துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.12.20

‘தடங்கள்’ - நூல் அறிமுகம்,பெ.விஜயகுமார்.

 https://bookday.co.in/professor-m-a-susilas-novel-thadangal-book-review/

நூல் அறிமுகம்:

பேராசிரியர் எம்.ஏ.சுசீலாவின் ‘தடங்கள்’ நாவல்: பெண்களின் அகம், புறம் இரண்டையும் சித்தரிக்கும் பெண்மையச் சித்திரம் –
பெ.விஜயகுமார்
நூல்: ‘தடங்கள்’ நாவல்
ஆசிரியர்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலா
பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்

பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி முடித்து இன்று எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பெண்ணியலாளர் என்று தமிழ் எழுத்துலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர். தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ’நிலவறைக் குறிப்புகள்’, ’இரட்டையர்’ ஆகிய ரஷ்ய நாவல்களை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் சிரமமான பணியில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். மொழிபெயர்ப்புப் பணிக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி – திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் விருது. ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சிறுகதை எழுத்தாளர்களுக்கான சுஜாதா விருது, ராஜம் கிருஷ்ணன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பெண்கள் சார்ந்த செயல்பாடுகளுக்காக ‘ஸ்தீரீ ரத்னா விருது’, ’சிறந்த பெண்மணி விருது’ ஆகியனவும் பெற்றுள்ளார். சொல்வனம்.காம், ஊடறு.காம், தினமணி.காம், கனலி ஆகிய இணைய இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார் இவரின் முதல் நாவலான ‘யாதுமாகி’ ஆங்கிலத்தில் ‘Devi the Boundless’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம், பெண்ணியம் சார்ந்த ஆறு  கட்டுரைத் தொகுப்புகளையும் சுசீலா வெளியிட்டுள்ளார்.

‘தடங்கள்’ நாவலில் கடிதங்கள் வழி எழுதிச் செல்லும் வடிவத்தைக் கையாண்டு சுசீலா வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்துவும், சமூகச் செயற்பாட்டாளராக பணி நிமித்தம் நாடெங்கும் சுற்றிவரும் நந்தாவும் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே நாவலாக விரிந்து செல்கின்றன. மனந்திறந்து எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்கும்போது இவ்விரு தோழிகளுக்கிடையில் நிலவும் நெருக்கத்தையும், அன்பையும்  தெரிந்து கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் நிறைந்துள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியைகள் பணியாற்றுவதை நாமறிவோம். அவர்களில் சிந்து போன்றதொரு அர்ப்பணிப்புள்ள ஆசிரியையைக் காண்பதரிது என்பதை நன்கு அறிவோம். மனித உறவுகளில் அனைத்திலும் உன்னதமானது ஆசிரியர் – மாணவர் உறவாகும். என்பதற்கு சாட்சியமாய் சிந்து விளங்குகிறார். அவரின் ஆருயிர்த் தோழி நந்தாவும், சிந்துவுக்கு இணையான தொழில் அறம், சமூக அக்கறையுடன் பரிணமிக்கிறார். இருவேறு துறைகளில் பணியாற்றினாலும், அவர்கள் இருவரும் பெண்ணியம், மனிதநேயம் ஆகிய புள்ளிகளில் ஒன்றிணைவதைக் காண முடிகிறது.
சிந்து போன்று அர்ப்பணிப்போடு ஆசிரியர் பணியை மேற்கொள்பவர்களுக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கொடுத்து அரசு கௌரவிப்பதில்லை என்பது அவலமே. நல்லாசிரியர் விருதினை எப்படிப்பட்டவர்கள் ‘வாங்குகிறார்கள்’ என்பது தெரிந்ததுதானே. மாணவிகளுக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை காட்டும் கடமை உணர்வு மிக்க பேராசிரியராக சிந்து இருக்கிறார். உடன் பணியாற்றும் ஆசிரியைகளுடன் தோழமையுடன் பழகும் சிந்து கல்லூரி ஆசிரியர் சங்கமான மூட்டா எனும் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதனால் சிந்துவின் உலகம் பரந்து விரிந்து, அர்த்தமுள்ளதாக உள்ளது. “என்னைச் சுற்றி உதிரி உதிரியாய் எத்தனை மாதிரிகள்” என்று அவரே வியக்கும் வண்ணம் மாணவிகள் புடை சூழ வெற்றிகரமான பேராசிரியராக சிந்து திகழ்கிறார்.
கல்லூரி வளாகத்துக்குள் அடைபட்டிருக்கும் மாணவிகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக சிந்து திகழ்ந்தாரென்றால், நந்தா சமூகச் செயற்பாட்டாளர் என்ற முறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண விழைகிறார். இதனால் நந்தா வழக்கு, விசாரணை, அதிகாரிகளிடம் முறையிடுதல், கருத்தரங்குகளில் பங்கேற்றல் என்று பம்பரமாய்ச் சுழன்று வருகிறார்.
நந்தாவும், சிந்துவுக்கு இணையான தொழில் அறம், சமூக அக்கறையுடன் பரிணமிக்கிறார்.

இருவரின் கடிதங்களிலும் ஆணாதிக்கச் சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களின் சொல்லித் தீராத சோகங்கள் சொற்சித்திரமாய் வரையப்பட்டுள்ளதைக் காண்கிறோம். நந்தாவிடம் சித்ரா, வாணி, செந்தாமரை, ரமணி, ஹேமா, சுஜாதா, பத்மா, கலா போன்ற பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிந்து பகிர்ந்து கொள்கிறார். நந்தா தன் பங்கிற்கு சோலையம்மா, முத்தரசி, மல்லிகா, நிருபமா ஆகியோர் சந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளைச் சிந்துவிற்கு விளக்குகிறார். ஆக பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் சோக கீதங்களின் தொகுப்பாக, சிறுகதைத் தொகுப்பு போல இந்த நாவல் காணப்படுகிறது. பெண்ணியம், இல்லறம், மனிதநேயம் போன்ற மனித மாண்புகள் இந்தப் பெண்களின் கதைகளுக்கிடையில் ஊடாடிச் செல்கின்றன.
தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் உரசல்களினால் ஏற்படும் விபரீத விளைவுகளை நாவல் காட்சிப்படுத்துகிறது. மனித உறவுகள் மென்மையான இழைகளால் இணைக்கப்பட்டதுதானே! இதனைப் போற்றிப் பாதுகாப்பதில் சிறு தவறு ஏற்பட்டாலும் விரிசல் ஏற்படுவது இயல்பாகிறது. இல்லறம் கண்ணாடி பாத்திரம் போன்றது. மென்மையுடன் கையாளப்படவில்லையெனில் உடைந்து சிதறி விடுகிறது. அல்லது கீறலேனும் விழுந்து விடுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து நின்றால் மட்டுமே இல்லறத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை கதாபாத்திரங்கள் வழி நாவலாசிரியர் உணர்த்த விரும்புகிறார். இல்லறம், துறவறம் இரண்டும் அறன் வழிப்பட்டதுதான் என்பதையும் சாட்சியங்களுடன் சுசீலா நிரூபிக்கின்றார்.


நாவலாசிரியர் சுசீலாவின் பெண்ணியம் மென்மையானது. “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்” என்று பாரதி சொல்வது போல் இருபாலரும் மானுடராய்க் கைகோர்த்து அன்புடனும், அறத்துடனும் வாழ்ந்திட வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகின்றார். பெண்ணியம் ஆண்களை எதிரிகளாகக் கருதுவதல்ல. ஆண்களும், பெண்களும் தங்களை இணையர்களாகப் பாவித்துக் கொள்ள வேண்டும் என்பதே சுசீலா வலியுறுத்த விரும்பும் பெண்ணியம் ஆகும். சுசீலா வக்கிர மனம் படைத்த முரளி, வன்முறை வெறியாட்டம் ஆடும் மதன் போன்ற தவறிழைக்கும் ஆண்களை மட்டும் படைக்கவில்லை. ஊனமுற்ற  மல்லிகாவுடன் முழுமையான தாம்பத்திய வாழ்வு வாழ முடியாது என்பது தெரிந்தும் அவளை மணந்து அவளுக்கு உற்ற தோழனாய் வாழ்நாள் முழுவதும் இருந்திடும் தினகரனையும் படைத்துள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளின் வாழ்வில் சிறிதும் குறுக்கிடாமல் அவர்கள் விரும்பும் வாழ்வை வாழ்ந்திட வழிவிட்டு நிற்கும் ஃப்ரான்சிஸ் போன்ற ஆண்களும் இவ்வுலகில் இருப்பதை வாசகர்களுக்குக் காட்டுகிறார்.
சிந்துவுடன் பணியாற்றி வரும் ஹேமா, நந்தா குறிப்பிடுகின்ற நிருபமா இவர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் பருமனான பாத்திரங்களாக  நாவலில் பரிணமிக்கிறார்கள். ஹேமாவின் கணவன் முரளி தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறான். ஹேமாவின் அழகையும், வசீகரத்தையும் பயன்படுத்தி அவளை மேலதிகாரிகளுக்கு காட்சிப் பொருளாக்கி பதவி உயர்வு பெறவேண்டும் என்று அற்ப ஆசை கொள்கிறான். உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய தன்மானம் மிக்க ஹேமா தன்னால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள முடியாது என்பதை நிதானத்துடன் சொல்லி அவனைத் திருத்த நினைக்கிறாள். அவன் திருந்துவதாக இல்லை. ஒரு நாள் நிலைமை எல்லை மீறிச் சென்று காமுகன் ஒருவனுக்கு அவளை விருந்தாக்கத் திட்டமிடுகிறான். ஹேமா வெகுண்டெழுந்து ஹோட்டல் அறையைவிட்டு வெளிவருவதுடன் தன்னைச் சீரழிக்க நினைக்கும் முரளியுடனான வாழ்க்கையிலிருந்தும் வெளி வந்து விட வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுக்கிறார்.  தன்னையும், குழந்தையையும் கணவனின் உதவியின்றி பராமரித்துக் கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் அவள் வெளியேறுவதைப் பார்க்கிறோம்.
நிருபமா பாரதி கனவு காணும் புதுமைப் பெண்ணாக வலம் வருபவர்.   ’இணையற்றவள்’ என்பதே நிருபமா என்ற சமஸ்கிருதப் பெயரின் அர்த்தமாகும். தன்னுடைய பெயருக்கு இலக்கணமாக வாழ்ந்து வரும் நிருபமாவை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைத்து விட முடியாது. திருமணம் என்ற பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் தவிர்க்க முடியாதது என்பதை நிருபமா ஏற்றுக் கொள்ளவில்லை. “பெண்ணோ ஆணோ – அவங்க பொறந்ததிலே இருந்து முகம் தெரியாத; சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தருக்காகவே வளர்க்கப்படுவது எனக்கு ஒரு உறுத்தலா தோணுகிறது. அதிலும் ஒரு பெண்ணோட வாழ்க்கையிலே கல்யாணம்கிறதை மட்டுமே அதீத முக்கியத்துவமுள்ளதாக எல்லோரும் நினைக்கிறது எனக்குள்ளே ஒவ்வாமையை உண்டாக்கியுள்ளது” என்று நிருபமா தன்னிலை விளக்கம் தருகிறார். தன் சொந்த விருப்பத்தினால் மட்டுமே தனி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவள் நிருபமா. காற்றுக்கென்ன வேலி என்பது போல் தனி மனித சுதந்திரத்திற்கு தடையேதும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்பதில் உறுதியாக நம்பும் பெண்மணியாக நிருபமா உயர்ந்து நிற்கிறார்.
குடும்ப வன்முறைகள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருப்பதைப் பார்க்கிறோம். மனைவியை அடிப்பதைத் தவறாகவே எண்ணாத ஆண்கள் நிறைந்த சமூகமாகவே இந்தியச் சமூகம் இன்றும் விளங்குவது வியப்பளிக்கிறது. கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கி, வீடடங்கி இருக்கும் காலத்தில் குடும்ப வன்முறைகள் கூடியுள்ளதாக தகவல் உள்ளது. குடிப் பழக்கம் குடும்ப வன்முறை அதிகரிப்பதற்குக் காரணமாகிறது என்ற கூற்றும் நிலவுகிறது. குடும்ப வன்முறையின் உச்சம் சில சமயங்களில் கொலையிலும் முடிவதுண்டு.
தன் கல்லூரி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரமணி என்ற ஏழைப் பெண் அவளின் கணவனால் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை தன் தோழி நந்தாவுக்கு கடிதத்தில் சிந்து விளக்குகிறாள். அரசு ஊழியனான மதன் திருமணத்தின் போதே தன் மனைவி குடும்பத்தின் ஏழ்மையை நன்கு அறிந்தவன்தான். ஆதரவற்ற தன் பெற்றோர்களுக்கு தன்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து ஒரு சிறுதொகையை கொடுக்க வேண்டும் என்பதை ரமணி அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாள். இருப்பினும் அதை விரும்பாத மதன் அவளைத் தினமும் துன்புறுத்தி வருகிறான். கைக்குழந்தையுடன் இருந்த ரமணியை ஒரு கொடிய இரவில் கொன்று விடுகிறான். வருவாய்த்துறையில் வேலை பார்த்த மதனால் கொலைக் குற்றத்தை மறைத்துத் தப்பிக்க முடிகிறது.
ஆசிரியர்களையும் அலுவலர்களையும் திரட்டி ரமணியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் சிந்து நடத்திப் பார்க்கிறார்.  ரமணியின் மரணம் கொலைதான் என்பதற்கு தக்க ஆதாரங்களாக அவள் பெற்றோருக்கு எழுதிய பல கடிதங்கள் இருக்கின்றன என்பதை சிந்து அறிகிறாள். ரமணியின் பெற்றோரைச் சந்தித்து அந்தக் கடிதங்களை எல்லாம் பெற்று வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். மகளே இறந்தபின் இந்த வழக்கு விசாரணை எல்லாம் எதற்கு என்று அரை மனதுடன், பயத்துடனேயே கடிதங்களைக் கொடுக்கின்றனர். ஆனால் மதன் அவர்களை மிரட்டித் தனக்குச் சாதகமாக எழுதி வாங்கிக் கொள்கிறான் என்பதறிந்து சிந்து மனம் பதறுகிறாள். மனைவியைக் கொன்ற மதன் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துவிடக் கூடாது என்ற அவளின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவிகள்  சந்திக்கும் பிரச்சனைகள் உயர்கல்வித்துறையில் இருப்போர் அறிந்ததே. ஆராய்ச்சிக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறி நடந்துகொள்வது வாடிக்கையாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட முத்தரசி என்ற பெண் நந்தாவிடம் உதவியை நாடி வருகிறாள். இதிலும் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருமளவிற்கு முத்தரசியிடம் போதிய சான்றுகள் இல்லை என்பதறிந்து நந்தா வருந்துவதைக் காண்கிறோம்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே என்று தரவுகள் சொல்கின்றன. சிந்துவின் கெட்டிக்கார மாணவிகளுள் ஒருவரான வாணி அற்ப விஷயத்திற்காக தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டதறிந்து சிந்து மனம் கலங்குகிறார். அன்றிலிருந்து ”கல்லூரிப் படிப்பு முடித்து விடைபெறும் இறுதியாண்டு மாணவிகளிடம் வாழ்வின் எந்தச் சூழலிலும் தற்கொலைக்குத் துணிய மாட்டோம்” என்று உறுதிமொழி வாங்குவதை வாணியின் நினைவாக சிந்து வழக்கமாக்கிக் கொண்டதை தன் தோழி நந்தாவிடம் தெரிவிக்கிறாள்.

மூட்டாவின் தீவிர உறுப்பினரான சிந்து தான் கலந்து கொண்ட போராட்ட அனுபவங்களையும் தன்னுடைய தோழியிடம் பகிர்ந்து கொள்கிறார். 1970களில் தனியார் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பணி நிலை படுமோசமாக இருந்தது. பணி பாதுகாப்பின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் கல்லூரி ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் இருந்தனர். நிர்வாகங்கள் அவர்களுக்குரிய முழுச் சம்பளத்தையும் கொடுப்பதில்லை. பெண் ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு எடுக்கும் வசதிகூட இல்லாமலிருந்தது. மூட்டா நடத்திய தொடர் போராட்டங்களால்தான் கல்லூரி ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றனர். சிந்து தன் தோழிகளுடன் இணைந்து மூட்டா போராட்டம் தங்கள் கல்லூரியில் முழுமையாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார். மதுரை காக்கா தோப்பு தெருவில் இருக்கும் மூட்டா அலுவலகத்திற்குச் சென்று சங்கத் தலைவர் தேவராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்கத் தயங்கும் ஆசிரியைகளுக்கு போராட்டத்தின் அவசியத்தை விளக்கிச் சொல்கிறார். போராட்டம் வெற்றியுடன் முடிந்து சம்பள உயர்விற்கு அரசு ஒத்துக் கொண்டு ஆணை பிறப்பிக்கிறது. புதிய சம்பள விகிதம் குறித்த செய்திகளை, போராட்டத்திலே பங்கேற்காத பேராசிரியை கலா ஆசையுடன் தெரிந்து கொள்ள விரும்புவது கண்டு சக ஆசிரியைகள் கேலி செய்வதை சிந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமாற்றமடைந்து அடுத்த போராட்டத்தில் அவரும் கலந்து கொள்வார் என்பதே சிந்துவின் நம்பிக்கை. அதுதானே சங்கப் பொறுப்பாளருக்கு அழகு!
நாவலில் உள்ள இரு கதை சொல்லிகளில் ஒருவரான சிந்து மதுரை நகரில் இருப்பதால் மதுரை நகர் குறித்த நிறைய செய்திகள் காணக் கிடைக்கின்றன. கல்லூரி வளாகங்களை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய நாவல்கள் வந்துள்ளன. தனியார் கல்லூரி நிர்வாகம் இழைத்திடும் கொடுமைகள் குறித்து எழுபதுகளிலேயே ‘பொன் விலங்கு’ நாவலில் நா.பார்த்தசாரதி எழுதியுள்ளார். சுசீலாவின் ‘தடங்கள்’ நாவலும் இன்றைய பெண்கள் கல்லூரி வளாகங்களின் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. உயர்கல்வி பெற்றதனால் பெண்கள் நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் நிறைய போதாமைகள் இருப்பதையும் நாவல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
—பெ.விஜயகுமார்


25.11.20

‘Devi – The Boundless’-Review in MUSE INDIA

          ‘Devi – The Boundless  A Daughter’s Inward Journey’

                                            Lakshmi Kannan

Devi: The Boundless – A Daughter’s Inward Journey |
Novel in Translation |
M A Susila (Tamil original) | Translated by V Kadambari |
Emerald Publishers, Chennai | 2020 | ISBN 9789389080582 |  220 | pp 191

 http://museindia.com/Home/ViewContentData?arttype=book%20review(s)&issid=94&menuid=9177

                                              

                                            A flowing river

Heraclitus, the Greek philosopher, said famously: ‘No man ever steps in the same river, for it’s not the same river and he is not the same man.’ The water we stepped into has already flowed on swiftly, and the new waters bathing our feet teach us that we too should flow on, and not stagnate.  

Yaadumagi, the original novel in Tamil by M A Susila, was very well received by sensitive readers and discerning critics alike. It is such a good thing that we now have the book in English translation as DeviThe Boundless by    V Kadambari, an erstwhile Associate Professor of English with Ethiraj College, Chennai. Her stint as Professor and Head of Gender Studies with RGNIYD (Rajiv Gandhi National Institute of Youth Development) may have given her the desire and conditioning to translate this novel, undoubtedly as a labour of love.

Readers in English will get to know Susila, an eminent writer, outstanding critic and an excellent translator. Her publications include a novel, four collections of short stories, and six collections of critical essays, besides several books of translations. Her translations of the legendary Fyodor Dostoevsky’s masterpieces deservedly got her a prestigious award from Canada. Her translations of the short stories by luminaries such as Mahashweta Devi and Asha Purna Devi have a lucid readability. In the recent past, she translated Harinder Sikka’s Calling Sehmat, a book that inspired Meghna Gulzar to make her award-winning film ‘Raazi’.

Translations per se help us befriend cultures and languages other than our own. Without them, we’re like strangers to each other. Only a healthy interest in a culture and its ethnicity, both one’s own and that of others, can foster translated works. To share an insight from sociolinguistics, Joshua A. Fishman*, a specialist in multilingualism, observes: ‘ethnicity that functions as a collective self-recognition as well as an aspect of its recognition in the eyes of outsiders’ works well for a translation.  

In her Foreword to the novel, Hon’ble Justice Prabha Sridevan remarks that ‘the pen of the translator is like the bee, carrying the pollen to far off places, and enriching the soil she takes from and the soil she takes to’, taking off from a verse extolling travel in Aitareya Brahmana that says, ‘Therefore wander!’ And in her Translator’s Note Kadambari remarks: ‘Subversions and autobiographies of women are milestones in feminist literary tradition’, citing the autobiographies of Asha Purna Devi, Ismat Chugtai, Devaki Nilayangode and Durga Khote among others that ‘speak about the economic and physical exploitation of women’. It is classified as ‘recovery literature’ because it helps women ‘recover their self-esteem, recognize their worth and gain balance’. Malavika Karlekar calls them ‘Personal Narratives’ in her excellent book Voices from WithinEarly Personal Narratives of Bengali Women in the times of 19th and 20th century Bengal. Devi: The Boundless is a welcome addition to this genre.   

Devi, the eponymous character is a child who is widowed while still at school. She goes through a turbulent life before she emerges as a dedicated educationist, a strong mother, a supportive friend and a guide to many people. We understand the full import of the Tamil title Yaadumagi only after we read the entire novel, for Devi touched the lives of so many people, especially the economically deprived ones. They benefited by her timely help in resuming their studies, getting jobs, and Chelli, the daughter of a labourer even gets a mid-day by Devi’s clever arrangement.     

The book is a fictionalised recall by Devi's daughter Charu. Devi becomes a child widow when her boy husband drowns in the sea. Charu captures the arduous journey of Devi who struggles to complete her formal education and serves the student community with dedication. Education for girls being a contentious issue, Devi encounters misogynist objections from within her family to her studies with a mixture of concealed envy and resentment. While her father Sambasivam and her brother Babu are supportive, it is her mother Annamma who helps her after they die, braving the taunts and jibes of her relations.

Devi goes through these traumatising experiences to emerge as a strong, independent woman with a steely resolve to go ahead with her goals in life, no matter what comes in the way. She teaches mathematics in school, rises as the Head Mistress and is always dignified and impeccably dressed in nice silk sarees. She is reticent, for very early on, she learns not to wallow in self-pity, or wear her sufferings on her sleeve. She keeps her emotions leashed and is misunderstood for not shedding tears even when her dear father dies. She receives the news of her husband’s death too, with the same stoic acceptance. Charu notes the softer side in her as a caring mother who in addition, personally tends to infants born to her acquaintances like they were her own. And in the way she nurtures a lush garden blooming with night queen flowers with their heady fragrance, the canopy of mullai, a special variety of jasmine, the Edward Rose in a pot, especially for her daughter, papaya and curry leaf trees, plantain and so many other flowering plants that bear testimony to her green thumb.        

The years spent in Ice House in which Sister Subbalakshmi, the famous reformist runs a school for widowed girls, lay the foundation for Devi’s independent spirit. She actualises her ideologies and goals by sheer grit, courage and a certain alertness, a most important quality for women to cultivate.  Her sharp intelligence knifes through tricky situations when her siblings hatch a plot to trap her in a financial commitment.  

Subsequently, she marries an army officer, enjoys a brief period of conjugal life and a daughter is born to them. When her husband dies, she resolutely goes ahead with the construction of the house that she had planned with him, undaunted by set-backs like a cheating contractor who absconds with her money. When the house is completed with a puja, the reader breathes in relief that Devi doesn’t have to live with her wily family anymore.    

Like other strong women who scripted the story of their lives, Devi responds warmly to people who are genuine. Sambasivam is her exemplary father who dedicates his life to her education, cycling to the Ice House in the hot sun to teach her math and other disciplines. His reformist friends include Harindranath Chattopadhyay and Annie Besant who gives him a stinging rap about Devi’s child marriage: ‘Mr. Sambasivam, I do not know what to say about the decision taken by a scholar like you…’ After his death, her mother lives like a ‘dependent’ with her brother, despite having some money of her own that is used by him most unscrupulously. This docile and timid looking lady has hidden reserves of strength. Instead of confronting her family, she resorts to silent strategies to help her daughter. With a complete understanding of her mother’s socio-cultural status, Devi tells her close friend Sylvia that her mother was ‘A great woman who sent me again and again to get educated, when there was something or other to prevent it…If only she had hesitated then, I would have been for my lifetime in the kitchens of my brothers, grinding and cooking.’  

Others who helped Devi are the Senior Mother in the convent at Conoor, Meenakshi, a London-trained lecturer at Queen Mary’s college, herself a child widow and daughter of the distinguished writer-reformist Madhaviah, and the interesting character Krishnan, a Gandhian and freedom-fighter on the run, who visits their home at midnight. He motivates Devi to marry again.

Etched vividly in Charu’s memory is her mother’s fondness for bright coloured silk sarees that she would always wear with a white blouse, the diamond nose pins flashing on both side of her nose as she steps out of the puja room. The supple language of Susila’s language is laden with the smell of the flowers in her mother’s garden, and Cinthol toilet soap that was used by her father. Equally, it could go grim to show the Ice House that ‘offered shelter to the women who lived a frozen life.’

Kadambari’s translation carries the flavour of the original. Her choice of words like ‘hammock’ for the Tamil dhooli is evocative. She keeps her diction simple and follows the curve of the lines given in the original. Interspersed with pictures of Devi, the book takes us back to the mystique of the black-and-white era.  Some chapter headings are so apt that they prepare us to what may follow. In structure, the narrative is non-linear, oscillating between the past, the present and the remote past, with the names of places and the year given within brackets. If chapter 1 begins in Karaikkudi, 1967, the very next chapter takes you back to Conoor 1942. We go travelling back and forth in time, to Madurai, Madras, Tiruvaiyaru, a city into which the river Cauvery flows. Whenever there is an impediment to her studies, Devi looks ‘steadily at the narrow channel through which the river Cauvery is flooding.’

You cannot contain a river. The very next chapter which is the last, is set in Rishikesh 2013, where the Ganga flows, carrying hundreds of prayer lamps lit by her devotees, floating on her waters.

Like Ganga, Devi flows on without looking back.

---------------------------------------------------------------------------------------------------------

*Fishman, Joshua A.  Language and EthnicityIn Minority Sociolinguistic Perspective. Cleveland, Philadelphia, USA, 1989, pg. 24.

15.11.20

பொன்னை விரும்பும் பூமியிலே..’- ’In a Materialistic World…

 

         பொன்னை விரும்பும் பூமியிலே..’- ’In a Materialistic World…

கல்கி இதழில் (13.6.1982 ) முன்பு வெளியான என் ‘பொன்னை விரும்பும் பூமியிலே..’என்னும் சிறுகதையைப்  பேராசிரியை வி காதம்பரி அவர்கள் In a Materialistic World…என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மைஸூரிலிருக்கும் த்வன்யலோகா வெளியீடான சாரஸா இதழில் ( 2020- Vol.No.35&36 ) அது வெளிவந்திருக்கிறது.

பொன்னை விரும்பும் பூமியிலே

  பிருந்தாவனத்தைப் பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகளுடனும், நெஞ்சு கொள்ளாத கற்பனைகளுடனும் அந்த ‘டூரிஸ்ட்பஸ்ஸிலிருந்து இறங்கிய நான்... ஒரு நிமிஷம் அதிர்ந்து போகிறேன்.

     இது என்ன..? நம்ம ஊர் ‘வைகை டேம்மாதிரி.. தான் இருக்கு!கூட வந்த நண்பர்களுக்கு ஆர்வத்தோடு அழைத்து வந்துவிட்டு, வருகிற வழியில், வண்டியெல்லாம் பிருந்தாவனத்தின் பெருமைகளை வாய் ஓயாமல் சளசளத்துக் கொண்டு வந்த நண்பர்களுக்குச் சப்பிட்டுப் போகிறது.

     நீ வரவரப் பெரிய ‘சினிக்ஆயிண்டு வரேப்பா!

            என் கலை உணர்வுகளும், ரசனை நரம்புகளும் கூர் மழுங்கிப்போய் க்ஷீணித்துக் கொண்டு வருவதை நாசூக்காய்ச் சுட்டிக் காட்டியவர்கள், ஆளுக்கொரு திசையில் நகர்ந்து போகிறார்கள்.

     நானும் கால்போன போக்கில் நடக்கிறேன்.  காவிரித் தாயைக் கட்டுக்குள் அடக்கி, அவளிடமிருந்து பொழியும் இயற்கைச் செழிப்புக்களைச் செயற்கைப் போலிகளுடன் கைகுலுக்க வைத்திருக்கும் அந்தப் பூமி.. இன்னும் என்னைக் கவர ஆரம்பிக்கவில்லை.  ஒரு வேளை.. நண்பர்கள் சொல்வது நிஜம்தானோ? என் பார்வையிலேதான் ஏதும் கோளாறோ? இத்தனை சுற்றுலா பஸ்களுக்கும், அவற்றிலிருந்து நெல்லிக்காய் மூட்டையாய் அவிழ்ந்து, ஏதோ சாம்ராஜ்யம் கொள்ளை போகிற அவசரத்தில், அந்த நந்தவனத்தின் அழகை அள்ளிக்கொள்ள விரைகிற கூட்டங்களுக்கும் இடையே.. நான்தான் முட்டாளாய்த் தெரிகிறேனோ? எத்தனை மாநிலங்கள்.. எத்தனை மொழிகள்.. ஒரு குட்டி இந்தியாவே அல்லவா இங்கே நகர்ந்து கொண்டிருக்கிறது!

     படிக்கட்டுக்களில் ஏறி மேலே போய், நீரைக் குடங்குடமாய்ப் பொழியும் பதுமைத்தாயின் கோயிலில் ஒரு வினாடி தாமதித்துவிட்டு அணைக்கட்டு மேலேறி நடக்கிறேன்.  இயந்திர வளர்ச்சியின் பிரம்மாண்டத்தில் அகண்ட காவிரி, சாதுப் பெண்ணாய் அடங்கி நடைபயிலும் காட்சி நெஞ்சை நெருடுகிறது.  மின் உற்பத்தியும், தொழிற் பெருக்கமும் அதன் பெரும் பயன்கள் என அறிவு இடித்துரைத்தாலும், உணர்வுகள் ஒத்துக் கொள்ளாமல் சண்டித்தனம் செய்கின்றன.  தன்னிச்சையாய்த் திரியும் காட்டு விலங்குகளைக் கூட்டிலடைத்துக் காட்சிப் பொருளாக்கும்போது மனதில் விளையும் சோகம், இப்போதும் சம்பவிக்கிறது.

     இரவு தன் ஆதிக்கக் கரங்களை நீட்டி அகிலத்தை அணைக்கத் தொடங்கும் வேளையில், குபீரென்று அந்த இருட்காட்டில் ஒளிப்பூக்கள் பற்றியெரிய ஆரம்பிக்கின்றன.

     ஓ.. இது.. பிருந்தாவனத்தின் இன்னொரு முகமோ?

     நடந்து கொண்டும், பேசிக்கொண்டும், கூட்டங் கூட்டமாய் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருந்தவர்கள், அந்த ஒரு கணத்துக்காகவே காத்திருந்தவர்கள் போல நிதானமாய், மின்னொளியில் வண்ணத் தெளிப்பு கோலங்களை அசைபோடத் தொடங்குகிறார்கள்.

     அணையின் மீது நடந்தது போதுமென்று முடிவு செய்துவிட்டுக் கீழிறங்கி வருகிறேன்.  வரிசை வரிசையாய்ப் படிக்கட்டுகள்.. ஒவ்வொரு படிக்கட்டின் சரிவிலும் நின்றுகொண்டு நிறம் மாறும் ஜாலங்களையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு மோதிப் பொழியும் நீறூற்றுக்களையும் வாய் பிளந்து ரசிக்கும் கூட்டங்கள்! படிகளின் இருபுற மருங்கிலும் பசுமையாய்ப் பரவியிருக்கும் புல்வெளிகள்.. அவற்றில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ஒரே அமைப்பிலான மண்டபங்கள்.. வெளிச்ச ஆரவாரங்களிலேயிலிருந்து விடுபட்டுத் தனிமையிலே இனிமை காண அங்கே விரையும் ஜோடிப் பறவைகள்... பிருந்தாவனம் என்ற பெயரை நியாயப்படுத்த வேண்டாமா என்ன ?

     கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன்.  ஏழு பத்தாகிறது, ஏழே முக்காலுக்குள் பஸ்ஸில் இருக்க வேண்டுமென்பது நினைவுக்கு வரக் கால்களை எட்டிப் போடுகையில்... எதிர்ச் சாரியில் தென்படும் காட்சி ஒன்று என் கண்களைக் கட்டி நிறுத்துகிறது.

     இளம் வாலிபன் ஒருவன் சக்கர நாற்காலியைத் தள்ளியபடி வர, அழகே உருவெடுத்தாற் போன்ற பெண்ணொருத்தி அதில் அமர்ந்திருக்கிறாள்.  புடவைக்குக் கீழ் தெரியும் அவள் பாதங்கள் சூம்பிப் போயிருப்பது, இங்கிருந்து பார்க்கையில் மங்கலாய்ப் புலனாகிறது.  வண்டியை நிதானமாய் ஓட்டியபடி, அந்தத் தோட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் கூட அவளுக்குச் சுட்டிக் காட்டி, அவன் விளக்கம் கொடுக்க...

     அந்த சந்தோஷத்தின் ஓர் இணுக்கைக் கூடத் தவற விட விருப்பமில்லாதவள் போல, அவள் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்து அனுபவிக்கிறாள்.  நீர்ப் பொழிவுகள் குறுக்கிடும் போதெல்லாம் கஷ்டப்பட்டு எம்பிச் சரிந்து கைப்பிடி நீரை அள்ளியிறைத்துக் குதூகலிக்கிறாள்.

     கைகோர்த்து உலாவிக் களித்துத் திரிய வேண்டிய ஒரு இடத்தில், இப்படிக் கால்முடங்கி வரும் ஏக்கத்தையோ, தன்னிரக்க உணர்வையோ கொஞ்சமும் வெளிக்காட்டாது, அவளைச் சந்தோஷப்படுத்துவதே லட்சியமாய் அவனும், அந்த நிலையிலும் கூட அவனை உல்லாசமாய் வைத்திருப்பதே நோக்கமாய் அவளும் நடந்து கொள்ளும் முறை... குறையை இயல்பாய் ஏற்றுக் கொண்ட பாங்கு...., என் எண்ணத்தில் பிறந்த பச்சாதாப உணர்வை மாற்றி, வியப்புக் குடையை விரியச் செய்கிறது.

     அந்தத் தம்பதியர் பேசும் மொழி விளங்கா விட்டாலும், வார்த்தைகள் காதில் விழாவிட்டாலும், அவர்களில் பாசவிழிப் பார்வைகள் சொல்லும் நேசக் கவிதைகள்..., பரஸ்பரம் அவர்கள் பூண்டுள்ள அன்பின் ஆழத்தையும் உறவுப் பிணைப்பையும் கதையாய் வெளியாக்க.... அவர்களை மகிழ வைக்கும் பிருந்தாவனம், அந்தக் காரணத்தாலேயே எனக்கும் கூட இப்போது அழகாய்த் தெரிகிறது.  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! எங்கள் இறைவா!’ என்று நெஞ்சு இரைகிறது.

     கண் பார்வையிலிருந்து அவர்களைத் தப்ப விடாதபடி இக்கரையில் நடந்து வந்த நான், படிக்கட்டின் குறுக்கீட்டால் கொஞ்சம் தயங்கிப் பிறகு திரும்பிப் பார்க்கிறேன்.

     மேல்படிக்கட்டின் விளிம்பருகே வண்டியை நிறுத்தி விட்டு, ஒரு குழந்தையைப் போல் அவளைத் தாங்கிச் சுமந்தபடி.... படிக்கட்டுகளில் இறங்கி ஓடுகிறான் அவன்.  கணவனைச் சுமக்க வைத்துவிட்ட குற்ற உணர்வோ, தயக்கமோ சிறிதும் இன்றி, அதையும் இனியதொரு அனுபவமாய் ஏற்று அவள், பூவாய் மலர்ந்து சிரிக்கிறாள் அவள்.  அந்தக் குற்ற உணர்வு, அவளுக்கு ஏற்பட்டு விடாத வகையில், அவள் தனக்கொரு இனிய சுமையே என்று உணர்த்துவதைப் போல அவளை லகுவாய்ச் சுமந்து கீழ்ப்படியில் அவளை உட்காரவைத்துவிட்டு வண்டியை எடுக்க அவன் மீண்டும் மேலேறி வருகிறான்.

     போலிப் பாசாங்குகளற்ற, அசலான ஆத்மாக்களைத் தரிசித்துவிட்ட சந்தோஷம், என் அடி மனதிலிருந்து பீறிவருகிறது.  முடமான மனைவியை வீட்டுக்குள் முடக்கிப் போட்டு அவள் வாழ்வையும் நொண்டியாக்கி விடாமல், வெளி உலகம் பார்க்க வைத்து, அங்கே.. பலர் காணத் தானே பணிவிடையும் செய்யும் அந்தக் கணவனின் பௌருஷம், என் கண்ணெதிரே விசுவரூபமெடுக்கிறது.  சக்கர நாற்காலி தள்ளும் அந்தக் கரங்களைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்ள மனம் பரபரக்கிறது.

     இதோ!.. கடைசிச்சரிவு! பிருந்தாவனமும், இந்த அனுபவமும் இதனுடன் முடியப் போகிற வெறுமை.. ஏக்கம்.. லேசாய்த் தலை நீட்டுகிறது.

     இம்முறை.. ஏனோ? அவள் படிகளில் தன்னைச் சுமக்க வந்த கணவனைக் கையமர்த்திவிட்டு, அவன் துணையுடன் விந்தி விந்தி மெல்ல இறங்கிப் போகிறாள்.  காரணம் விளங்காமல் தவிக்கும் கணவனுடன் சேர்ந்து நானும் கஷ்டப்படுகிறேன்.  ‘ஒரு வேளை, நான் பார்ப்பதைக் கவனித்திருப்பாளோ?.. அப்படியும்.. அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து கொண்டுதானே நான் தொடர்ந்து கொண்டு வருகிறேன்.. ம்.. தானும் நடக்க வேண்டுமென்ற ஆசையில்.. தன்னாலும் நடக்க முடிகிறதா என்று பார்க்கும் துடிப்பில் கூட அந்தப் பெண் அப்படிச் செய்திருக்கலாமே! மனம், கேள்வியை எழுப்பிச் சமாதானமும் காண்கிறது.

     நதிக்கரையை ஒட்டி வேலியோரமாய் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும ஐஸ்கிரீம் சுவைக்கிறார்கள்.  இனியும் தொடர்வது நாகரீகமில்லை என்ற உணர்வுடன், அவர்களிடமிருந்து மானசீகமாய் விடைபெற்றபடி பஸ்ஸுக்கு விரைகிறேன்.

     “என்னப்பா ‘சினிக்’! வந்து இறங்கின உடனே என்னவோ கோளாறு சொன்னியே!... இப்ப ஒரேயடியாய் மயங்கிப் போயிட்டியா?... இவ்வளவு ‘லேட்டா வரே..‘?

            நண்பர்கள், கேலி செய்தபடி வரவேற்கிறார்கள்.

     வண்ணக் களஞ்சியமானதொரு உலகில்... “பலப்பல நல்லழகுகள் சமைத்தாய்!என்று மனதுக்குள் பாரதியைப் பாடியபடி பஸ்ஸில் ஏறி உட்காருகிறேன்.  எனக்குப் புதியதொரு போதிமரமான பிருந்தாவனம், வைரப் புள்ளிகளுடன் கொஞ்சங் கொஞ்சமாய் நகர்ந்து மறைகிறது.

     பஸ், பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

     தூக்கம், கண்களைச் சுழற்றிக் கொண்டு வரும் நேரத்தில் பின் சீட்டிலிருந்து உரத்த குரல் ஒன்று... பிருந்தாவனத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறது.

     “என்னய்யா... பிருந்தாவனம்! வரவர... இந்த இடம் ரொம்பத் தான் கெட்டுப் போச்சு போங்க.  இங்கே வந்ததுமே ‘லைசென்ஸ்கிடைச்சிட்ட மாதிரி, அசிங்கமெல்லாம் பண்றாங்க.  ‘ப்ப்ளிக் ப்ளேஸ்லே இப்படி நடந்துக்கலாமான்னு ஒரு கூச்ச நாச்சம் வேண்டாமா?... இன்னிக்குப் பாருங்க! படிக்கட்டிலே ஒரு பொம்பளையை அலாக்காகத்தூக்கிட்டு ஒரு ஆளு ஓடிவரான்!... என்னமோ சினிமாக் காட்டறதா நெனப்பு இவங்களுக்கு!... எனக்கு வயிறு பகீர்னு பத்திக்கிட்டது, கண்ணை மூடிக்கிட்டுச் ‘சடார்னு அந்தப் பக்கம் நகர்ந்து போயிட்டேன்.

            அந்த நாற்காலிக் கோலத்தையும் பார்த்துவிட்டு கண்ணைத் திருப்பிக் கொண்டிருக்கக் கூடாதா நண்பரேஎன்று நினைக்கிற எனக்கு.. அந்தப் பெண், கடைசிச் சரிவில் கஷ்டப்பட்டு இறங்கிப் போன காரணம் இப்போது நன்றாகவே விளங்கிப் போகிறது.

                                     In a Materialistic World…

(M.A.Susila, Ponnai Virumbum Boomiyile Tamil, Pub in Kalki,13.6.1982)

Translated by V.Kadambari

I was bewildered for a moment as I got down from the tourist bus with a heart full of expectations and imaginations.

“Oh! What is this? Just like our Vaigai dam!” For the friends who had brought me there extolling throughout the trip the beauty of Brindavan, it is a total shock.

“You are becoming a cynic of late”. Having hinted at in a thoroughly civilised manner, the dwindling artistic nature and taste for the exquisite in me, they moved on in various directions.

I too walked on where my feet would take me. The place which has kept mother Kaveri within bounds and has allowed the arcadian surroundings with artificial beautification shake hands is yet to attract me. ‘May be … what friends say is true? May be something wrong in my perspective! Maybe I look silly among the tourists who, sprinkled like gooseberries all over by the various tourist buses, are rushing to drink up the beauty of the garden! How many states… how many languages? - a veritable mini India indeed!’

I climb the steps, and pause for a moment outside the temple of the deity who is untiringly pouring pots of water and proceed to stroll the length of the dam. It disturbs me much to see the otherwise broad and exuberant Kaveri timidly flowing due to technology. Though intelligence tries to din about the advantages like production of electricity and flourishing of traders, emotions wouldn’t accept the confinement. The sadness that envelops while looking at the caged animals which have wandered at liberty is felt now.

The lights come alive in the dark forest exactly when night extends its powerful arms to hug the universe.

‘Eh! This is another face of Brindavan is it?’ Those who are walking, talking and sitting in groups to eat, begin to gulp the byplay of the luminous designs as though they were waiting just for that moment.

I walk down the steps of the dam, the steps in rows … on each row crowds looking open jawed at the magically changing colours and the majestic fountains that vie with them! On either side of the steps the green lawns with uniformly built, resting places and couples who rush there in search of privacy from the light and the crowd - should not the name Brindavan be justified?

I look at the watch. It says 7.10. I remember the instruction to be in the bus before 7.45 and take hasty steps … but what I see on the opposite side rivets me. A young man is pushing a wheel chair on which is seated a beautiful girl. Her feet within the folds of the saree dimly reveal them to be crippled … he pushes the chair slowly and gently as he points out and explains the various attractions of the garden….

She seems to be enjoying every iota of the pleasurable experience. Whenever the fountains are neared she stretches herself to hold a handful of water with a childish mirth only to fall back limply within seconds.

His evident joy in making her happy though he may wish to under the circumstances hold her hand and walk around, and her only aim of keeping him happy despite her condition spreads the umbrella of surprise in my thoughts. The ease with which they have accepted the handicap alters pity that was my first reaction.

Though the couple’s language is not known, and the words are not audible, the mutual love explicit in their glances unfold a poetry revealing the story of their trust in each other and the strong bonding between them. It is reason enough to make Brindavan bewitching to me. My heart heaves a prayer of thanks, ‘Oh! For the millions of pleasant things in the world’.

Keeping them in focus, I walk on and when the steps intervene lose them for a moment. I hesitatingly turn to look at them. Leaving the chair on the top step he carries her like a child, and runs down the steps. Her face blossoms in sheer joy of the experience with no trace of guilt about making the husband carry her. He seats her on the last step and goes up to get the chair, not allowing her to in any way feel guilty and on the other hand makes her understand that she is a happy burden to him.

From my heart happiness bubbles up at having seen such natural souls which have no artificiality in them. The masculine charm of the husband towers before me for not allowing the crippled wife to be confined to her home but has on the other hand brought her out to be with all. My mind wishes to hold the hands which take care of her.

Here! The last slope! Brindavan and the experience in it will end… and a yearning lingers.

This time for some reason, she stops the husband who extends his hands to carry her, and walks haltingly with his help. With the husband, who is in agony for not knowing the reason, I too, am troubled. Would they have seen me watching them? I have been following them unobtrusively isn’t it? Maybe she wants to walk and has done so to know that she can also walk. My mind raises the questions and also tries to answer them.

They park the chair on the banks of the river and take ice-cream. Feeling that it is not right to follow them anymore, I take leave of them mentally and rush to the bus.

“Eh cynic! You grumbled so much when you got down! Now you are thoroughly mesmerised is it? … You are the last to arrive!”

Friends welcome me teasingly.

I recall Bharathi, In this multicoloured world…you have created manifold charms! As I occupy my seat. Brindavan my new found Bodhi, leaves my view slowly with sparkling diamonds.

Bus is speeding towards Bangalore. As sleep tries to overtake me a loud voice from the seat behind comments about Brindavan.

“What kind of place is Brindavan? As days go by this place is becoming rotten. As soon as they come here all kinds of vulgarities are indulged in as though licence is given. Should they not have public etiquette? See, today a fellow ran down the steps with a woman in his arms! As though showing a film! My stomach churned. I just closed my eyes and moved away”.

I who was reminiscing, think, ‘Friend, could you not have moved away after seeing the wheel chair?’

I knew just then in a flash why the girl insisted on labouring down the last slope.

 

 

 

 

 

14.11.20

'தடங்கள்' ஒரு பார்வை-தேனம்மை லெக்‌ஷ்மணன்

’தடங்கள்’ மதுரை மீனாட்சி புத்தக நிலைய வெளியீடாக வந்திருக்கும் என் இரண்டாவது நாவல். கடந்த ஐம்பதாண்டுக் காலமாக என் வாழ்வோடு கலந்துவிட்ட மதுரை மண்ணுக்குள்ளும், முப்பத்தாறு நெடிய ஆண்டுகள் என் உயிரோடு பிணைந்து எனக்குப் பரிச்சமாகியிருந்த கல்லூரிப் பணிச்சூழலுக்குள்ளும் கால்பதித்து நின்றபடி- பழகிய களத்தில் எனக்குத் தெரிந்த கதையைச் சொல்ல முயன்றிருக்கிறேன்.மானுட வாழ்க்கை,கதைகளுக்கான கச்சாப்பொருட்களால் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தாலும், படைப்பு மனம் ஏதோ ஓர் அகத் தூண்டுதலால் ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பாகத் தேர்வு செய்து கொள்கிறது.‘60களின் இறுதியிலிருந்து 2000த்தின் தொடக்கம் வரை நான் எதிர்ப்பட நேர்ந்த பலதரப்பட்ட வகைப்பாடுகளைச் சேர்ந்த மனிதர்களும், எனக்குள் அதிர்வுகளைத் தோற்றுவித்த பல சம்பவங்களும் என்னுள் பதித்திருக்கும் ’தடங்க’ளே இந்த ஆக்கத்தின் அடித்தளங்கள். நிஜமும் நிழலும் என்னுள் நிகழ்த்திய கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடர்ந்து சென்றபடி ஆட்டத்துக்கான காய்களையும் சூழல்களையும் கலந்தும் மாற்றியும் போட்டபடி இந்தப் புனைவை உருவாக்க முயன்றிருக்கிறேன்.
என் முதல் நாவல் ’யாதுமாகி’யின் இன்னொரு பக்கமாக இதை நான் திட்டமிடவில்லையென்றாலும் இப்போது இதைத் திரும்ப வாசித்துப் பார்க்கும்போது ஒரு தலைகீழ்ப்பரிணாமம் நிகழ்ந்திருப்பதைப்பார்க்க முடிகிறது.’யாதுமாகி’யின் தேவி, அவளது காலகட்டத்தின் நெருக்குதலின் நடுவிலும் தன் முடிவுகளைத் தானே எடுக்கும் தீர்க்கமான பார்வையைக்கொண்டிருந்தாள். அடுத்தடுத்த தலைமுறைகளின் புதுயுகப்பெண்களோ, முடிவெடுக்கப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள்;அல்லது என்ன முடிவெடுப்பது என்றறியாதவர்களாய்த் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

’தடங்க’ளின் இந்த மையத்தைத் தொட்டுத் தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் என் அன்பு மகள்/மாணவி/கவிதாயினி/கதாசிரியை தேனம்மை லெக்‌ஷ்மணனின் அருமையான அறிமுகக்கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிடுவதைப்போல ஒரு கல்விச்சாலைப்புதினமான [கேம்பஸ் நாவல்]இதனை,’கேம்ப’ஸில் என்னோடு ஊடாடிய என் மாணவியே ரசனையோடும்,ஆழமாகவும் அணுகியிருப்பது என்னை நெகிழ்விக்கிறது.


                             தடங்கள் – ஒரு பார்வை

தேனம்மை லெக்‌ஷ்மணன்

நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளச் செய்கிறது தடங்கள். சுசீலாம்மாவின் கல்லூரிப் பருவ, பேராசிரியக் காலங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அழகான மொழியில் எழுத்தாக்கம் பெற்றுள்ளன.

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் சில இடங்களில் பெண்களே பிரச்சனைகள். நந்தா, சிந்து என்ற இருவரின் கடித உரையாடலாகத் தொடர்கிறது புதினம். அநேகம் சிந்து நந்தாவுக்கு எழுதும் அறிவுசார் மின்னஞ்சல்கள். இது புதினத்தில் புதுவகை உத்தி.

சமூக அக்கறையுடன் சக பெண்களின் மீதான பரிவு, மாணவிகளின் மேலான பாசம், அநீதியை எதிர்க்க இயலாமல் மேலும் தன்னைத்தானே வெல்ல இயலாமல் மடங்கிப் போகும் அவர்களைப் பார்த்து ஆவேசம், சிலரை மாற்ற இயலாத இழிவரல், சிலரின் வாழ்வைப் பார்த்து எள்ளல், சிலருக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்குதல் எனப் பல்வேறு உணர்வுகளைப் படைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

தனித்தனி மனுஷிகளின் கதையை ஒரு விழிப்புணர்வுப் புதினமாக்கி இருக்கும் முறையும் வித்யாசம். ஆனால் எல்லாவற்றிலும் பெண்களின் உணர்வுகளும் உறவுகளும் கலந்த இணைப்புதான் மையப்புள்ளி. சமயத்தில் இவை புனைவா நம் அக்கம் பக்கம் இருப்போரின் வாழ்வியலா என்று எண்ணமிடவைக்கும் வண்ணம் இருக்கிறது இக்கதைகளின் யதார்த்தமும் உண்மைத்தன்மையும்.

திருமணத்தோடு பெண் வாழ்வு முடிந்துவிடுகிறதா? திருமணத்துக்குப் பின்பும் அவள் மேலெழுகிறாளா என்றும் சிந்திக்க வைத்தது. சமூகத்தை விட்டோ, திருமண உறவை விட்டோ, குடும்ப அமைப்பை விட்டோ பெண்ணை அத்யாவசியம் ஏற்பட்டால் ஒழிய, தாங்கொணாத் துயரம் ஏற்பட்டால் ஒழிய வெளியேறச் சொல்லவில்லை ஆசிரியர்.

எவ்வளவுதான் மற்றவர்கள் உதவினாலும் மரபுசார் அடிமையா, அறிவுசார் வாழ்க்கையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பெண்ணே. தன் இக்கட்டுகளைக் களைந்து முளைத்தெழுவது அவள் கையில் மட்டுமே உள்ளது என்பதும் ஆசிரியர் காட்டும் வழி.

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, கருத்தியல் ரீதியான வன்முறை என அனைத்தையும் அலசுகிறது இந்த நாவல். மீனாக்ஷி கல்யாணத்தில் ஆரம்பிக்கும் நாவல் தங்கையின் திருமணத்துக்காக வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதோடு முடிந்திருக்கிறது. திருமணம்தான் முடிவு என்று எண்ண வைக்கப்படும் பெண் மனமும் அதன்பின் அது நல்லதாகவோ கெட்டதாகவோ முடிந்தாலும் உதவ முடியாத பிறந்த குடும்பத்தின் நிலையும் இதன்மூலம் குறியீடாகக் காண்பிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரியில் வருடாந்திரம் மாணவிகள் வைக்கும் பொங்கல், ஹாஸ்டலில் இருக்கும் மாணவிகளைப் பார்ப்பதற்கான நடைமுறை, கல்லூரி வாழ்க்கை, காதல் வாழ்க்கை, இளவயதின் ஏக்கங்கள், துக்கங்கள், முடிவெடுப்பதில் அவர்களின் குழப்பம், திருமண பந்தத்தின் நன்மை தீமைகள், நடுநடுவே இலக்கியப் பந்தி, கூட வேலை செய்யும் பெண்களின் மனோபாவங்கள், பேச்சுகள், நடவடிக்கைகள், பல்கலைக் கழக மானியக் குழு ஊதியத்துக்கான ஆசிரியர் போராட்டம், அதோடு நித்யகன்னி, கன்யாகுமரிக்கான அழகான விளக்கங்கள் என்று அசரவைக்கிறார் ஆசிரியர்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்று வீட்டு வேலை செய்யும் லட்சுமி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று வாழும் சோலையம்மா, சந்தேகக் கணவனோடு பல்லாண்டுகள் வாழும் சித்ரா, ஒவ்வாக் காதலில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ளும் வாணி, இன்ஃபாக்சுவேஷனின் சிக்கித்தவித்த மாலா, வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு தேடி வந்த ஆராய்ச்சி மாணவி முத்தரசி தனபாலன், குடும்ப வன்முறையில் உயிரை இழக்கும் ரமணி, அமிலம் ஊற்றப்பட்டு இறந்த புதுமைச் செல்வி, பாலியல் கொடுமையில் இருந்து தப்பித்துத் தன்னை உயர்த்திக் கொண்ட ஹேமா , ஆசைக்கணவனைத் தனித்திருக்க விட்டு மதபோதகரான ஸ்டெல்லா, எப்போதும் தன்னை இறுக்கமாக வைத்துக் கொள்ளும் கலா என இருண்மையான பக்கங்களை மட்டுமல்ல தன் வாழ்க்கையைத் தான் நினைத்தபடி சீராக நடத்தும் கனகா, அதேபோல் சில ஆண்டுகளே திருமண வாழ்க்கை நீடித்தாலும் இனிமையாக வாழ்ந்த ஜமீலா, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை இயல்பாக அழகாக எடுத்துக்கொண்ட தாழை, கோலம் மாறினாலும் காதல் மாறாது என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழும் மல்லிகா தினகரன், தன்மேல் சுமத்தப்பட்ட துறவைத் தைரியமாகத் துறந்து வெளிவந்த லீமா, கர்மயோகியான பத்மா, தனித்து வாழ்ந்து எல்லோரையும் கவரும் கல்யாணி, உழைக்கும் பெண்களுக்காக உழைக்கும் நந்தா, ஆதரவற்றோருக்கு இல்லம் அமைக்க முயலும் நிருபமா, அனைவரது வாழ்க்கையையும் சீர்தூக்கிச் செதுக்கும் சிந்து என எத்தனை விதமான பெண்கள் நம்மைச் சுற்றிலும் என வியக்கவைக்கிறார் ஆசிரியர்.

உன்னதம், உதாசீனம், பொறுமை, பெருமை, இருண்மை, தெளிவு எனப் பெண்களின் மனோபாவங்களை சுசீலாம்மா படைத்துச் செல்லும்விதம் அற்புதம். 

அதேபோல் சந்தேகப்படும் மனநிலை உள்ள  வளர்தலும் தேய்தலுமான கலைகள் உள்ள) சந்திரன், வன்கொடுமை செய்யும் ரமணியின் கணவன், மகன் மேல் உள்ள பிரியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு மனைவியை வெட்டும் சோலையம்மாளின் கணவன், பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்டியங்காரன் தனபாலன் ஆகிய நெகட்டிவ் கேரக்டர்கள் மட்டுமல்ல ,மனைவிக்காக விட்டுக்கொடுத்துப் போகும் ஃப்ரான்ஸிஸ், விரும்பிய பெண்ணைத் துணையாக அடைய தியாக மனப்பான்மையுடன் வரும் தினகரன், மகள்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்கள் விருப்பம்போல வாழ அனுமதிக்கும் நந்தா, நிருபமாவின் தந்தைகள் என ஆண்களின் அக புற உலகத்தையும் படைத்து நம்மை அதில் உலவச் செய்திருக்கிறார் ஆசிரியர். 

ஆணால் கவரப்படும்போதே ஆணைக் கவரவிரும்புகிறாளா பெண், திருமணத்தை நோக்கி மட்டுமே பெண் வாழ்க்கை செல்கிறதா, பெண்ணின் உயர்வும் வெற்றியும் சமையல் அது தொடர்பான வேலைகளையும், குடும்ப வாழ்க்கையையும் குழந்தைப் பேறையும் ஒப்புநோக்கியே சீர் தூக்கப்படுகிறதா, வெளி உலகம் காணாத பெண் என்பவள் உயர்வானவளா எனப் பல்வேறு அலைகளை எழுப்பியபடி இருக்கிறது வெகு அடர்த்தியான இந்நாவல்.  

கல்வியும் உத்யோகமும் தற்சார்பும் உயர்வாழ்க்கைத்தரமும் பெற்றபின்பும் பெண் என்பவள் வெற்றியடைந்திருக்கிறாளா இல்லையா என்று யோசிக்க வைப்பதே இந்தப் புதினத்தின் வெற்றி.

நூல் ;- தடங்கள்
ஆசிரியர் :- திருமதி எம். ஏ. சுசீலா அவர்கள்
பதிப்பகம் :- மீனாட்சி புத்தக நிலையம். 
விலை :- ரூ 225/-

11.11.20

கனலி ஜப்பானிய சிறப்பிதழில் -'லிஃப்டுக்குள்…'

 கனலி ஜப்பானிய சிறப்பிதழில் என் மொழியாக்கச் சிறுகதை

http://kanali.in/liftukkul/?fbclid=IwAR3ywVuHwLf3biOA5osAkPrqYLgj2Mxv47Yt6XMXSaLOJUh1g5UATyzT2zw



              லிஃப்டுக்குள்


[ஜப்பானிய மூலம்:கூனோ டீகோ

ஆங்கில வழி தமிழ்: எம் ஏ சுசீலா] 


ன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை  எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

குறிப்பாகச் சொல்லப்போனால்  அன்று நான் களைப்பாகக் கூட இல்லை;  உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி  வந்துகொண்டிருந்தேன். லிஃப்டுக்குள் நுழைந்து கதவை மூடும் பொத்தானை அழுத்தி விட்டு, மூன்றாம் தளத்துக்குச் செல்லும் பொத்தானையும் அழுத்தினேன். சரியாக அதேநேரம் பார்த்து,  மூடிக்கொண்டிருக்கும் லிஃப்டை நோக்கி இன்னொரு பெண்மணி விரைந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் கதவைத் திறப்பதற்கான பொத்தானை அழுத்தினேன்.


தாளால் பொதியப்பட்டிருந்த பெரிய பார்சல் ஒன்றை நெஞ்சோடுஅணைத்துப்பிடித்துக்கொண்டிருந்த அவள், மறுபடி திறந்துகொண்ட லிஃப்ட் கதவுக்குள் நுழைந்து உள்ளே வந்தாள்; அவள் எனக்கு நன்றி எதுவும் சொல்லவில்லை.. ஆனாலும் கூடக் கதவைத் திரும்பமூடுவதற்கான பொத்தானை அழுத்தியதுமே- கை நிறைய சுமையோடு இருந்த அவள் செல்ல வேண்டிய தளம் எது என்பதைக் கேட்டு அதையும் நான் அழுத்தியிருப்பேன். ஆனால் நான் அதைச் சொல்வதற்கு முன்பு அவளே “தயவு செய்து ஒன்பதாவது தளத்தை அழுத்துங்கள்” என்று கேட்டாள்.  நானும் பதில் பேசாமல்  ஒன்பதை அழுத்திவிட்டாலும் அவள் சொன்னதை அலட்சியப்படுத்தாமல் விட்டது,எனக்கு வருத்தமாகவே இருந்தது. கை கொள்ளாமல் அத்தனைபெரிய பார்சலை வைத்துக்கொண்டிருப்பதால் அவளால் பொத்தானை அழுத்தமுடியவில்லையென்றால்  அது..,அவளுடைய  பிரச்சினை!அதை மற்றவர்கள் மீது அவள் சுமத்தக்கூடாது.


எங்கள் இருவரையும் சுமந்தபடி மூன்றாம் தளத்தை நோக்கி லிஃப்ட்,உயரத்தொடங்கிய ஒரு சில விநாடிகளிலேயே 

அந்தப் பெண்ணின்நாகரிகமற்ற போக்கை எண்ணி நான் குமுறத்தொடங்கியிருந்தேன். லிஃப்ட் நின்று அதன் கதவும் திறந்து கொண்டதும் ஏதோ ஒரு திடீர் மனஎழுச்சியால் நான்காவது பொத்தானிலிருந்து நாசமாய்ப்போன அவளதுஒன்பதாம் பொத்தான் வரை உள்ள எல்லாப்பொத்தான்களின் மீதுமே,கையை வைத்து வேகமாக அழுத்தினேன் நான். ஒன்பதாம் பொத்தானின்விளக்கு ஏற்கனவே ஒளிர்ந்து கொண்டிருந்தது.

‘’உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக”

இந்தச்சொற்களோடும், எல்லாப்பொத்தான்களிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விளக்குகளோடும் அவளை விட்டுவிட்டுலிஃப்டிலிருந்து வெளியேறினேன் நான்.

“இருந்திருந்து இப்படி ...” என்று எனக்குப்பின்னால் அவள்ஏதோ சொல்வது காதில் விழுந்தது. நான் திரும்பிப்பார்த்தபோது கையில் வைத்திருந்த பெரிய பார்சல் நழுவி விடாமல்  இறுகப்பற்றியபடி,தன் கைப்பையிலிருந்த சாவியை எடுக்க அவள்போராடிக்கொண்டிருந்தது தெரிந்தது. 


பொதுவாக நான் மூன்றாம் தளத்தில் இறங்கும்போது லிஃப்டில் எவரேனும் இருந்தால் - நான் வெளியேறும் சமயம், கதவைமூடுவதற்கான பொத்தானை அழுத்தி விட்டுப் போவது என் வழக்கம். இரண்டாம்தளத்தில் இறங்குபவர்களும் கூட என் பொருட்டு இரங்கி அதே போன்றசெயலைச்செய்வார்கள். அடுத்தாற்போலத் தானாகவே கதவுஅடைத்துக்கொண்டு விடும் என்றாலும் அதற்கு வெகுநேரம் பிடிக்கும். சில நேரங்களில் கதவே உடைந்து விட்டதோ என்று கூடஆச்சரியப்படத் தோன்றும். மாறாகக் கதவை மூடுவதற்கானபொத்தானை நாம் அழுத்தி விட்டால் அது உடனடியாகஅடைத்துக்கொண்டு விடும்.


கதவு தானாகவே அடைத்துக்கொள்ளும் வரை காத்திருக்கும் பொறுமை , லிஃப்டின் உள்ளே இருப்பவர்களில் எவருக்கும் இருக்காது என்பதால்,லிஃப்டிலிருந்து வெளியேறுபவர்கள் வெறுமே போய்விடாமல்கதவடைக்கும் பொத்தானை அழுத்திவிட்டுப் போவதென்பது ஒருநாகரிகமான செயலாக இருந்தது. 

உங்களுக்கு நன்றி 

’  நன்றி

‘நல்ல காரியம் செய்தீர்கள்’ 

என்பது போன்ற வார்த்தைகள்அப்போது இயல்பாகவே பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு.


எல்லாப் பொத்தான்களையும் ஒளிரவிட்டபடி அந்தப்பெண்மணியைப் பழிதீர்த்துக்கொண்டிருந்த நான் வேண்டுமென்றே கதவை அடைக்கும்பொத்தானை மட்டும் அழுத்தாமல் விட்டு விட்டு விரைந்தேன்.கதவுவிரியத் திறந்து கிடந்ததால் அவளை  முழுமையாய்ப்பார்க்க முடிந்தது.  இப்போது கையிலிருந்த பார்சல் சுமையோடு , சாவியை எடுப்பதற்கும் அவள் போராடிக்  கொண்டிருந்ததால் கதவை அடைப்பதற்கானபொத்தானை அழுத்துவதற்கு அவள் நிச்சயம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அவள் அடுத்த தளத்தை அடையும்வரையிலும் கூட அந்தக்கதவு மூடிக்கொள்ளுமா என்பதுசந்தேகம்தான். அந்த இடத்தில் நான் இல்லாமல் வேறு யாராவது ஒருவர்இருந்து, கதவை மூடிவிட்டுப்போகும் அந்தக் கனிவான செயலைசெய்யத் தவறியிருந்தால்-அப்போதும் கூட அவளுக்கு இதே மாதிரி சிக்கல் ஏற்பட்டிருக்கும்தான்;ஆனால் இப்போதோ நான்கு,ஐந்து,ஆறு,ஏழு என்று லிஃப்ட் நிற்கும் எல்லாத்தளங்களிலுமே அவள் அந்தச்சிக்கலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.  ஒவ்வொரு தளத்திலுமே லிஃப்ட் நின்றுபோய் விடும். தேவையே இல்லாமல் கதவும் திறந்து கொள்ளும். அதிலும் அந்த லிஃப்ட் இயங்கும் முறையைப்பார்த்தால் - கதவை மூடும்பொத்தானை அழுத்தியிருந்தாலும் கூட அத்தனை பொத்தான்கள் ஒருசேர அழுத்தப்பட்டிருக்கும் நிலையில் அத்தனை எளிதாக அதுஒவ்வொரு தளத்தையும் கடந்துவிட முடியாதென்றே தோன்றியது. அவள் தனக்குரிய தளத்தை- தன்னுடைய அந்த இலக்கை எட்டுவதற்கு முன்  திறந்த கதவை மூடுவதற்கு ஒவ்வொரு தளத்திலும் திரும்பத்திரும்ப அவள் போராடவேண்டியிருக்கும். அல்லது கதவு தானாக மூடிக்கொள்ளும் வரைஒவ்வொரு தளத்திலும் அவள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

‘’உனக்கு இதுதான் சரிப்பட்டு வரும், எல்லாத்தையுமே அழுத்திட்டேன் உனக்காக”

எத்தனை அற்புதமான வாக்கியம் அது?

                          ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                                 தன்பிறகு லிஃப்டில் ஏறிப் பொத்தான்களை அழுத்தும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அடிக்கடி அந்த நாளின் ஞாபகம் எனக்குவந்து போகும். குறிப்பான நேர நியதிப்படி செல்லாமலோ அல்லது சிலநாட்கள் லிஃப்டையே பயன்படுத்தாமலோ நான் இருந்ததால் திரும்பவும்அந்தப்பெண்மணியோடு நான் அதில் செல்லவே இல்லை.  சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த  நாளுக்கு முன்பு வரை – அவளை இதுவரை  சந்தித்திருந்ததாகவே எனக்கு நினைவில்லை.  ஆனால் அத்தனை பெரிய பார்சலைக் கையில்வைத்துக்கொண்டு அவள் சாவியைத் தேடிக்கொண்டிருந்ததைப் பார்க்கும்போது அவளும் இந்தக்கட்டிடத்தில்தான் குடியிருக்க  வேண்டும் என்பது உறுதியாகத்தெரிந்தது.


நாங்கள் இருவருமே அங்குதான் குடியிருந்திருக்கிறோம்; ஆனால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலேதான் இதுவரை இருந்திருக்கிறோம். அந்தப்பெண்மணியைப்பற்றிய நினைவுகள் அவ்வப்போது தோன்றுவதால் லிஃப்டில் சகமனிதர்கள் ஏறும்போது , முன்பை விடவும் கூடுதலான பரிவுஎன்னிடம் ஏற்பட்டிருந்தது. அன்று அவளை அளவுக்கு மீறிப் பழி வாங்கிவிட்டதாக எண்ணி, என்னை நினைத்து எனக்கே கூச்சமாகவும் இருந்தது. ஒருக்கால் அப்படிப்பட்ட இயல்பு எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று என் மீது நானே நம்பிக்கை கொள்ளவும் விரும்பியிருக்கலாம். அன்று நான்அப்படிச்செய்ததற்கான காரணம், அவள் மோசமான வகையில் நடந்துகொண்டது மட்டுமே! லிஃப்டின் உள்ளே ஏறிவரும் மனிதர்கள்எனக்கு நன்றி சொல்லும்போது அவர்கள் எதையும் சுமந்துகொண்டிருக்கவில்லையென்றாலும் கூட ‘நீங்கள் எந்தத் தளத்துக்குப்போக வேண்டும்’ என்ற கேள்வியைக் கேட்க நான் பெரும்பாலும் தவறியதில்லை. அன்றைக்கும் அப்படித்தான் வேறேதோ சிந்தனையில் இருந்தபடிஎந்தத் தளம் ‘என்று கேட்டேன்.

‘தயவு செய்து ஒன்பதை அழுத்துங்கள்’

நானும் தன்னிச்சையாக ஒன்பதை அழுத்தினேன். 

ஆனால் அந்த நபர் –அந்தப் பெண்மணி, அப்படிப்பட்ட ஒருதருணத்துக்காகவே காத்துக்கொண்டிருந்திருந்தது போலத் தொடர்ந்து இப்படிச்சொன்னார். ‘ஏன்..நீங்கள் இஷ்டப்பட்டால் எல்லாப் பொத்தான்களையுமே கூட அழுத்துங்களேன்’


அன்றும் சரி,இப்போதும் சரி…,அந்தப்பெண்மணியின் முகத்தை நான்சரியாகப்பார்க்கத் தவறியிருந்தேன் என்பதை  உணர்ந்து கொண்டேன். ஆனாலும்என்னுடைய பரிவான செயலை சாதகமாக்கிக்கொண்டு அன்று நடந்துபோன சம்பவத்துக்காக அவள் என்னைப் பழி வாங்கும்படி மட்டும்  விட்டுவிடமாட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். அவளது சவாலை ஏற்று நான்கிலிருந்து எட்டு வரையுள்ள பொத்தான்களை நான் அழுத்தினாலும் அல்லது அப்படி  எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அவள் ஒன்பதாவது தளத்துக்கு போய்ச்சேர முடிந்தாலும்- எப்படிப்பார்த்தாலும், அந்த இரண்டுவகைகளிலுமே தோல்வியைத் தழுவுவது நானாகத்தான் இருக்கும்என்றுதான் அவள் கணக்குப்போட்டிருக்க வேண்டும். 


‘நல்லது அப்படியே செய்கிறேன்’

என்று சொன்னபடியே பொத்தான்கள் இருந்த பலகை மீது என் கையைவேகமாய் ஓட விட்டேன்.

சரியாக அதே நேரத்தில் லிஃப்ட் நின்று போயிற்று. அவசர வழி ‘ என்று வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த சிவப்புப்பொத்தானை நான் உற்றுப்பார்த்தேன். கதவு திறந்து கொண்டால் கதவைஅடைப்பதற்கான பொத்தானை அழுத்தி விட்டு ‘ இதையும் கூட உனக்காகஅழுத்துகிறேன் பார்’ என்று அறிவித்தபடி சிவப்புப்பொத்தானையும் ஒரு தட்டுதட்டிவிட்டு மூடிக்கொண்டிருக்கும் கதவின் வழியே வெளியேறி விடவேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் கதவு ஏனோ  திறந்துகொள்ளவே இல்லை.


‘நாம் இன்னும் மூன்றாம் தளத்துக்குப் போய்ச்சேரவே இல்லை’என்று எனக்குப் பின்னால் இருந்தபடி சொன்னாள் அவள்.  விளக்கு இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தது. ஆம்..அவள் சொன்னதுசரிதான்.


‘’ஆனால்...’’என்றபடி தொடர்ந்து பேசினாள் அவள்.

’ லிஃப்ட் என்னவோநிச்சயமாக நின்று போய் விட்டது. சரிதானே? உடைந்துபோயிருக்கலாம்’’


 ஒருவேளை நான் முரட்டுத்தனமாக எல்லாப் பொத்தான்களையும்அழுத்தியபோது ஏதாவது தாறுமாறாகிக் குளறுபடியாகி இருக்கலாம். 


‘‘ உங்களுக்கு அவசரமாகப்போக வேண்டுமென்றால் நீங்கள் எப்போதுவேண்டுமானாலும் இதைப்பயன்படுத்தலாம்’என்று அவளிடம் அந்த அவசர வழிக்கான பொத்தானை சுட்டிக் காட்டியபடி அதை அவள் பார்க்க வசதியாகப் பலகையிலிருந்து விலகி நின்று கொண்டேன்..


’’இல்லை,இல்லை..எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை’’

 என்று கையசைத்து அதை மறுத்து விட்டு லிஃப்ட் சுவர் மீது வசதியாகச்சாய்ந்து நின்று கொண்டாள் அவள். நானும் அவளுக்குப் பக்கவாட்டில் அவ்வாறே சாய்ந்து நின்றுகொண்டேன்.

              ****,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,****




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....