எப்படி அதிலே சந்தோஷப்பட முடியும்னு நினைக்கிறீங்க? என்னோட நெலைமையைப் பத்தி எப்பவாவது யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா?”

அவள் சொன்னதைக்கேட்டு ஆச்சரியமடைந்தவனைப் போலக் காட்டிக்கொண்ட ரோனபிர்,

’’இதிலே அவ்வளவு யோசிக்க என்ன இருக்கு, இப்போதைக்கு..இந்த சமயத்திலே அந்த மனுஷன் கையிலே நிறைய அதிகாரம் இருக்கு. நீ எப்பவும் சொல்லுவியே ‘கடவுளோட கருணை’ ன்னு,அந்த மாதிரி ஏதோ ஒண்ணு அவன் கிட்ட இருக்கு. அதனாலே அவன் மட்டும் நினைச்சா எனக்கு ரொம்ப சுலபமா ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்திடலாம். அவனைப் போய்ப் பார்த்துக் கேட்டாதான் அது நடக்கும். அதை அவன் கிட்டே போய்க் கேக்கறதிலே உன்னோட கௌரவம் அப்படி என்ன பெரிசாய்ப் பாழாப்போயிடும்னு எனக்குத் தெரியலை. அதுதான் என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை”

’’உங்களைப் புரிஞ்சிக்க வைக்கிறது இன்னும் கஷ்டம் எனக்கு” என்றபடி மேஜை மேலிருந்த சாமான்களைத் தேவையில்லாமல் இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தாள் ஓஷிமா.

ரோனபிரின் தாடைச் சதை இறுகியது, புருவம் முடிச்சிட்டுக் கொண்டது, நெற்றியில் கோடுகள்..
‘’சொந்தப்பெண்டாட்டியை ஒரு மனுஷன் இந்த அளவுக்குத் தாஜா பண்ண வேண்டியிருக்குன்னா..அப்றம் அவனோட வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை”

“என்னது தாஜாவா? நீங்க என்ன என்னை இப்பத் தாஜாவா பண்ணிக்கிட்டிருக்கீங்க?”

ஓஷிமாவின் முகத்தில் சிவப்பேறியது.

“பின்னே என்னவாம்” என்று எரிச்சலும் கேலியும் கலந்த குரலில் சொன்னான் ரோனபிர்.

“இத்தனை நேரம் நான் செஞ்சுக்கிட்டிருந்ததெல்லாம் தாஜா ( நம்ம பாஷையிலே ஹாஷாமோட்) இல்லாம வேற என்னவாம்? என்னவோ யார் வீட்டிலேயோ போய்த் தீயை வச்சுட்டு வான்னு நான் உன்கிட்டே சொன்ன மாதிரியில்லை நீ நடந்துக்கறே? சொல்லப்போனா, இது ஒரு பெரிய விஷயமே இல்லை. கோஷால் சாஹிபுக்கும் உனக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப காலமாவே தெரியும். அதனாலே நீ சுலபமாக் கேட்டுப் பார்த்திட முடியும். அதுக்குத்தான் நான் ரொம்ப நேரமா இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”

‘சுலபம்’! ஓஷிமாவின் முகத்தில் ஒரு மெல்லிய, மிக மெல்லிய புன்னகை அரும்பியது.
‘எத்தனை சுலபம்!’

பதினோரு வருடங்கள் எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் இருந்தபிறகு இப்போது தேவப்ரத்தின் (கோஷால் சாஹிப்) வீட்டுக்கு அவளாகவே வலியச் செல்ல வேண்டும்,வேலையில்லாமல் இருக்கும் தன் கணவனுக்கு வேலை கேட்க வேண்டும்…ஆஹா,அதுதான் எத்தனை சுலபம்? ரோனபிரின் உறவுக்காரர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு எளிய காரியமாகத் தோன்றலாம். ஒருவேளை அவர்கள் அப்படி ஒரு கணக்கைப் போட்டிருக்கலாம். ஒரு காலத்தில் ஓஷிமாவுடன் கூடப் படித்தவன், இரண்டுபேருக்கும் இடையே ஓரளவு நெருக்கம் இருந்தது என்பதும் ரோனபிருக்குத் தெரியும். அந்தப் பள்ளித் தோழன் இப்போது தன் திறமையால் உயர்ந்து அதிருஷ்ட தேவதையைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறான். அந்தச் செய்தியையும் கூட ரோனபிர்தான் எங்கிருந்தோ தெரிந்து கொண்டு வீட்டில் வந்து ஓஷிமாவிடம் சொன்னான். கோஷால் அண்ட் கம்பெனியில் செல்வ வளம் கொழிப்பதைப்பற்றி எந்தத் தகவலைக் கேள்விப்பட்டாலும் அவன் உடனே ஓடி வந்து ஓஷிமாவிடம் அதைப் பற்றிச் சொல்லி விடுவான்.

ஓஷிமா ஒருபோதும் அதில் ஆர்வம் காட்டியதே இல்லை. அவள் எப்போதும் எரிச்சலைத்தான் வெளிப்படுத்துவாள்.


’‘அந்த கம்பெனி பிரமாதமாக் கொழிக்குதுன்னா கொழிச்சிட்டுப்போகட்டும். அதுக்கும் எனக்கும் என்ன வந்தது’’

ரோனபிர் கண்களைச் சுருக்கிக்கொண்டு முகம் முழுக்க சிரிப்போடு இப்படி பதில் தருவான்.
’’அதென்ன அப்படி சொல்லிட்டே? ஒரு காலத்திலே உங்களோட உறவு இனிமையாத்தானே இருந்தது? அவன் இப்ப சக்தி படைச்சவனா.. ரொம்பப் பெரிய ஆளாயிட்டான்னு கேள்விப்பட்டா உனக்கு சந்தோஷமா இருக்குமில்லையா, அதனாலேதான் அதைப்பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன்’’

அது எப்பொழுதோ அவன் சொன்னது, அது கூடப்போய்த் தொலையட்டும். ஆனால் இப்போது ரோனபிர் முன்வைத்திருக்கும் வேண்டுகோள் கொஞ்சம் கூட அறிவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தது. தேவப்ரத் இப்போது ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பங்குதாரராகி விட்டதால் அவன் நினைத்தால் ரோனபிருக்கு ஒரு வேலை தர முடியும்,அதனால் அவனிடம் சென்று குழந்தைகளும் தாங்களும் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதால் தன் கணவருக்கு ஒரு வேலை தருமாறு அவள் பணிவோடு கேட்டுக்கொள்ள வேண்டுமாம்.

சீச்சீ..!

ஓஷிமா பதட்டமில்லாத குரலில் இப்படிச்சொன்னாள்.

’’எது சுலபம்,எது கஷ்டம்ங்கிறதிலே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான அபிப்பிராயம் இருக்கும். அதிருக்கட்டும், இப்ப இதுக்கு பதில் சொல்லுங்க. தினமும் அவருக்குக் கீழ்ப்படிஞ்சு வணக்கம் வச்சுக்கிட்டு உங்களாலே வேலை பார்க்க முடியுமா?’’

’’அதென்ன அத்தனை பெரிய விஷயமா? அது என்னாலே முடியுமான்னு வேற கேக்கறே..ஹ்ம்ம்..’’ என்றபடி தன் முகத்தை ஆந்தை போலக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டபடி தொடர்ந்து பேசினான் ரோனபிர்.

‘’பிச்சைக்காரனுக்கு மரியாதை வேற வேணுமா என்ன? அப்படிச் செய்ய முடியாததுன்னு அதிலே என்ன இருக்கு? அவனோட நான் என்ன ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கா போகப்போறேன்? அவனுக்கு நான் யாருன்னு கூடத் தெரியப்போறதில்லை. நான் உன்னை இப்ப அவன் கிட்ட போகச் சொல்றேன், நீயும் யாருக்கும் தெரியாம ரகசியமா அவனைப் போய்ப் பார்க்கப்போறே. நான் பாட்டுக்கு வழக்கமான விதிகளை ஒட்டி வேலைக்கு ஒரு மனுவைப் போடுவேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் என்னோட பேரையும் அட்ரஸையும் அவன் கிட்ட குடுத்திட்டு அதைக்கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சுக்கங்கன்னு சொல்றதுதான். அவ்வளவோட சரி! ஒரு குள்ளநரி இன்னொரு நரிக்குத் தந்திரமா செய்யற உதவி. அந்த வேலை மட்டும் முடிஞ்சதுன்னா..,யாரு என்னன்னு யாருக்குத் தெரியும்? கம்பெனியிலேயே ஒசந்த எடத்திலே அவன் இருப்பான், நானோ ஒரு அற்பமான மீனைப்போல அங்கே இருக்கப்போறேன், எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகுது?‘’

அவன் இதை உண்மையிலேயே தீவிரமாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும்

’‘அவனுக்கு என்னை ஒருவேளை அடையாளம் தெரியலைன்னா..’’ என்று கேட்டாள் ஓஷிமா. ’’பணக்கார மனுஷங்க தங்களோட ஏழை நண்பர்களை மறந்து போறது இயற்கைதானே? ஒருக்கால் அவனுக்கு என்னை யாருன்னே கூடத் தெரியாம இருந்திடலாம்’’

ரோனபிர் ஒரு கபடப்புன்னகை செய்தான்.

’’இதோ பாரு, சும்மா வறட்டு வாதம் பண்ணிக்கிட்டிருக்காதே. அவனுக்கு உன்னை நல்லாத் தெரியும்கிறது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். உன்னை ஒருதரம் பார்த்தவங்க கூட உன்னை எப்பவுமே மறக்க முடியாதே?’

மீண்டும் ஒருமுறை ஓஷிமாவின் முகம் சிவந்தது. ஆனாலும் அவள் பதட்டப்படாமல் அமைதியாகவே பேசினாள்.

’’சரி, அவனுக்கு என்னைஅடையாளம் தெரியுதுன்னே வச்சுக்கிட்டாலும் நம்ம கேக்கிறதை அவன் ஏத்துப்பான் அப்படீங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்? அப்ப என் மூஞ்சியை நான் எங்கே கொண்டுபோய் வச்சுக்கறது?’’

‘’என்னது ஒத்துக்குவான் அப்படீங்கிறதுக்கு என்ன உத்தரவாதமா?’ ரோனபிரின் கபடப்புன்னகை இன்னும் சற்றுக் கூடுதலாயிற்று.

’’அதெல்லாம் நிச்சயம் ஒத்துக்குவான், அது எனக்குத் தெரியும்’’

ஓஷிமாவின் முகம் முழுவதும் சட்டென்று தழல் போல் சிவந்தது. அதற்கு மேலும் தன் குரலின் பதட்டத்தை அவளால்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

’’உங்களுக்கு அந்த அளவு தெரியும்னா என்னை அங்கே எப்படித் துணிஞ்சு அனுப்பறீங்க’’

’’ஐயோ..கடவுளே, அது சும்மா ஒரு வேடிக்கைக்காக சொன்னேன்னு கூடவா உனக்குப் புரியாது?’’

மறுபடியும் ஒரு முறை வாய் விட்டுச்சிரித்தான் ரோனபிர்.

’’இதோ பாரு, உனக்கு என்னைப் பத்தித்தெரியாதா, என்னோட பலமே நீதான், எனக்கு தைரியம் கொடுக்கிறதே நீதான். நான் ஏதோ வேடிக்கையாப் பேசினதை இப்ப விட்டுத்தள்ளு. நீங்க பழைய காலத்து நண்பர்கள்ங்கிறதாலே கோஷால்சாஹிப் மறுத்துச் சொல்ல மாட்டார்னு நான் உறுதியா நினைக்கிறேன். ஒருவேளை அந்த இடத்திலே நான் இருந்தா..அதை நிச்சயம் மறுக்க மாட்டேன்’’

’’சரி.நல்லது. உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படிப் புரிஞ்சுக்கங்க. இப்ப என்னை விட்டுடுங்க, என்னாலே இதைச் செய்யமுடியாது’’

’’என்னது,முடியாதா? இவ்வளவு நேரம் நான் எடுத்துச் சொன்னப்புறமும் இப்படி வெட்டொண்ணு துண்டு ரெண்டா மாட்டேங்கிறியே?’’

’’அப்படிச் சொல்லறதைத் தவிர என்னாலே வேற என்ன பண்ணமுடியும்.? அதுவும் என்னாலே செய்ய முடியாத ஒண்ணை..’’


’’ஏன் உன்னாலே அது முடியாது?’’ என்றபடி கோபத்தோடு அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அவன்.

’’உன்னோட கௌரவம் பாழாப் போயிடும்னு நினைக்கிறே அப்படித்தானே? ஹ்ம்…கௌரவம் ! இன்னும்கூட அப்படி இங்கே ஏதாவது மிச்சம் இருக்கா? நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுதா இல்லியா? நம்ம வீடு எப்படி இருக்கு, குழந்தைங்க நெலைமை எந்த மாதிரி இருக்குங்கிறதெல்லாம் உன் கண்ணிலே படுதா இல்லியா?’’

ஓஷிமா தன்னைச் சுற்றிலும் ஒரு முறை இலக்கின்றி வெறித்துப் பார்த்தாள். வீட்டு நிலவரம்,குழந்தைகள் படும் பாடு இதையெல்லாம் சுற்று முற்றும் பார்த்துத்தானா அவள் விளங்கிக்கொள்ள வேண்டும்? சிறிது காலமாகவே ஓட்டாண்டியாய்ப் போயிருக்கும் குடும்பம், சம்பாதிக்கும் ஒரே மனிதனோ பதினேழு மாதங்களாய் வேலை இல்லாமல்! வீட்டை நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அவளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

ஆனாலும் கூட ஓஷிமா தன்னைச் சுற்றி வெறித்த பார்வையை செலுத்தினாள்.பிறகு அதே வெறித்த பார்வையுடன் கணவனின் பக்கம் திரும்பி

’’எனக்கென்ன அதெல்லாம் தெரியாதா?” என்றாள்.

’’உனக்கு அதெல்லாம் தெரிஞ்சதுக்கான எந்த அடையாளமுமே இல்லியே? நீ உன்னோட சொந்த கௌரவத்தைப் பத்தி மட்டும்தான் நினைக்கிறியே தவிர குழந்தைங்களோட வாழ்க்கையைப் பத்தி எங்கே நினைக்கிறே? நீயே சொல்லு, இந்த வீட்டிலே பால் வாங்கி எத்தனை நாளாச்சு, எத்தனை நாள்?’’


‘ஐயோ நிறுத்துங்க’’

பெண்மனம்தானே..., கட்டாயம் இதற்கு வளைந்து கொடுத்து இளகிவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த ரோனபிர் ‘நிறுத்துங்க’ என்று ஓஷிமா கத்தியதைக்கேட்டதும் தன் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்தான்.’சரி,வேறு வகையில்தான் இதைக்கையாள வேண்டும் ’ என்று நினைத்துக்கொண்டான்.

ரோனபிரின் முகம் இப்போது அஷ்டகோணலாகச் சுருங்கியது. அதில் கலவையான வெவ்வேறு உணர்ச்சிகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.


‘’ஹ்ம்…இப்ப நீ இப்படி திட்டறதை வேற நான் வாங்கிக்கிட்டாகணும். வேலையில்லாம இருக்கற மனுஷனுக்கு மரியாதையாவது,கௌரவமாவது? சரி, போ..நான் போய்ப் பிச்சையெடுக்கிறேன், புருஷன் நடைபாதையிலே பிச்சையெடுத்துக்கிட்டிருக்க, பசியாலே இரண்டு பிள்ளைங்களும் ஒண்ணு பின்னாலே ஒண்ணு செத்துப் போகப்போகுது, ஆனா,அதைப்பத்தி எல்லாம் என்ன கவலை? மஹாராணியோட மதிப்பு முனை முறியாம அப்படியே இருக்கு இல்லியா, அதுதானே எல்லாத்தையும் விட முக்கியம்”

இப்போது ரோனபிர் அவளுக்கு மரண அடி கொடுத்திருந்தான். அவள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்தபடி ஓரக்கண்ணால் அவள் முகத்தைப் பார்த்தான். தன் பேச்சுக்கு அவள் எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறாள் என்பதைப்பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவன். ஆனால் அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கோபம்,அவமானம்,வருத்தம், செருக்கு என்று எந்த வகையான உணர்ச்சியும் அவள் முகத்தில் வெளிப்படவில்லை. அது கல்லாய் இறுகிப் போயிருந்தது. அந்த முகம் வெளிறிப்போகவும் இல்லை, இரத்தச் சிவப்பாய் மாறவும் இல்லை. அது இருண்டுபோகவும் இல்லை, கவலைக்குறி காட்டவும் இல்லை.. உயிரற்ற ஒன்றைப்போல அது இறுகிக் கிடந்தது!

’’சரி, நான் போறேன்” என்று மட்டும் சட்டென்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியே சென்றாள் அவள்.

அவ்வளவுதான், விஷயம் முடிந்தது. இனிமேல் கவலைப்பட வேண்டியதில்லை. ஓஷிமா அதை ஒத்துக்கொண்டு விட்டதால் தன் முடிவில் இனிமேல் தடுமாற மாட்டாள். அவள் போன காரியம் முடிந்தது போலத்தான் என்பது ரோனபிருக்கு உறுதியாகத் தெரியும்.

தங்கள் பழைய நட்பை அடிப்படையாக வைத்து,அவள் கோஷால் சாஹிபிடம் சென்று தன் கணவனுக்கு வேலை கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை அவன் முதலில் வைத்தபோது அவள் கண்கள் அனல் கக்கியதை அவன் பார்க்கத் தவறவில்லை.அந்த அனலுக்கான உண்மையான காரணம் அவனுக்குப் புரியாமலும் இல்லை. ரோனபிர் ஒன்றும் அந்த அளவுக்கு ஒரு முட்டாள் இல்லை.

இன்று இப்படி ஒரு நிலையில் அவன் இருக்கக் காரணம் விதியிட்ட கட்டளை மட்டுமே தவிர வேறேதும் இல்லை. மற்றபடி சொல்லப்போனால் படிப்பில் கோஷாலை விட எந்த வகையிலும் விட ரோனபிரும் குறைந்தவன் இல்லை. கோஷாலும் கூட ஒரு சாதாரணப்பட்டதாரி மட்டும்தான். விதி! நெற்றியில் எழுதி வைக்கப்பட்ட விதி! எங்கோ ஓரமாக நின்று பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டபடி சோம்பேறிகளும் கையாலாகாதவர்களும் தங்களைத் தேற்றிக்கொள்வது போல் அவனும் அப்படித் தன்னைத் தேற்றிக்கொண்டான். முயற்சியோ உழைப்போ அறிவுத்திறமையோ எதுவுமே காரணமில்லை ! விதி ஒன்றுதான் காரணம் என்று நினைத்து ஆறுதல்படுத்திக் கொள்வதைத் தவிர அவனால் வேறென்ன செய்ய முடியும்?

சரி, வேறொரு சமயம் அவன் அவளைக் கொஞ்சம் சமாதானப்படுத்தி விட வேண்டும், அவளிடம் இன்னும் சற்று விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவள் தன்னைத் தேடி வந்து உதவி கேட்பது கோஷால் சாஹிபுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதையும் அவளிடம் சொல்ல வேண்டும். ஆண்களின் குணத்தைப்பற்றி ரோனபிருக்குத் தெரியாதா என்ன?               

                      **************************************

தினசரி வாழ்க்கை பொறுக்க முடியாத அவலத்துடன்தான் இருந்தது, பலசரக்குகள் இல்லாமல் சமையலறை வெறிச்சோடிக்கிடந்தது. இரவும் பகலும் ‘இல்லை..இல்லை’ என்ற குரலே அவர்கள் உலகத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனாலும் கூடப் பூட்டி வைத்திருந்த அவர்களின் பெட்டிகளுக்குள் நல்ல துணிமணிகள் இல்லாமல் போய்விடவில்லை. ஆபரணங்களும் அவை போன்ற மற்றவைகளும் குடும்பத்தேவைக்காக ஆரம்பத்திலேயே பயன்படுத்தப்பட்டு அவர்களை விட்டு எப்போதோ விடைபெற்றுப் போயிருந்தன. ஆனால் புடவை, துணிமணிகள் இவையெல்லாம் மட்டும் வீட்டில் தங்கிப் போயிருந்ததால் வெளி இடங்களுக்குச் செல்லும்போது சற்று நல்ல விதமாக உடுத்திக்கொண்டு போக முடிந்தது.

ஓஷிமாவும் அன்று மிக நன்றாக உடுத்திக்கொண்டு வெளியே சென்றாள். வீடு திரும்பியதும் தன் கையிலிருந்த டம்பப் பையைப் படுக்கை மீது வீசி எறிந்து விட்டு அங்கேயே ஒரு பக்கம் அமர்ந்து கொண்டாள். தான் உடுத்திக்கொண்டிருந்த பட்டுப்புடவையைக் கழற்றிப்போட வேண்டும் என்ற ஞாபகம் கூட அவளிடம் இல்லை.

ரோனபிர் ஜன்னலின் அருகே ஒரு பிரம்பு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளை அனுப்பி வைத்தது முதல் எதிர்பார்ப்பு, கவலை, கூச்சம், சுய பச்சாதாபம் போன்ற பல உணர்வுகளும் அவனை சுமையாக அழுத்திக் கொண்டிருந்தன.

திரும்பி வந்திருந்த ஓஷிமாவோ வார்த்தைகள் அற்ற கனத்த மௌனத் திரையால் தன்னைப் போர்த்தி வைத்திருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்தும் துணிவு அவனிடம் இல்லை.

அவள் கிளம்பிப் போனபின் அவன் தன்னைத்தானே நியாயப்படுத்திக்கொள்வதற்குச் சாதகமான வாதங்களைத் தன் மனதுக்குள் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தான். அவன் என்ன எப்போதுமா இப்படி இருந்திருக்கிறான்? இதனால் அவனது சுயகௌரவம் குறைந்து விட்டதா என்ன? இந்த நிலைமையில் அவன் வேறென்னதான் செய்ய முடியும்? பற்றாக்குறை என்பது மனிதர்களின் மொத்த ஆளுமையையுமே அல்லவா சிதைத்துப் போட்டுவிடுகிறது?

ஓஷிமா தானாகவே ஏதாவது சொல்லக்கூடுமோ என்ற எதிர்பார்ப்பில் ரோனபிர் ஓரிரு நிமிடங்கள் காத்துக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் போவது ஒரு மணி நேரமாகத் தோன்றியது. இப்படிப்பட்ட அமைதியை அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள அவனால்முடியவில்லை. அதனால் சில நிமிடங்களுக்குப் பிறகு தன் நாற்காலியை லேசாக நகர்த்திக்கொண்டு நேரடியாகவே பேச்சைத் தொடங்கி விட்டான் அவன்.
’’என்ன…? உன்னோட சந்தேகமெல்லாம் நிஜமாயிடுச்சாக்கும்? உன்னோட பணக்கார நண்பனாலே உன்னை யாருன்னு தெரிஞ்சுக்க முடியலியா”

ஓஷிமா எழுந்து நின்றாள். அவளது உதட்டோரத்தில் ஒரு கேலிப்புன்னகை நெளிந்தது.
’’என்னது? என்னை யாருன்னு தெரிஞ்சுக்க அவனாலே முடியலியான்னா கேக்கறீங்க? என்னைத்தான் ஒருதரம் யார் பார்த்திருந்தாலும் ஜன்மத்துக்கும் மறந்திட முடியாதே?”

ரோனபிர் ஓஷிமாவைத் தலைமுதல்கால் வரை ஒரு முறை நன்றாகப்பார்த்தான். இந்தத் தோற்றம் ஒன்றும் அவனுக்குப் புதியதில்லை, ஆனால் கிட்டத்தட்ட அவன் மறந்து போயிருந்த தோற்றம் அது. அவளது முகத்தைக் கடைசியாக இப்படிப்பட்ட ஒப்பனைகளோடு மிருதுவாய்…பளபளப்பாய்ப் பார்த்து எத்தனை நாள் ஆகியிருக்கும்? அவளது உருவத்தை இப்படிப் பட்டுப் புடவையில் பார்த்துமே எவ்வளவு காலம் ஆகியிருக்கும்?

இப்போது அப்படி அவளைப்பார்ப்பது ரோனபிருக்கு சந்தோஷமாகவா இருந்தது? அப்படி சந்தோஷமாக இருந்தால் அவன் கண்கள் எரிச்சல் எடுப்பானேன்?

நான்கைந்து நாட்களாய் சவரம் செய்யப்படாமல் இருந்த தன் கன்னத்தை ஏதோ ஞாபகத்தோடு கையால் தடவிக்கொண்டே சிறிது கஷ்டப்பட்டுப் புன்னகை செய்தபடி ரோனபிர் பேசத்தொடங்கினான்.
“சரிதான், என்னோட அஸ்திரத்தாலேயே என்னைக் கொல்லறியா? அதிருக்கட்டும், நீ போன காரியம் என்ன ஆச்சு? ஏன் இப்படி முகத்தை வச்சுக்கிட்டிருக்கே?’’

“வேறென்ன செய்யறது நான்?“ என்றபோது அவள் உதடு வெறுப்பில் சுளித்தது.

“இருநூத்தி எழுபத்தஞ்சு ரூபாய் சம்பளத்துக்கு ஒரு வேலை கிடைச்சதுக்கு முகத்தை இரண்டு மடங்கு பூரிப்பாவா வச்சுக்க முடியும்? நிச்சயமா என்னாலே அது முடியாது”

இருநூற்று எழுபத்தைந்து ரூபாய்! இருநூற்று எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கும் ஒரு வேலை!

ரோனபிருக்குத் தன் பழைய வேலையில் கிடைத்ததை விடக் கூடுதல் தொகை இது. இதுவரை தன் முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வரப் பாடுபட்டுக் கொண்டிருந்த அவன், இப்போது அதை அடக்கிக்கொள்வதைக் கடினமாக உணர்ந்தான்.

“அப்படியா..? நீ சொல்றது நெஜம்தானா…இல்லே சும்மா வேடிக்கைக்கு ஜோக் பண்றியா?”

“ஜோக் பண்ணணும்னு எனக்கென்ன தேவையா?”

ரோனபிரின் முகத்திலும் கண்ணிலும் பேராசையும் பரவசமும் பொங்கி வழிந்தது. ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்பதை விடவும் சந்தோஷமான வேறு விஷயம் உண்டா என்ன? சம்பளத்தொகை பேராசையைக் கிளர்த்தப் போதுமானதாக இருந்தது. ஆமாம்..அது நிஜம்தான், அது உண்மைதான். எப்படியோ இன்னும் கூட ஓஷிமாவுக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்துகொண்டிருப்பதும் நிஜம்தான்.

ரோனபிர் தன் கண்களோடு சேர்ந்து உடம்பும் எரிந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான். ஏதோ…அந்த விஷயம் நடக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்ததைப்போல..! அது நடக்காமல் போயிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்போமோ என்று எண்ணுவதைப்போல.

அதிகபட்சம் மோசமாய்ப் போனால் இன்னும் சிறிது காலத்துக்கு வீட்டில் பால் இருந்திருக்காது, அவர்களின் குழந்தைகளான குக்கூ, கோகா ஆகிய இரண்டு பேரின் மார்பெலும்புகளும் இன்னும் கூட அதிகமாகத் துருத்திக் கொண்டிருக்கக்கூடும்….., அதற்கு மேல் இன்னும் மோசமாய்ப்போனால்…

ஆமாம், அப்படிப் பல விஷயங்கள் நடந்திருக்கும்தான். ஆனாலும் அவையெல்லாம் ரோனபிரை இந்த அளவுக்கு சிறுமைப்படுத்தி இருக்காது. ஓஷிமாவை வேலை கேட்டுப் போகுமாறு அவன் தூண்டியதற்கான அடிப்படைக்காரணம் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையால் அல்ல, அந்த முயற்சி பலித்து விடக்கூடாது என்ற விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும்தான்.

எப்படியோ அவன் இப்போது அதைப்பற்றிப் பேசியே ஆக வேண்டும்.அந்த விஷயத்தை சாதிப்பதற்கு ஓஷிமா எந்த அளவுக்குத் தீனி போட வேண்டியிருந்தது என்பதை அவன் கண்டுபிடித்தாக வேண்டும். அதைத் தெரிந்து கொண்டால் ஒரு வேளை அவனுக்கு ஆறுதல் கிடைக்கலாம்.

’’அப்படீன்னா..நீ அவனை நேராவே பார்த்திட்டே,அப்படித்தானே”

“அப்படிப்பாக்கலைன்னா இத்தனை சீக்கிரம் எப்படி என்னாலே திரும்பி வந்திருக்க முடியும்”

“என்ன இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் பழைய நண்பர்கள் இல்லியா? இன்னும் கூட அதிக நேரம் அவன் உன்னைப் பிடிச்சு வச்சுக்குவான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இத்தனை சீக்கிரம் போக விட்டுடுவான்னு நினைக்கலை”

இருண்டு கிடந்த ரோனபிரின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஓஷிமா

“அப்படி ஒரு எண்ணம் வந்தா அது ரொம்ப இயற்கையானதுதான்…,வேலை வெட்டி இல்லாத சோம்பேறித்தனமான மனசு பிசாசோட கூடாரம்னு ஒரு சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே” என்று தெளிவான குரலில் வெடுக்கென்று சொன்னாள்.

தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு சட்டென்று எழுந்திருந்த ரோனபிர்,

“ஏன் இப்படி எப்ப பார்த்தாலும் வார்த்தைகளோடயே விளையாடிக்கிட்டிருக்கே, என்னதான் நடந்ததுன்னு என் கிட்டே நேரடியா சொல்ல முடியாதா உன்னாலே”

இப்படி அவன் திட்டிய பிறகும் ஓஷிமா மசிவதாய் இல்லை. அவன் பேச்சைக்கேட்டு அவள் நடுங்கவும் இல்லை.

“என்ன நடந்ததுன்னு சொல்றது அத்தனை முக்கியமா என்ன? நான் போனேன், அவன் கிட்டே விஷயத்தை சொன்னேன், காரியம் முடிஞ்சது. அவ்வளவுதான். அவனுக்கும் சந்தோஷம். வேலைக்கான உத்தரவையும் என் கிட்டே போட்டுக் கொடுத்திட்டான். நாளையிலே இருந்து வேலைக்குப் போகணும்”

’’என்ன அதுக்குள்ளேயே வேலைக்கான உத்தரவுமா? நாளைக்கேவா போகணும்?”

கடைசியாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்த இப்போது ரோனபிருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.


“முதலிலே வேலை என்ன…, அதோட விவரங்கள் என்ன அப்படீன்னு எதுவுமே எனக்குத் தெரியாது. அது எனக்குப் பொருத்தமானதா இருக்குமாங்கறதையும் நான் இன்னும் தெரிஞ்சுக்கலை, அதுக்குள்ளே வேலைக்கான உத்தரவா? ஒருவேளை நாளைக்கு நான் போகாம இருந்திட்டா..”

சட்டென்று ஓஷிமா பலமாகச் சிரித்தாள். இந்த வீட்டுக்குள் பல நாட்களாகக் கேட்டிராத சிரிப்பு அது. வீட்டுச் சுவர்களில்…மேற்கூரையில் என்று எல்லா இடங்களிலும் வாத்தியத்தின் இசை போல மோதி எதிரொலித்த சிரிப்பு அது

’’நீங்க எதுக்கு போகணும்? நான் தனியாவே போயிடுவேனே? ஆஃபீஸ் தர்மதலாவிலேதான் இருக்கு. அங்கே போறதுக்கு வழி தெரியாமலும் இல்லை எனக்கு”

“ஓ..அப்படீன்னா, அந்த வேலை உனக்குத்தான் கிடைச்சிருக்கா?”

’’பின்னே? கடைசி கடைசியா நீங்க இதுக்கு ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலே நான் உங்களைப்பத்தியே எதுவும் சொல்லாம என்னைப் பத்தி மட்டுமே சொன்னேன். அதிலே என்ன தப்பு? நான் பட்டம் வாங்கலைதான், ஆனாலும் கடைசி வருஷம் வரைக்கும் படிச்சிருக்கேனே, அது நிஜம்தானே? சும்மா வீட்டிலே உட்கார்ந்துக்கிட்டு யாரோ சம்பாதிச்சுப் போடற பணத்தில் வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்கறது எனக்கு சலிச்சுப் போச்சு, எனக்கு ஒரு வேலை தருவியான்னு கேட்டேன். ‘இதோ இப்பவே ..இந்த நிமிஷமே…சந்தோஷமாத் தரேன்’னு அவனும் தந்திட்டான்.”

அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அவனது இருண்ட முகம்…தொடர்ந்து எரிந்து சாம்பலாவதைப் பார்த்த பிறகும் ஓஷிமா ஏன் எதுவும் செய்யாமல் …. அசையாமல் இருந்தாள்?

அந்தரங்கமான தனது தனித்த உலகத்தைத் தீ வைத்துப் பொசுக்கி விடுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அந்தப்பெண்மணி , அதே பிரம்மாஸ்திரத்தை இன்னொருவன் மேல் விடும்போது மட்டும் இரக்கம் காட்ட வேண்டுமா என்ன?
                             #************************************************#

26.3.22

மரேய் என்னும் குடியானவன் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி,மொழிபெயர்ப்புச் சிறுகதை

கனலி இணைய இதழ் வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழில் வெளியான என் மொழியாக்கச் சிறுகதை.



Amma

 

                   மரேய்* என்னும் குடியானவன்

                     [The Peasant Marey]

                   ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

                ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

 

   அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா மட்டும் இருளில் மூழ்கிக்கிடந்தது. சிறை வளாகத்துக்குள்,அங்கிருந்த சிறைக்கூடங்களுக்குப் பின்னால் இலக்கற்று வளைய வந்து கொண்டிருந்தேன். சிறையின் உறுதியான தடுப்பு வேலியைப் பார்த்தபடி அதன் முட்கம்பிகளை இயந்திரத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி அதை எண்ண வேண்டும் என்ற குறிப்பான தூண்டுதல் எதுவும் இல்லையென்றாலும் அது ஏனோ என்னிடம் ஒரு வழக்கமாகி விட்டிருந்தது. அன்று ,சிறை விடுமுறைக் காலத்தின் இரண்டாவது தினம். கைதிகள் எந்த வேலைக்காகவும் வெளியே அனுப்பப்படவில்லை; நிறையப்பேர் குடிபோதையில் இருந்தார்கள்;ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும் இருந்தார்கள். சிறையின் பல மூலைகளிலிருந்தும் அந்த சத்தம் எழுந்தபடி இருந்தது. வெறுப்பூட்டும் அருவருக்கத்தக்க பாடல்கள், கல்திண்ணைப்  படுக்கைகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி சீட்டாடிக்கொண்டிருந்த கைதிகள், மூர்க்கமாக நடந்து கொண்டதால் தங்கள் சக கைதிகளாலேயே பயங்கரமான தாக்குதல்களுக்கும் அடிதடிகளுக்கும் ஆளாகிப் பாதி உயிர் போன நிலையில் ஆட்டுத்தோல் போர்வை போர்த்தியபடி நினைவு திரும்பும் வரை கல்திண்ணைப் படுக்கையில் குற்றுயிராய்ப் படுத்துக்கிடக்கும் சில கைதிகள்..- ஏற்கனவே பல முறை உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும் கத்திகள்*.  கடந்த இரண்டு நாட்களாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த இவற்றின் பாதிப்பால் நான் கிட்டத்தட்ட நோயுற்றிருந்தேன் என்றே சொல்லலாம். குறிப்பாக இந்த இடத்தில் இந்தக் குடிகாரர்கள் போடும் சத்தத்தையும் ஒழுங்கீனமான அவர்களின் செயல்களையும் அருவருப்பில்லாமல் சகித்துக்கொள்ள என்னால் கொஞ்சமும் முடியவில்லை. அவை எனக்கு வெறுப்பேற்றுவனவாக இருந்தன. இப்படிப்பட்ட நாட்களில் சிறை அதிகாரிகளும் கூட அவர்களை அதிகம் சோதனை போடுவதோ கண்காணிப்பதோ வோட்கா அருந்துகிறார்களா என்பதைக் கண்டுகொள்வதோ இல்லை. ஒதுக்கப்பட்டவர்களான இவர்களை வருடத்தில் ஒரு முறையாவது இப்படிக் களியாட்டம் போட விட வேண்டும் என்பதையும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடலாம் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

  திடீரென்று கையாலாகாத ஒரு சினம் குபீரென்று என்னுள் மூண்டெழுந்தது. அரசியல் கைதியும் போலிஷ்நாட்டவருமான மிட்…..ஸ்கி* யை நான் வழியில் எதிர்ப்பட நேர்ந்தது.. இருண்ட பார்வையோடும் கோபம் கனலும் விழிகளோடும் துடிக்கும் உதடுகளோடும் ‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’ என்று தணிந்த குரலில் என்னிடம் கிசுகிசுப்பாய்ச் சொன்னபடி கடந்து சென்றார் அவர். நான் சிறைக்குள் திரும்பி வந்தேன். கால் மணி நேரம் முன்புதான் பைத்தியம் பிடித்தது போல அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தேன் நான். அப்போது ஆஜானுபாகுவான ஆறு மனிதர்கள், குடிபோதையில் இருந்த டார்டார்* ஜேஸின்  மீது பாய்ந்து அவனைத் தாறுமாறாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் அடித்த அடியில் அங்கே ஓர் ஒட்டகம் இருந்தால் அதற்குக்கூட உயிர் போயிருக்கும், ஆனால் ஹெர்குலிஸ் போல இருந்த அவனைக் கொல்வது அத்தனை சுலபம் இல்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனை அடி வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது நான் அறைக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது மூலையில் இருந்த ஒரு படுக்கையில் மூர்ச்சையாய்க் கிடந்தான் ஜேஸின். அவன் உயிரோடு இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அவனது உடல் ஆட்டுத்தோலால் மூடியிருந்தது; அவனைச் சுற்றிலும் பலரும் மௌனமாகப் பலரும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவேளை மறுநாள் காலையிலேயே அவனுக்கு நினைவு திரும்பி வந்து விடக்கூடும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கலாம், அல்லது அதிருஷ்டம் அவனுக்கு சாதகமாக இல்லையென்றால் இந்த அளவுக்கு அடி வாங்கியதில் அவன் இறந்தும் போய் விடலாம்.

  நான் இரும்புக்கிராதி போட்ட ஜன்னலுக்கு எதிர்ப்புறம் எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு நகர்ந்து சென்று மல்லாந்து படுத்தபடி என் கைகளைத் தலைக்குக் கீழே கோர்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். அப்படிப் படுத்திருக்கவே நான் விரும்பினேன்.

  தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்,மேலும் அப்போது கனவு காணலாம்,சிந்திக்கலாம். ஆனால் எனக்குக் கனவு காண்பது கடினமாக இருந்தது. என் இதயம் அமைதியின்றிப் படபடத்துக்கொண்டிருந்தது. ‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’ என்ற மிட்..…..ஸ்கியின் சொற்கள் காதுக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தன ஆனால் அதைப்பற்றியெல்லாம் விவரிப்பானேன்? இப்போதும் கூட சில சமயங்களில் அந்த நாட்களைக் குறித்த கனவுகளை நான் கண்டுகொண்டுதான் இருக்கிறேன், இரவு வேளைகளில். நான் காணும் வேறெந்தக் கனவும் அப்படிப்பட்ட தாங்கொணாத துயர் தருவதாய் இருந்ததே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என் சிறை வாழ்க்கையைப் பற்றி இதுவரை. ஒரே ஒரு முறை தவிர நான் எழுத்தில் பதிவு செய்ததே இல்லை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ‘இறந்தவர்களின் வீடு’ [The House of the Dead -1860] என்ற நாவலில் தன் மனைவியைக் கொலை செய்த கற்பனையான ஒரு பாத்திரம் இடம் பெற்றிருந்தது.  என் புத்தகம் வெளிவந்த அன்று முதல் இன்றுவரை மனைவியைக் கொலை செய்த அந்தக் குற்றவாளி நான்தான் என்றும், சைபீரியக்கடுங்காவல் தண்டனையில் நான் அனுப்பப்பட்டது கூட அதற்காகத்தான் என்றும் இன்னும் கூட சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான தகவல்.

  படிப்படியாக என் சுற்றுப்புறத்தை மறந்து என் ஞாபங்களுக்குள் மூழ்கிப்போகத் தொடங்கி விட்டேன். நான்காண்டு சிறைவாசத்தில் தொடர்ச்சியாக என் இறந்த காலங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த நான் அந்த  நினவுகள் வழியாக என் கடந்த காலத்திலேயே வாழத் தொடங்கி விட்டது போலக்கூடத் தோன்றியது. அப்படிப்பட்ட ஞாபகங்கள் தாமாகவே என்னுள் கிளர்ந்தெழும்; நானாக பிரக்ஞைபூர்வமாக அவற்றை எழுப்ப முயன்றதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில்…, கவனத்திலேயே தங்கியிருக்காத ஏதேனும் ஒரு அற்ப விஷயத்தில் அது தொடங்கும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது விரிவடைந்து கொண்டே சென்று தெளிவான முழுமையான ஒரு சித்திரமாகப் புலனாகி விடும். அவற்றை நான் எனக்குள் பல விதமாக அலசிப் பார்ப்பேன், எத்தனையோ காலத்துக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விஷயத்துக்குப் புதிது புதிதாய் மெருகேற்றிப் பார்ப்பேன்,.

  அதற்கெல்லாம் மேலாக சில சமயம் நான் அவற்றைத் திருத்தவும் கூடச்செய்வேன், சொல்லப்போனால். இடைவிடாமல் திருத்துவேன், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    இப்போது..ஏனோ எந்தக்காரணத்தாலோ நான் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அந்த பாலிய பருவத்தின் கண்டுகொள்ளாத ஒரு நொடி.., மின்னலடிக்கும் ஒரு கணம் சட்டென்று என் நினைவில் எழுந்தது. முழுக்க முழுக்க மறந்து போய் விட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்த ஒரு கணம் அது. ஆனால்..அப்போது அந்த சிறைவாச நாட்களில் – என்றோ.., எந்தக் காலத்திலோ நடந்த என் குழந்தைப்பிராய நினைவுகளை மீட்டெடுத்துப் பார்ப்பதில் எனக்குத் தனிப்பட்ட பிரியம் இருந்தது.

   எங்கள் கிராமத்தின் ஒரு ஆகஸ்ட் மாதத்து நாள் என் நினைவில் எழுந்தது. காற்றும் குளிரும் ஒரு பக்கம் இருந்தாலும் மழை இல்லாத வெளிச்சமான நாள்தான் அது. கோடைகாலம் முடியும் சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது. சீக்கிரமே நாங்கள் மாஸ்கோ போயாக வேண்டும், சலிப்பூட்டும் ஃபிரெஞ்சுப் பாடங்களுக்குள் குளிர்காலம் முழுவதையும் கழிக்க வேண்டும்.

   எனக்கு கிராமத்தை விட்டுச் செல்ல நேர்வது வருத்தமாக இருந்தது. கதிரடித்துக்கொண்டிருந்த சமநில வயல் பகுதிகளைத் தாண்டி ஒரு பள்ளத்தாக்கிற்குள் இறங்கி சரிவில் இருந்த அடர்த்தியான புதர்கள் வழி மேலேறிச்சென்றேன். பள்ளத்தாக்கின் மறுபகுதியில் அந்தப் புதர்கள் முடியும் இடத்தில் ஒரு குறுங்காடு இருந்தது. காட்டுப்புதர்களுக்கு நடுவே நான் இறங்கியபோது எனக்கு மிக அண்மையில் - முப்பது தப்படியில் ஒரு குடியானவன் சிறிய நிலப்பரப்பொன்றைத் தனியாக உழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

      செங்குத்தான மலைப்பகுதியில் அவன் உழுது கொண்டிருக்கிறான் என்பதும் அவனது குதிரை அதற்காக மிகவும் கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிந்தது. அவ்வப்போது..’’ம்..மேலே போ…! ம்…ம்..மேலே…மேலே..இன்னும் மேலே போ..’’ என்று அதை அவன் தூண்டி விடும் சத்தமும் மிதந்து வந்து என்னை அடைந்தது. கிட்டத்தட்ட எங்கள் குடியானவர்கள் எல்லோரையுமே எனக்குத் தெரியும்; ஆனால் இப்போது இங்கே உழுது கொண்டிருப்பவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் என்னுடைய வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அது யார் என்பதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை.’ஹேஸல்நட்’ மரங்களிலிருந்து சின்னச்சின்னக் குச்சிகளை ஒடித்துச் சாட்டையாக்கி அவற்றால் தவளைகளைச் சுண்டி விடுவதில் நான் ஈடுபட்டிருந்தேன். ’ஹேஸல்’ மரத்தின் குச்சிகள் சாட்டைகளாகச் சொடுக்க மிகவும் ஏற்றவை, ஆனால் அவை ’.பிர்ச்’ மரக்குச்சிகளை விட மிகவும் மெலிதானவை என்பதால் எளிதில் உடைந்து போய்விடக்கூடியவைகளாகவும் இருந்தன.

    அங்கே இருந்த வண்டுகளையும் பூச்சிகளையும் ஆர்வமாய்ப் பார்த்தபடி அவற்றையும் நான் சேகரித்துக்கொண்டிருந்தேன். அவைகளில் சில மிக மிக அழகாக இருந்தன. கறுப்பு நிறப்புள்ளிகளோடு சிவப்பு மஞ்சள் நிறங்களில் சுறுசுறு என்று நகரும் சிறிய பச்சோந்திகளையும்,பல்லிகளையும், ஓணான்களையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பாம்புகளுக்கு மட்டும் நான் பயந்தேன். ஆனால் பல்லிகளையும் ஓணான்களையும் விட பாம்புகள் குறைவாகவே இருந்தன. அங்கே காளான்குடைகளும் அதிகம் தென்படவில்லை. காளான் வேண்டுமென்றால் ’பிர்ச்’ மரங்களுக்குப் பக்கத்தில் போக வேண்டும். நான் அங்கே போகலாமென்று நினைத்தேன். காளான்களும் காட்டு ’பெரி’களும் வண்டுகளும் தட்டாம்பூச்சிகளும் பறவைகளும் நிறைந்திருக்க,  முள்ளம்பன்றிகளும் அணில்களும் ஓடிக்கொண்டிருக்கும் காட்டை விட - மக்கிப்போன இலைகளின் வாசம் வீசும் காட்டை விட- இந்த  உலகத்தில் நான் வேறெதையுமே அதிகமாக நேசிக்கவில்லை.

   இதை எழுதிக்கொண்டிருக்கும் இப்போதும் கூட எங்கள் ’பிர்ச்’ மரக்காட்டின் வாசத்தை என்னால் நுகர முடிகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடனேயே தங்கியிருப்பவை. மரண அமைதி நிலவிய அந்த இடத்தில் திடீரென்று ‘’ஓநாய்..ஓநாய்’’ என்று ஒரு கூச்சல் மிகத் தெளிவாக,துல்லியமாகக்கேட்டது. நானும் பயந்து போய்க் கூச்சலிட்டேன். உச்சபட்சக் குரலில் அலறியபடி குடியானவன் உழுது கொண்டிருந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடினேன்.

    அங்கே இருந்தது எங்கள் குடியானவன் மரேய். அப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.ஆனால் எல்லோருமே அவனை மரேய் என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.கிட்டத்தட்ட ஐம்பது வயது நிரம்பிய அந்தக் குடியானவன் நல்ல பருமனும் சராசரிக்கு மேற்பட்ட உயரமும் உடையவன். அடர்த்தியான அவனது செம்பழுப்பு நிறத் தாடியில் ஆங்காங்கே சில நரை முடிகள் தெரிந்தன. எனக்கு அவனைத் தெரிந்திருந்தபோதும் இதுவரை நான் அவனோடு பேசியதே இல்லை.

    என் கூச்சலைக்கேட்டதும் அவன் தன் கிழட்டுக் குதிரையை ஓட்டுவதைக்கூட நிறுத்தி விட்டான். என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அவனது மரக்கலப்பையை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவனது சட்டையையும் பிடித்துக்கொண்டபோதுதான் நான் எந்த அளவுக்கு மிரண்டு போயிருக்கிறேன் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.

‘’அங்கே ஒரு ஓநாய் இருக்கு’’ என்று மூச்சு வாங்கிக்கொண்டே கதறினேன்.

அவன் தலை தன்னிச்சையாக உயர்ந்தது. என்னை நம்புபவன் போல ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

‘’ஓநாயா? எங்கே இருக்கு?’’

‘’யாரோ கத்தினாங்க…இப்பதான் ஓநாய் ஓநாய்னு கத்தினாங்க’’ என்றபடி திக்கித் திணறினேன்.

‘’சே சே அதெல்லாம் எதுவுமே இங்கே இல்லை, இதோ பாரு குட்டிப்பையா…, என்னைக் கொஞ்சம் பாரேன்…இங்கே அந்தமாதிரி  ஓநாயெல்லாம் ஏதும் இல்லை,சரியா’’ என்று மெள்ளச் சொல்லியபடி என்னை அமைதிப்படுத்த முயன்றான். ‘’நீ ஏதோ கனவு கண்டிருக்கே பையா, இங்கே ஓநாய் இருக்குன்னு  யாருமே கேள்விப்பட்டதில்லை’’

ஆனால் என் உடல் முழுவதும் வெடவெடத்துக்கொண்டிருக்க நான் அவனது அங்கியை இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் மிகவும் வெளிறிப்போயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவன் என்னைக் கவலை தோய்ந்த புன்னகையோடு பார்த்தான். என்னைப்பற்றி அவனுக்கும் கவலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை அது வெளிக்காட்டியது.

‘’இதோ பாரு கண்ணு , என் கண்ணில்லே நீ! அட, என் செல்லம்? நீதான் எப்படி பயந்து போயிருக்கே? ! ஐயோ? பாவம் என்னோட சின்னப் பையன்!…..நீ அப்படியெல்லாம் பயப்படவே வேண்டியதில்லை, நான் இருக்கேன் பார்த்தியா, இதோ பாரு,,இங்கே கொஞ்சம் பாரேன்’’

என்றபடி அவன் தன் கையை நீட்டி சட்டென்று என் கன்னத்தில் வருடித் தந்தான்.

‘’இதோ பாரு…, கிறிஸ்து உன்னோடயே இருப்பார்,சரியா? சிலுவை போட்டுக்கோ.நல்ல பையனில்லையா நீ’’

ஆனால் நான் சிலுவைக்குறி போட்டுக்கொள்ளவில்லை. பயத்தில் என் உதட்டோரம் இன்னும் துடித்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக அது அவனைப் பாதித்திருக்க வேண்டும். கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறு படிந்த தடிமனான தன் விரலால் நடுங்கிக்கொண்டிருந்த என் உதடுகளை அவன் மெள்ளத் தொட்டான்.

‘’என் கண்ணில்லே… என் கண்ணுப் பிள்ளையில்லே’’ என்று என்னைப்பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில்  தாய்மை உணர்வின் சாயல் இலேசாகத் தென்பட்டது.

‘’கடவுளே, பாவப்பட்ட இந்தப் பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’

இறுதியில் அங்கே ஓநாய் எதுவும் இல்லை என்பதும் ‘ஓநாய் ஓநாய்’ என்று யாரோ கத்துவதாக நானாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்குப் புரிந்து விட்டது. ஆனால் அந்த சத்தம் என்னவோ தெளிவாக துல்லியமாகத்தான் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சத்தங்கள் (ஓநாயைப் பற்றியதாக மட்டும் இல்லையென்றாலும்) இதற்கு முன்னாலும் ஓரிரு முறை நான் கற்பனை செய்து கொண்டவையே என்பதை நான் அறிந்திருந்தேன்.( பிறகு சில ஆண்டுகள் கழித்து அப்படிப்பட்ட பிரமைகளிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்)

‘’சரி, நான் போய்ட்டு வரேன்’’ என்று அவனைப்பார்த்துத் தயக்கத்தோடும் கூச்சத்தோடும் கேட்டேன்.

‘’சரி வேகமா ஓடு.., ஒரே ஓட்டமா ஓடிடு பையா..நான் உன்னை கவனிச்சுக்கறேன்’’என்றான் அவன்.

‘’எதுக்கும் பயப்படாதே. அந்த ஓநாய் உன்கிட்டே எப்படி வருதுன்னு நான் பார்த்திடறேன்’’ என்றும் சொல்லிவிட்டு அதே தாய்மை கலந்த புன்னகையோடு என்னைப்பார்த்து சிரித்தான்.

‘’சரி..! கிறிஸ்து உன் கூடவே இருப்பார். வேகமா ஓடிடு. ஓடிப்போயிடு  சின்னப் பையா ’’ என்று சொல்லியபடி எனக்கு சிலுவைக்குறி போட்டு விட்டுத் தனக்கும் அவ்வாறே போட்டுக்கொண்டான். பத்தடிக்கு ஒரு முறை அவனைத் திரும்பிப்பார்த்தபடியே நான் நடந்தேன். நான் நடந்து சென்றபோது –தன் இடத்தை விட்டு சற்றும் நகராமல் - தன் பெண்குதிரையோடு அசையாமல் நின்றபடி என்னைப்பார்த்துக்கொண்டிருந்தான் மாரி. ஒவ்வொரு முறை நான் அவனைத் திரும்பிப் பார்த்தபோதும் என்னைப் பார்த்துத் தலை அசைத்துக்கொண்டும் இருந்தான். நான் பயந்து போனதை இந்த அளவுக்கு அவனிடம் வெளிப்படுத்தி விட்டோமே என்று  எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்ததை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் நடந்து சென்றபோது ஓநாயைப் பற்றிய பயம் எனக்குள் தொடர்ந்து இருக்கத்தான் செய்தது. பள்ளத்தாக்கின் பாதியில் இருந்த முதல் கதிரடிக்கும் இடத்தையும் நெல் சேமிக்கும் ’குதி’ரையும் நெருங்கும் வரை அது நீடித்தது. அதற்குப் பிறகு அது மறைந்தே போய் விட்டது. எங்கள் வளர்ப்பு நாயான வோல்ட்சாக் திடீரென்று என்னை நோக்கி ஓடி வருவதைப்பார்த்ததும் அது போயே போய் விட்டது. வோல்ட்சாக்கைப் பார்த்ததும் நான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்தபடி கடைசி முறையாக மாரியைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முகம் தெளிவாகப் புலப்படாவிட்டாலும் அவன் இன்னும் என்னைப்பார்த்துத் தலையசைத்துக்கொண்டும் பாசத்தோடு புன்னகை செய்து கொண்டும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவனை நோக்கிக் கை அசைத்தேன். அவனும் திரும்பக் கை அசைத்து விட்டுத் தன் குதிரையை செலுத்த ஆரம்பித்தான். ‘’ம்..போ போ..மேலே போ’’ என்ற அவனது குரல் தூரத்தில் மறுபடியும் கேட்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அந்தச் சிறிய குதிரை நிலத்தை உழ ஆரம்பித்து விட்டது.

   இவை எல்லாமே, மிகத் தெளிவாக, நுட்பமான எல்லாத் தகவல்களோடும் - ஆச்சரியப்படத்தக்க வகையில் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்து விட்டது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

     நான் சட்டென்று எழுந்து என் கல்திண்ணைப் படுக்கை மீது அமர்ந்து கொண்டேன். அப்போது அந்த ஞாபகத்தால் என் உதட்டில் அரும்பிய அந்த மென்மையான புன்னகையைக்கூட இப்போது என்னால் நினைவுகூர முடிகிறது. அடுத்த ஒரு நிமிடமும் என் பிள்ளைப் பிராயத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றியே அசை போட்டுக்கொண்டிருந்தேன்.

   மரேயை சந்தித்து விட்டு வீடு திரும்பிய அன்று எனக்கு ஏற்பட்ட அந்த ‘சாகச’ சம்பவத்தைப்பற்றி நான் யாரிடமுமே சொல்லவில்லை. அது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய சாகசம் இல்லைதான். இன்னும் சொல்லப்போனால் சீக்கிரத்திலேயே நான் மரேயையும் மறந்து போனேன். எப்போதாவது அவனை எதிர்ப்பட நேரும்போதும் ஓநாயைப் பற்றியோ, வேறு எதைப்பற்றியுமோ கூட நான் ஒருபோதும் பேசியதில்லை. இருபது ஆண்டுகள் கழித்து இப்போது சைபீரியாவில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று அந்த நிகழ்ச்சி அசாதாரணமான துல்லியத்தோடு – ஒரு சின்னத் தகவல் கூட விடுபட்டுப்போகாமல் ஞாபகம் வருகிறதென்றால் என்னை அறியாமலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அது தானாகவே மறைந்திருந்திருக்க வேண்டும். தேவைப்படும் வேளையில் அது இப்போது திடீரென்று நினைவு வந்திருக்கிறது. அந்த அடிமைக் குடியானவன் என்னைப் பார்த்துத் தாய்மைக்குரிய பரிவோடு புன்னகை செய்தது, என் மீதும் தன் மீதும் அவன் சிலுவைக்குறி போட்டுக்கொண்ட விதம், அவன் என்னைப்பார்த்துத் தலையசைத்தது என்று எல்லாவற்றையுமே நான் நினைவு கூர்ந்தேன்.

‘’கடவுளே, பாவம் இந்தப்பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’ என்று அவன் சொன்னது, குறிப்பாக…, கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறுபடிந்த தடிமனான தன் விரலால் நடுங்கிக்கொண்டிருந்த என் உதடுகளைக்  கூச்சத்தோடும் தயக்கத்தோடும் அவன் தொட்டது என்று எல்லாமே..!

    ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக, இப்படி ஒரு செயலை யார் வேண்டுமானாலும் நிச்சயமாக செய்திருக்கலாம், அதில் சந்தேகமே இல்லை. ஆனால் எவருமற்ற தனிமையில் நிகழ்ந்து முடிந்த அந்த சந்திப்பில் முற்றிலும் வேறான ஒன்றும் நடந்திருந்ததைப் போலிருந்தது. ஒருவேளை நான் அவனது மகனாகவே இருந்திருந்தால் அளவற்ற அன்பு சுடர்விடும் விழிகளோடு அவன் என்னை இப்படிப்  பார்த்திருக்க மாட்டான். அப்படிப் பார்க்குமாறு அவனை வற்புறுத்தியது எது ? அவன் எங்கள் எண்ணற்ற அடிமைகளில் ஒருவன், எங்கள் உடைமைகளில், எங்கள் சொத்து*க் கணக்கில் ஒருவனாகக் கருதப்படும் ஒரு குடியானவன் ; நான்…, அவனது எஜமானரின் மகன் அவ்வளவுதான். அவன் என்னிடம் இவ்வளவு பிரியமாக இருந்தான் என்பது யாருக்குமே தெரிந்திருக்கப்போவதில்லை, அப்படியே தெரிய வந்தாலும், அதற்காக அவனுக்கு யாரும் எந்த வெகுமதியும் தரப்போவதும் இல்லை. உண்மையாகவே சின்னக்குழந்தைகளிடம் அவனுக்கு அளவற்ற அன்பு இருக்கக் கூடுமோ? அப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

     எங்கள் சந்திப்பு மிக மிக ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில், யாருமே இல்லாமல் வெறிச்சென்று கிடந்த தனிமையான நிலப்பகுதி ஒன்றில் நிகழ்ந்தது. நாகரிகம் அறியாத முரட்டுத்தனமான காட்டுமிராண்டி போன்ற ஒரு ரஷ்ய அடிமை…, தனது விடுதலையைக் குறித்தோ தனது ஈடேற்றம் குறித்தோ ஒருபோதும் கனவு கூடக் கண்டிராதவனும், அதை எதிர்பார்த்திராதவனுமான ஓர் அடிமை…, அவனுக்குள் அபரிமிதமாய்ப் பொங்கித் ததும்பிய மனிதநேய உணர்வு, பண்படாத முரட்டுத்தனமான அந்த இதயத்திலிருந்து ஒரு பெண்ணைப் போன்ற பரிவோடு, மென்மையாக, நுட்பமாக வெளிப்பட்ட காருண்யம்…இவற்றையெல்லாம்..- ஒருவேளை அந்தக் கடவுள் மட்டுமே மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்.

   ஒருக்கால் நம் நாட்டுப்புற மக்களுக்கு இருப்பதாக கான்ஸ்டாண்டின் அக்ஸகோவ்* குறிப்பிடும் மிக உச்சபட்சமான பண்பாடு என்பது இதுவாகத்தான் இருக்குமோ?

    கல்திண்ணைப் படுக்கையிலிருந்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது துரதிருஷ்டசாலிகளான அந்த ஜீவன்களை முழுக்க முழுக்க வேறுவகையான கண்ணோட்டத்துடன் என்னால் திடீரென்று பார்க்க முடிந்தது என்பது, எனக்கு நினைவிருக்கிறது. நான் கொண்டிருந்த கோபமும் வெறுப்பும் ஏதோ ஒரு அற்புதத்தால் சட்டென்று என் இதயத்திலிருந்து விலகிப்போனது போலிருந்தது. சிறையைச் சுற்றி நடந்தபடி நான் அதுவரை எதிர்ப்பட்ட முகங்களைத் துருவிப் பார்த்தேன். அதோ அங்கே மழிக்கப்பட்ட தலையோடு, முகத்தில் தெரியும் குற்றவாளி என்ற முத்திரையோடு ,குடிபோதையில் உச்ச ஸ்தாயியில் ஏதோ கரகரப்பான குரலில் பாடிக்கொண்டிருக்கிறானே அவனும் கூட மரேயைப் போன்ற அதே மாதிரியான ஒரு குடியானவனாக இருக்கக்கூடும். என்னால் அவனது இதயத்துக்குள் புகுந்து பார்க்க முடியப்போகிறதா என்ன? அன்று மாலை நான் மறுபடியும் மிட்......ஸ்கியைப் பார்த்தேன். பாவம் அந்த மனிதர்,  மாரியையோ அவனைப்போன்ற வேறு குடியானவர்களைப் பற்றியோ குறித்த எந்தப் பழைய  ஞாபகங்களும் அவருக்கு இருக்காது. என்பதால், '‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’’ என்பதைத்தவிர அந்த மக்களைப்பற்றிய வேறு எந்த அபிப்பிராயமும் அவருக்கு இருக்கவும்.முடியாது. ஆமாம்.. நம்மை விட… அவரைப்போன்ற போலிஷ் நாட்டவர்களுக்கு அது மிகவும் கடினமானதுதான்! 

            ***************************************************************

குறிப்புகள்;

;* பல முறை உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும் கத்திகள்*!:  சிலுவையில் ஏசு இறந்தபோது சுற்றியிருந்த ரோமானியக் காவலர்கள் நடந்து கொண்ட முறையைக் குறிப்பாக உணர்த்துகிறது.

*‘இறந்தவர்களின் வீடு’ ; தஸ்தயெவ்ஸ்கி எழுதிய The House of the Dead நாவலைக்குறிப்பிடுகிறது.

*மிட்..ஸ்கி; ஓ.மிர்ட்ஸ்கி - O.Miretski என்பவர் தஸ்தயெவ்ஸ்கியுடன் சிறை  

*டார்டார்; ரஷ்யாவில் இருக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மை இனத்தினர்

*அடிமை-serf- ரஷ்ய நிலக்கிழார்களின் சொத்து மதிப்பு அவர்கள் எத்தனை அடிமைகளைத் தங்கள் உடைமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவும்.இருந்தது.

* கான்ஸ்டாண்டின் அக்ஸகோவ்; ரஷ்ய எழுத்தாளர்,திறனாய்வாளர்.- (1817–1860)

             >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 

 

 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....