துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.6.11

தென்மேற்கின் சாரல்...

எளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.
தொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.
ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.
அதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.

14.6.11

கம்பனில் கடவுள்...


கடவுளுக்கு இது வரை எங்காவது துல்லியமான definition கிடைத்திருக்கிறதா?
.
சுந்தர காண்டத்தில் அனுமன்,இராவணனை நோக்கி இராமன் யார் என்பதைத் தெளிவு படுத்த முயலும் கட்டத்தில்- பிணி வீட்டு படலத்தில் வரும் இப் பாடலில் கம்பன் அதைச் செய்திருக்கிறான்..

10.6.11

காதல்..நீர்..நெருப்பு...


நீரின் குளிர்ச்சி..தீயின் தகிப்பு ஆகிய இரண்டும் அவற்றை நாம் உணரும்போது மட்டுமே உறைக்கும்.
அவற்றிடமிருந்து நீங்கியதுமே அவ்வெம்மையும்,தண்மையும் நம்மிடமிருந்து விலகிப் போய்விடும்;அதுவே உலக இயற்கை.


8.6.11

கும்பகருணனும், ஒசாமாபின்லேடனும்..

ஒரு முன் குறிப்பு;
’’அறத்தின் குரலாய் ஒலித்து ஆழ்கடலில் மூழ்கிய கும்பகருணனுக்கும் ...
வன்முறையின் வடிவாய் வாழ்ந்து கடலுக்குள் ஆழ்த்தப்பட்ட பின்லேடனுக்கும் ..
கடலுக்குள் மூழ்கிப் போனவர்கள் என்பது தவிர....வேறு சம்பந்தம் எதுவுமில்லை’’

4.6.11

வைகையிலிருந்து யமுனைக்கு...

ஜூன் 3ஆம் தேதி முதல் தில்லிப் பதிப்பாகவும் வரத் தொடங்கியுள்ள தினமணி நாளிதழ்,அந்நிகழ்வை ஒட்டித் தனியே சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதற்காக எழுதப்பட்ட ,சுருக்கப்படாத என் கட்டுரை..கீழே..


வைகையிலிருந்து யமுனைக்கு...

வைகைக் கரையிலிருந்த என்னை யமுனை நதி தீரத்தை நோக்கிக் காலம் இடப்பெயர்ச்சி செய்த ஆண்டு 2006.  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....