துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.1.12

’அசடன்’-மேலும்...

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலும்
( நாஞ்சில் நாடன் பரிந்துரை ) அதைத் தொடர்ந்தும் வாசகர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோர் தெரிவு செய்து பரிந்துரைக்கும் நூலாக ‘அசடன்’ நாவலின் மொழியாக்கமும் இருந்து வருவது...  நூற்றாண்டுகள் சில கடந்தும், நிலைத்த புகழோடு நிற்கும் தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியப் படைப்பாக்கத் திறனுக்கே சாட்சி...எல்லாப் புகழும் தஸ்தயெவ்ஸ்கிக்கே....


புத்தகக் கண்காட்சி பற்றிய தினமலர் செய்திக் குறிப்பிலிருந்து..

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் இந்த கண்காட்சியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக 5,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையான இந்த புத்தகம் 13 நாளில் புத்தக கண்காட்சியில், 5,000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. காந்திக்கு அடுத்த இடத்தை அன்னா ஹசாரே தக்க வைத்துக் கொண்டார். மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்ட அன்னா ஹசாரே பற்றிய புத்தகம் 4,000 பிரதிகள் விற்றது.சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாசகர்களால் விரும்பி வாங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் சரித்திர நாவல், இரண்டு தலைமுறை வாசகர்களாலும் விரும்பி வாங்கப்பட்டது.தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், நாவலோடு இசைத் தகடையும் இணைத்து வெளியிட்டது குறிப்பிட்ட அளவு விற்றுள்ளது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், பூமணியின் அஞ்சாடி, தாஸ்தவெஸ்கியின் அசடன் உள்ளிட்ட புத்தகங்களும் வாசகர்களால் விரும்பப்பட்டது.- 

2012இல் படிக்க வேண்டிய நூல்களாக - எழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. அசடன் - தஸ்தயேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை பாரதி புக் ஹவுஸ்)
2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)
3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன்(வம்சி பதிப்பகம்)
4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)
5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)
7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)
8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
9. காவல்கோட்டம் - சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)
10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)
பதிவுகள் இணைய இதழில் குறிப்பு...
[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தணடனையும்' நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்' நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். - -] 

19.1.12

தேவந்தியே ஆருஷியாய்....

தேவந்தி....ஆருஷியாக...நேற்று  கேரளாவில் பாலியல் தொழிலுக்குத் தந்தையாலேயே இழுத்து வரப்பட்ட பறவூர்க்காரப் பெண்ணாகக் காவல் நிலையங்களில் பாலியல் வன்முறையில் கதறிய கிராமத்துப் பெண்களாக  இன்று எங்கேயோ கள்ளிப்பால் ருசித்து துடித்து உறங்கும் "தேவந்தியாக "  ...... சிந்திக்காமலேயே ...அவள்...

18.1.12

மகளாய்..மாணவியாய்.....

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு.!.
’’அம்மா..என்னை நினைவிருக்கிறதா. நான்தான் தேனம்மை..’’என்றது அந்தக் குரல்.  ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்துவரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும்...அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி - ..அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது..

17.1.12

எஸ்.ராவுக்கு இயல்விருது


தமிழிலக்கியப் பரப்பைத் தங்கள் ஆழமான படைப்புக்களால் அர்த்தமுள்ளதாக்கி வரும் சமகால எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆத்மார்த்தமான பங்கு குறிப்பிட்டுச் சுட்டத்தக்க முக்கியத்துவம் கொண்டது. இலக்கிய இதழ்களில் எழுதினாலும்,வெகுஜன இதழ்கள் என்றாலும் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல் தரக் கட்டுப்பாட்டோடு எழுதக் கூடிய மிகச் சிலரில் எஸ்.ராவும் ஒருவர்.

15.1.12

புத்தகக்கண்காட்சியில் அசடன்...

சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி-வாங்கியாக வேண்டிய பத்துப் புத்தகங்கள் பற்றிக் கேட்டபோது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கீழ்க்காணும் பத்துப் புத்தகங்களைப் பட்டியலிட்டுத் தந்ததாக விகடன்.காம் செய்தி வெளியிட்டிருக்கிறது.அந்தப் பட்டியலில் என் மொழியாக்கத்தில் மதுரை பாரதி புத்தக நிலையம் வெளியிட்டிருக்கும் அசடனும் இடம் பெற்றிருக்கிறது.
http://news.vikatan.com/index.php?nid=6000 

13.1.12

மூன்றாம் கோணத்தில்.....

இணைய நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
‘’ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய 
மாரி அளவாய்ப் பொழிக..மக்கள் வளமாய் வாழ்க’
-வேதாத்திரி மகரிஷி

மூன்றாம் கோணம் இணைய இதழின் பொங்கல் மலரில் என் நேர்காணல் வெளிவந்திருக்கிறது. நேர்காணலுக்குரிய வினாக்களை சிறப்பாக அமைத்து அதைத் தொகுத்தளித்திருக்கும் சகோதரி ஷஹி அவர்களுக்கு என் நன்றி..
நேர்காணலிலிருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்......


9.1.12

’தேவந்தி’-ஒரு விமரிசனம்

 வல்லினம் கலை இலக்கிய இணைய இதழில் - ’கதவைத் தட்டும் கதைகள்’என்னும் தொடர்ப் பதிவு வரிசையில், க.ராஜம் ரஞ்சனி அவர்கள் என் ‘தேவந்தி’சிறுகதை குறித்து எழுதியுள்ள விமரிசனக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...


2.1.12

இரு வண்ணங்களின் ‘சாரல்’

 
நெல்லைமண்ணின்  எழுத்தாளர்களாகியவண்ணதாசன்(கல்யாண்ஜி),வண்ணநிலவன் ஆகிய இருவரும் இவ்வாண்டுக்கான சாரல் விருதைப் பெறத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....