துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.12.17

மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்


மணல் வீடு இலக்கிய வட்ட விருதுகள்
மணல் வீடு இலக்கிய வட்டத்தின் பொறுப்பாளரான திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
சீரிய  எழுத்துச் செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருதுக்கு நான் தேர்வாகி இருப்பதாகவும்
ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று விருதை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

நான் ஆழ்ந்த மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், அமரர் திருமதி ராஜம் கிருஷ்ணன். அவரது பெயரால் வழங்கப்படும் இந்த விருதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்வதோடு அதற்கு  உரியவளாக என்னை மேலும்  தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும்  எண்ணுகிறேன்.

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெறும் மக்கள் கலை இலக்கிய விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மணல் வீடு இலக்கிய அமைப்புக்கும் களரி தொல்கலை மேம்பாட்டு மையத்துக்கும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி.

விருது பெறுவோரின் பட்டியல்,
அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ்
மணல் வீடு இலக்கிய வட்டம், முன்னோடிப் படைப்பாளுமைகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருது வழங்கி கவுரவித்துவருகிறது.
அந்த அமைப்பின் சார்பாக வழங்கப்படும் 
அஃக் பரந்தாமன் நினைவு விருதுக்கு 
சௌந்திர சுகன் இதழும், 
கவிஞர் சி.மணி நினைவு விருதுக்கு என்.டி.ராஜ்குமாரும், 
நாவலாசிரியர் ப.சிங் காரம் நினைவு விருதுக்கு நக்கீரனும், 
கு.அழகிரிசாமி நினைவு விருதுக்கு அழகிய பெரியவனும், 
ராஜம் கிருஷ்ணன் நினைவு விருதுக்கு எம்.ஏ. சுசீலாவும், 
ஓவியர் கே.எம். கோபால் நினைவு விருதுக்கு ஓவியர் ஷாராஜும், 
நிகழ்த்துக் கலைஞர்களுக்கான அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருதுக்கு 
கூத்துக்கலைஞர் மட்டம்பட்டி பழனியும் 
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
விருது வழங்கும் விழா ஜனவரி 6-ம் தேதி ஏர்வாடியில் நடக்கவிருக்கிறது. 

மேலும் விருது பெறுபவர்கள்....

மக்கள்  கலை இலக்கிய விழா  -  2018

நிகழ்விடம்  -  ஏர்வாடி  , மேட்டூர்

நாள்  - 06-01-2018

நேரம்  - பிற்பகல்  2.30  மணிக்கு

அமர்வு  - 1 களரி கூட்டல்

மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை  
முகவீணை-குமார்-நாகமரை

அமர்வு  2 நூல்  வெளியீடு -  பிற்பகல்  3.00 மணிக்கு

பரிசோதனை  சிறுசஞ்சிகை  - வே . நி . சூர்யா
தொக்கம்  -2  சிறுசஞ்சிகை -    திடவைவேசர்
பிரதியின் நிர்வாணம் - சிறுகதைகள் - லைலா  எக்ஸ்
எழுத்தும்  நடையும்  - சி . மணி  படைப்புகள் - தொகுப்பாக்கம் -காலசுப்ரமணியன்

அமர்வு - 3  இலக்கிய  விருதுகள் - பிற்பகல் 3.30  மணிக்கு

சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு  இலக்கியவிருது -  சௌந்திர  சுகன்

கவிதைக்கான  சி. மணி நினைவு  இலக்கியவிருது  - என். டி  ராஜ்குமார்

நாவலுக்கான   ப. சிங்காரம்  நினைவு  இலக்கியவிருது-  நக்கீரன்  

சிறுகதைக்கான  கு அழகிரிசாமி  நினைவு  இலக்கியவிருது-  அழகிய பெரியவன்

சீரிய  எழுத்து செயற்பாட்டுக்கான எழுத்தாளர்  ராஜம்  கிருஷ்ணன்  நினைவு  இலக்கியவிருது -  எம் .ஏ . சுசிலா
நுண்கலைகளுக்கான  ஓவியர் கே . எம்  கோபால்  நினைவு  விருது-  ஷாராஜ்

நிகழ்வில்

பால் சக்கரியா  பிரம்மராஜன்  ஜீவானந்தம்   நாஞ்சில்நாடன்  பொ.வேலுசாமி இமயம்   ஆதவன்  தீட்சண்யா  சமயவேல்   மோகனரங்கன்  இரா.நடராசன் குலசேகரன்

அமர்வு -4-   மாலை  5   மணிக்கு

கலைஞர் பெருமக்களுக்கு விருது -பரிசு-பாராட்டு -கௌரவிப்பு

கூத்துச்செம்மல் விருது பெறுவோர்

பெருமாள்  -  முகவீணைக்கலைஞர்    - ஆலமரத்தூர்
ரத்தினம்  -கூத்துக்கலைஞர்- கொக்கராயன்பேட்டை
செல்வம்  --கூத்துக்கலைஞர்-   எலச்சிபாளையம்
ரமேஷ்   - கூத்துக்கலைஞர் -  முதுகம்பட்டி
சத்தி -கூத்துக்கலைஞர்- முதுகம்பட்டி
முருகன்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
செந்தில்  - கூத்துக்கலைஞர் - முதுகம்பட்டி
மாதேஷ் - கூத்துக்கலைஞர்- கோவிந்தப்பாடி
ஆறுமுகம்  -கூத்துக்கலைஞர்-  வத்தல்பட்டி
ரவி -முகவீணைக்கலைஞர் - பள்ளிப்பட்டி
கொழந்தை  - கூத்துக்கலைஞர் - ஒண்டிக்கடை
ராஜமாணிக்ககம்  - கூத்துக்கலைஞர் - ஆரூர்ப்பட்டி
நல்லதம்பி -கூத்துக்கலைஞர் - சாத்தப்பாடி
அம்பேத்கர் - கூத்துக்கலைஞர் -மோடமங்கலம்
வடிவேல் - கூத்துக்கலைஞர் - திருச்செங்கோடு
கோவிந்தன் -கூத்துக்கலைஞர் - மூலக்காடு
மூர்த்தி - மிருதங்க கலைஞர் - கொங்குப்பட்டி

கலைச்சுடர் விருது பெறுவோர்

இந்து  -கூத்துக்கலைஞர்- தோப்பூர்
தனுஷ் -மிருதங்கக் கலைஞர் - அண்ணாநகர்
விஷவா - மிருதங்கக் கலைஞர்- எளச்சிப்பாளையம்  
மகேஷ் - கூத்துக்கலைஞர் - பருவாச்சி  
அவந்திகா - கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு
தனபால் -கூத்துக்கலைஞர் -இருசாகவுண்டன் புதூர்   
மகேந்திரன்  - கூத்துக்கலைஞர் - இருசாகவுண்டன் புதூர்
கார்த்திக் -   கூத்துக்கலைஞர் -திருச்செங்கோடு

கூத்துக்கலைஞர்- அமரர் க.ராஜு நினைவு விருது பெறுபவர்

அஸ்வினி  - கூத்துக்கலைஞர்  -  அந்தியூர்
அமரர்  துரைசாமி  வாத்தியார்  நினைவு  விருது

தங்கவேல் - மிருதங்கக்கலைஞர் - செல்லமண்டி
ராஜு - மிருதங்கக்கலைஞர்- பள்ளிப்பட்டி

அமரர்  குரும்பனூர் காளி வாத்தியார்  நினைவு  விருது
அர்ஜுனன்  - கூத்துக்கலைஞர்  - அண்ணாநகர்   .
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - இலுப்புளி
சின்ன ராசு  - கூத்துக்கலைஞர்- துத்திப்பாளையம்
வீராசாமி  -  கூத்துக்கலைஞர் - எலிமேடு
முனுசாமி   -கூத்துக்கலைஞர் - நல்லூர்

அமரர் சடையன் வாத்தியார்  நினைவு விருது
பழனி - கூத்துக்கலைஞர் – மட்டம்பட்டி

நிகழ்வில்

சுப்ரு வாத்தியார்  மக்குமாணிக்கம்  மாணிக்கக்கம்பட்டி  கணேசன்     செ.ரவீந்திரன் ,
இரா .காமராசு  ந .மம்மது ஹேமநாதன்
மா .சங்கரநாராயணன்  பா. மதிவாணன்   ஜீவகாருண்யன்  ப. கிருஷ்ணஸ்வாமி

நிகழ்வு தொகுப்பு

நறுமுகை - ராதா  கிருஷ்ணன்
நன்றியுரை-மு.ஹரிகிருஷ்ணன்
அமர்வு-5- மாலை  6 மணிக்கு
மயில் ராவண  சம்ஹாரம்  -தோல்பதுமைக் கூத்து
வழங்குபவர்- கணேசன் -அம்மாபேட்டை
அமர்வு-6 - மாலை 7மணிக்கு
பாஞ்சாலக்குறவஞ்சி  கட்ட பொம்மலாட்டம்
வழங்குவோர் - களரி கூத்துப்பள்ளி   

8 மணிக்கு-இரவு உணவு
அமர்வு-6 - பொன்னர்  சங்கர்  - தெருக்கூத்து
வழங்குவோர்  துத்திப்பாளையம்  பொன்னு  கவுண்டர் நாடக  சபா
நிகழ்த்துவோர்
சுப்பிரமணி - கூலிப்பட்டி
தங்கவேல்  - துத்திப்பாளையம்
செல்லமுத்து -  மோர் பாளையம்
சின்னராசு  - துத்திப்பாளையம்
சுப்பிரமணி - துத்திப்பாளையம்
சீரங்கன் - துத்திப்பாளையம்
சிவராஜ் - எஸ் பாலம்
கனகு - பாச்சாலியூர்
மயில்சாமி - துத்திப்பாளையம்
செங்கோட்டுவேல் - துத்திப்பாளையம்
சீனு - கூட்டப்பள்ளி
சதீஷ் - துத்திப்பாளையம்
அருள் - எலிமேடு
மிருதங்கம்-நடராஜன் –அம்மாபேட்டை , கவின் - எலிமேடு
முகவீணை-குமார்-நாகமரை

சி

நிகழ்விடம்

சேலம் -மேட்டூர் பிரதான சாலையில்
பொட்டனேரி நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது

தொடர்புக்கு

இர.தனபால்
அறங்காவலர்
9677520060
9894605371

நிகழ்ச்சி ஏற்பாடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
&
மணல்வீடு இலக்கியவட்டம்
(KALARI HERITAGE&CHARITABLE TRUST)



12.12.17

நிலவறைக்குறிப்புக்கள் -விரைவில்...


''ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’

உலக அளவில் எழுதப்பட்டிருக்கும் முன்னோடி இருப்பியல்வாத நாவல்களில் முக்கியமானது  ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 
Notes from Underground.

இருப்பியல் வாதம் என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாக,அந்தக் கோட்பாட்டிற்கு ஒரு புனைவு வடிவமாகவே அந்நாவலைத்  தந்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.



நான் செய்திருக்கும் அதன் தமிழ் மொழியாக்கம்
நிலவறைக்குறிப்புக்கள்
என்ற பெயரில்
நற்றிணை பதிப்பக வெளியீடாக விரைவில் வெளிவர இருக்கிறது.

கபாடபுரம் மின் இதழில் நிலவறைக்குறிப்புக்கள்குறித்து திரு சபரிநாதன் எழுதியிருக்கும் கீழ்க்காணும் செறிவான கூர்மையான கட்டுரையை இத் தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்...

வன்பாற்கண் வற்றல் மரம்-– சபரிநாதன்




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....