துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.4.11

மொழியாக்கம் - கலந்துரையாடல்

மொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,
தஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

17.4.11

நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -2


(நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து -1 என்னும் பதிவின் தொடர் இடுகை)

மரபின் செழுமையோடு,அதன் வேர்களை விட்டு விடாமல் நவீன இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவானதுதான்.அந்தக் குறையை ஈடு செய்யும் முழுத் தகுதி பெற்ற நாஞ்சில் நாடன் தமிழின் மரபிலக்கியங்கள் பலவற்றில்

7.4.11

’’அன்னக்கிளி உன்னைத் தேடுதே..!’’


தமிழ்த் திரை உலகம் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் நடிப்புத் திறமைக்காகப் பயன்படுத்திக் கொண்ட விரல்விட்டு எண்ணக் கூடிய மிகச் சில நடிகைகளில் ஒருவர் காலம் சென்ற திருமதி சுஜாதா.

நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழியைப் போன்ற நடை,உடை,பாவனைகள்,...

6.4.11

இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு...

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும்,  கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால்,
நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முன்பதிவு செய்ய ...
விலை;ரூ.600.00
முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00
கூரியர் செலவு;ரூ;75.00
ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
முன் பதிவுத் தொகையை
‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம்.
நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம்.
எண்; 1013256227
இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்..
உடுமலை.காம்.


காண்க இணைப்பு;

அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம்



3.4.11

நாஞ்சிலின் எழுத்துக்களை முன் வைத்து....-1


முன் குறிப்பு;
நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற தில்லி வந்தபோது அவரது பரிசு பெற்ற படைப்பான ‘சூடிய பூ சூடற்க!’ தொகுப்பிலுள்ள கதைகளை முன் வைத்து வானொலியிலும்,தில்லிதமிழ்ச்சங்கத்திலும் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்.

கடந்த சில மாதங்களாகத் தற்காலத் தமிழ் ஆர்வலர்களின் மத்தியில் மட்டுமன்றிப் பரவலாகப் பல ஊடகங்களிலும் கூடப் புழங்கி வரும் ஒரு பெயர் நாஞ்சில் நாடன்..!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....