துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

அறிமுகம்


                எம் சுசீலா : தன் விவரக்குறிப்பு
​                 தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு,
                    எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்

வயது, பிறந்த நாள்:                       71 வயது. [ 27.02.1949]

பிறந்த ஊர் :                                      காரைக்குடி

தற்போதைய முகவரி :   
முனைவர் எம் சுசீலா,தமிழ்ப் பேராசிரியர்-பணி நிறைவு,

மதுரை
3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை,மதுரை 625014

மின் அஞ்சல் :susila27@gmail.com

கல்வித் தகுதி

  • இளம் அறிவியல் - வேதியியல் [B Sc- Chemistry ] 1965-68

  • முதுகலை தமிழ் [ M.A. ]-1968-70 - முதல் வகுப்பில் பல்கலைக்கழக  அளவில் மூன்றாவது தர வரிசையில் தேர்ச்சி[3rd rank]

  • தமிழில் முனைவர் பட்டம்- Ph D [தலைப்பு : காலப்போக்கில் தமிழ்ச்சமூகநாவல்களில் பெண்மைச்சித்திரிப்பு] - மிகச்சிறப்புடையதென்ற பரிந்துரையுடன் பட்டம்[ HIGHLY COMMENDED ]

  • பட்டயப்படிப்பு : மொழியியல்[ DIPLOMA IN LINGUISTICS]

  • சான்றிதழ்ப்படிப்பு : மலையாளம்,சமஸ்கிருதம் [CERTIFICATE  COURSE IN SANSKRIT AND MALAYALAM ]

  • பணி நிறைவுக்குப்பின் மீண்டும் ஒரு முதுகலைப்பட்டம் [ 2012]- யோகமும் மனித மாண்பும் : [ஆழியாறு அறிவுத் திருக்கோயிலும் பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து தொலைநிலைக்கல்வியில்வழங்கும் முதுகலைப்பட்டம்
 கல்வி பயின்ற இடங்கள்

  • உயர்நிலை வகுப்பு [S S L C] : அரசு உதவி பெற்ற காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் வரை தமிழ் வழிக்கல்வி.
  • புகுமுக வகுப்பு [ P U C ] :
  • இளம்  அறிவியல் பட்டப்படிப்பு - வேதியியலில்  [B Sc. ]
  • -சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி,பள்ளத்தூர்

  • முதுகலை தமிழ் - அழகப்பா கலைக்கல்லூரி, காரைக்குடி

  • முனைவர் பட்டம் : கல்லூரிப்பேராசிரியராகப்பணியாற்றியபடியே  பகுதி நேர ஆய்வாளராக - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்.

  • சான்றிதழ் மற்றும்  பட்டயக்கல்வி : மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாலை நேரக்கல்லூரி

  • முதுகலையோகமும் மனித மாண்பும்- பாரதியார்பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி வழி.

பணி சார்ந்தவை

  • மதுரை பாத்திமா மகளிர் கல்லூரியில்1970 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தமிழ்த் துறைப்பேராசிரியப்பணி

  • இரண்டாண்டுக்காலம்[ 2002-04 ] துணை முதல்வராகவும் பொறுப்பு
 தமிழ்ப் படைப்பிலக்கியப்பங்களிப்பு

  • முதன் முதலில் எழுதிய  சிறுகதையே [ஓர் உயிர் விலை போகிறது ]  1979 ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற,அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம்.

  • தொடர்ந்து நூற்றுக்கணக்கான   சிறுகதைகள், கல்கி,கலைமகள்,கணையாழி, ஆனந்த  விகடன்,தினமணிகதிர்,அமுத சுரபி,மங்கையர் மலர், அவள்விகடன்,புதிய பார்வை, வடக்கு வாசல்,செம்மலர் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன : அவற்றுள் பலசிறுகதைகள் கன்னடம், மலையாளம், இந்தி,ஆங்கிலம், வங்கம், ஃப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

  • ’’கண் திறந்திட வேண்டும்’’’ என்னும்  சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித்தொடர் வழி,நான் படிக்கணும்என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.

  • கோவை ஞானி அவர்கள்நடத்திய பெண்ணெழுத்தாளர்களுக்கான சிறுகதைப்போட்டிகளில் தொடர்ந்து நான்குஆண்டுகள் சிறப்புப்பரிசு

  • முனைவர் இரா பிரேமாஅவர்களால் தொகுக்கப்பெற்ற பெண்ணெழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் ‘’விட்டு விடுதலையாகி’’ என்னும் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது.

நூல்வெளியீடுகள்: [ 18 ]
காண்க- நூல்கள்

  • சிறுகதைத் தொகுப்புக்கள்    -  4
  • நாவல்                         -  1
  • கட்டுரைத் தொகுப்புக்கள்     - 6
  • மொழியாக்கங்கள்            - 7
விருதுகள்-மொழிபெயர்ப்பு சார்ந்து..

  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் அசடன்  நாவல் [’இடியட்’] மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்-2013
  • 2012 ஆம் ஆண்டுக்கான  கனடா தமிழிலக்கியத் தோட்டவிருது

  • நல்லி திசை எட்டும் மொழியாக்கவிருது -பாஷாபூஷண்
  • தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி யூ போப் விருது
  • தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழாவில் உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி -  இணைப்பில் http://www.youtube.com/watch?v=qAyrjg2S-Xc
  • ரஷிய கலாசார மையமும் விஷ்ணுபுர இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய விழாவில் ‘தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’என்றதகுதிப்பட்டயம்,
  •  விழாவில் உருவாக்கப்பட்ட காணொளிக் காட்சி https://www.jeyamohan.in/108217/#.XsImyUQzbIU  

பிற விருதுகள்

  • சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கானஅமரர் சுஜாதா விருது,தில்லி தமிழ்ச்சங்கம்.2013
  • மணல் வீடு இலக்கிய வட்டம் வழங்கிய அமரர் ராஜம்கிருஷ்ணன் நினைவு விருது-2018
  • பெண்கள் சார்ந்த முற்போக்கான -  தீவிரமான இலக்கிய, சமூகச் செயல்பாடுகளின்  பங்களிப்புக்களுக்காக
  • ஸ்தீரீ ரத்னா (2002)-மதுரை,8.3,2002- [பயோனியர் பாத்செட்டர்ஸ்
  • சிறந்த பெண்மணி(2004)-மதுரை [8.3.2004 [பாரதீய யுவ கேந்திரா]
 படைப்பிலக்கியம் சார்ந்த பிற
  • சாகித்திய அகாதமி வெளியிட்டிருக்கும் ‘’ இந்திய எழுத்தாளர் யார் எவர்’’  என்னும் நூலில்  [ WHO'S WHO OF INDIAN AUTHORS] தன் விவரக்குறிப்பு  இடம் பெற்றிருத்தல் 
  • சாகித்திய அகாதமி,  சிக்கிம்காங்டாக்கில் நிகழ்த்திய  இந்தியச்சிறுகதை வாசிப்புக்கூடுகையில்  பங்கேற்றுக் கதை வாசிப்பு [2015] 
 பிற துறை ஆர்வங்கள்,பங்கேற்புகள்
 சொற்பொழிவாளர் 

1.             மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
       நெல்லைமனோன்மணியம்சுந்தரனார்பல்கலைக்கழகம்
     அன்னை தெரசாமகளிர் பல்கலைக்கழகம்,காந்தி கிராம       
      கிராமீயப்பல்கலைக்கழகம்,
      உலகத்     தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அறக்கட்டளைச்

சொற்பொழிவுகள்.
2.           தமிழ்நாட்டில் பல கல்லூரிகள்இலக்கிய மேடைகள் ஆகியவற்றிலும் புது தில்லி             தமிழ்ச்சங்கத்திலும்  சொற்பொழிவுகள், அறக்கட்டளை உரைகள்
3.               பொதிகை தொலைக்காட்சியில் தற்காலத் தமிழ்ச்சிறுகதைகள் குறித்தஎட்டு உரைகள்;   தற்காலத் தமிழ்நாவல் குறித்த எட்டு உரைகள்.

4.           200 க்கும் மேற்பட்ட வானொலிச் சொற்பொழிவுகள்


5.           பொது மேடைகளில் பெண்ணியம் சார்ந்தும் இலக்கிய,சமூகச் செய்திகளை நீர்த்துப் போகச் செய்து விடாமலும் பல சொற்பொழிவுகள்

6.             பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளில் பங்கு பெற்று நெறியாளராகவும் ஆய்வாளராகவும் பல ஆய்வுக்கட்டுரைகளை அளித்துள்ளமை 

தமிழாய்வு சார்ந்தபங்களிப்பு

1.             கல்லூரிப்பேராசிரியப்பணியின்போது  நிறை நிலை மற்றும்  முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக.

2.             புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீயப்பல்கலைக்கழகம்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை,மற்றும்  முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும்   ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும்  இடம் பெறல்.

3.             தேசிய,மாநில,பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் கீழ்க்காணும் தலைப்புக்கள் உட்படப்பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள்வழங்கிக்  கருத்தரங்கங்கள் பலவற்றை  நெறிப்படுத்தல்

4.             சங்க இலக்கியத்தில் வெறியாட்டு, மடல் இலக்கியத்தில் மரபு மாற்றம், சங்க இலக்கியமும் தோடர்வாய்மொழி  இலக்கியமும், பாரதியும் இந்தியச்சிந்தனை மரபும், பாரதிதாசனில் பெண்மையும் திண்மையும், பாரதியும் ஔவையாரும், பெண் எழுத்துக்கள், பெண்ணிய வகைகளும் தமிழ்ப் புனைகதைகளும், விடுதலைக்கு முந்தைய பெண்நாவலாசிரியர்கள், நவீனப்பெண் கவிஞர்கள், நாட்டுப்புற இலக்கியத்தில் பெண் மதிப்பீடு, தமிழ்ப் புனைகதைகளும் பெண் எழுத்துக்களும், பெண்ணிய வகைகளும் தமிழ்ப்புனைகதைகளும், பெண்-பெண்ணியம்-பெண் எழுத்து, விடுதலைக்குமுன் தமிழ்ப் புனைகதை வெளியில் பெண், தமிழ்ப்புனைகதைகளில் போலிப்பெண்ணியம் ,பாரதிதாசனும் தமிழ்நாடக மரபும்   ஆகியவை அவற்றுள்சில.

தமிழோடு தொடர்புகொண்டதாக வழங்கியுள்ள சில  ஆங்கிலக்கட்டுரைகள்

1.                  Some Cryptotypes in Tamil

2.                  Baby Words in Brahmin Language

3.                  Periodisation in Tamil Social Novels [Published in The Jounal Of Asian Studies] 

4.                  Native Women Writers as Champions of Human Rights

5.                  Impact of Gender Discrimination on The Life Of Karaikal Ammaiyar

6.                  Feminist Reading of 'Eco-Aesthetics'-  Ugcsponsored National Level Symposium on Environmental Aesthetics, Dept Of Phlosophy, Arul Anandarcollege, Madurai

7.                  Tamil Religious Traditions and World Religions- National Seminar, School of Religions, Philosophy and Humanist Thought, Madurai Kamaraj University

பிற தகவல்கள்

கல்வித் துறை

தமிழ்நாட்டின்  பல  தனியார் தன்னாட்சிக்  கல்லூரிகள் [டோக்பெருமாட்டி கல்லூரி,மதுரை, அமெரிக்கன் கல்லூரி,மதுரை, தியாகராசர்கல்லூரி,மதுரை, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சிவகாசி,விவி வன்னியப்பெருமாள் கல்லூரி,விருதுநகர்,பராசக்தி கல்லூரி,குற்றாலம் ,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அன்னை  தெரசா மகளிர்பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகம்ஆகிய பல கல்வி நிறுவனங்களின் தமிழ் இளங்கலை, முதுகலை பாடத் திட்டக்குழுவில் [BOARD OF STUDIES] உறுப்பினராகவும், உயர் மட்டக்குழு [PANEL MEMBER ] உறுப்பினராகவும்  பணியாற்றியமை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரையிலுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதலியவை நடத்திய   இளம் விரிவுரையாளர்களுக்கான புத்தொளிப்பயிற்சி முகாமிலும்  [REFRESHER COURSE] /பணி மனைகளிலும்  வல்லுநராகப் பங்கேற்பு  

பல்கலைக்கழக ஆசிரியர் நியமனக்குழு/ பதவி உயர்வுத் தேர்வுக்குழுவிலும் , கல்லூரிகளில் புதிய துறை தொடங்க ஒப்புதல் அளிக்கும் மேற்பார்வை உயர்நிலைக்குழுவிலும் பங்கேற்றமை.

படைப்பிலக்கியம் ,மொழியாக்கம்,கட்டுரை வாசிப்பு,கருத்தரங்கப்பங்கேற்பு சார்ந்த பிற   செயல்பாடுகள்...

  • தேசிய புத்தக நிறுவனம் மற்றும் சாகித்திய அகாதமி வெளியிடும்  நூல்களையும் மொழிபெயர்ப்புக்களையும்  அவை வெளிவரும் முன்பு மதிப்பீடு செய்து செம்மைப்படுத்தும் பணி  

  • பணிநிறைவுக்குப்பின்புது தில்லியில்வசிக்க நேர்ந்த ஏழாண்டுக்காலகட்டத்தில் 
            ஜே என் யூ பல்கலைக்கழக மாணவர்களிடையே மொழியாக்கநுட்பங்கள் குறித்த உரை.

  •   ‘கதாஅமைப்பில் ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் குறித்த உரை.

  •   தில்லி தமிழ்ச்சங்கத்தில்தமிழ் இன்றுஎன்னும் தலைப்பில்நிகழ்ந்த  கருத்தரங்கில்      [2010] 50 ஆண்டு காலப்புனைவிலக்கியம் என்னும் அமர்வுக்கு நெறியாளுகை 

  • புதுதில்லி, லால்பகதூர் சாஸ்திரி தேசியசமஸ்கிருத வித்யா பீடத்தைச்சேர்ந்த பெண்ணியக்கல்வி மையத்தில்புராண காப்பிய நாயகிகள் குறித்த மறு உருவாக்கம் [ [FEMINIST  RE-CREATIONS OF MYTHOLOGICAL HEROINES] என்னும் தலைப்பில்  நிகழ்ந்த தேசியக்கருத்தரங்கில் பங்கேற்று மீட்டுருவாக்கத்தில்  தமிழ்க்க்காப்பியக் கதாநாயகியர் [RE-CREATIONS OF EPIC HEROINES IN TAMIL LITERATURE] என்னும் தலைப்பில்  ஆய்வுக்கட்டுரை வழங்கியமை.
 நாடகத் துறை

  1. கோழிக்கோடு பல்கலைக்கழகம்  திருச்சூர் நாடகப்பள்ளியுடன் இணைந்து நடத்திய நவீனநாடகப் பயிற்சிபணிமனையில் பங்கேற்றுப்பயிற்சி பெற்றிருத்தல் [1978]

2.             மதுரை நிஜநாடக இயக்கத்தாரால் நிகழ்த்தப்பட்டஇருள் யுகம்
நாடகத்தில்[1994] ஒருபாத்திரமாகப் பங்கேற்பு-நடிப்பு

வலைத் தளப் பதிவர்

 2008ஆம் ஆண்டில் தொடங்கி 
www.masusila.com   என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி எழுதி வருதல்

பெண்ணியம் சில புரிதல்கள், ஆண்டாளின் பெண்மொழி ஆகியபெண்ணியம் சார்ந்தகட்டுரைகள், சிறுகதைப்பதிவுகள், இமயத்தின் மடியில், சிக்கிமை நோக்கி  போன்ற பயணக்கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் , சமூக விமரிசனங்கள், திரைப்பட விமரிசனக்கட்டுரைகள்,தற்காலக் கல்விமுறையின் போக்கு  ஆகிய பலவும் இந்த வலைத் தளத்தில் பதிவாகி வருகின்றன.

 பயணங்கள்செய்வதிலும்  புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம்

இந்தியாவில் பல இடங்களில் மேற்கொண்ட பயணங்களோடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பியநாடுகள், அமெரிக்கா,கனடா, ரஷ்யா ஆகிய பலநாடுகளுக்குப் பயணம் செய்திருத்தல்



தொடர்புக்கு;
susila27@gmail.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....