துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.5.11

’செல்வத்தைத் தேய்க்கும் படை..’

அறிவை அறிவால் அறிந்த அருளாளர் ,
தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ,
செயல் விளைவு தத்துவம் பற்றியும்
ஒரு நாளும் பிழைக்காத இறை நீதி பற்றியும் எழுதியுள்ள அற்புதமான இரு கவிதைகள் இன்றைய காலச் சூழலுக்கு மிகப் பொருத்தமாகப் தோன்றுவதால்..அவை, இங்கே பகிர்வுக்கு..
தீர்க்க தரிசனம் என்பது இதுதானோ...
.
’’தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
  ஒப்புமோ இறை நீதி..ஒழுங்கமைப்பிற்கு ஒத்தபடி
  அப்போதைக்கப்போது அளிக்கும் சரி விளைவு
  எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவர் இதை உணரார்’’


 ‘’இயற்கையென்னும் போராட்டக்காரனுக்கு என்றும்
    எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
    பெயர்த்து இடம் மாற்றி வைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
    பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்’’
    -ஞானக் களஞ்சியம்
பி.கு;
தமிழகத்தின் நிலையை உள்ளார்ந்து உணர்ந்து - தொடர்ந்து அவதானித்து வருபவர்கள் மட்டுமே இதன் உட் பொருள் எத்துணை சாரம் பொதிந்தது என்பதை உணர முடியும்.
அடுத்து வருவோரும் , ஒவ்வோர் அடியையும் எச்சரிக்கையாக வைக்கத் தவறினால்...
இறைநீதி , மக்கள் சக்தி வடிவில் தன் தீர்ப்பைத் தரத் தயங்காது...
‘’அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
   செல்வத்தைத் தேய்க்கும் படை’
என்பது வள்ளுவன் வாக்கல்லவா...



3 கருத்துகள் :

Unknown சொன்னது…

அம்மா அருமையான கவிதை.
இக்கால சூழ்நிலையை அருமையாக பதிவு செய்துள்ளார்
மகரிஷி அவர்கள் .

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு ராஜசேகர் அவ்ர்கள் அனுப்பிய கடிதம்,எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது
Just few minutes before I thought it will be nice if you include some of Maharishi’s concepts here and there in your writings for the present political situations. Its real surprise, when I opened the mail box, its there from your end. That’s divine link.
Vazhga Valamudan. Nice quotes picked up.
Regards,
Rajasekar.

www.eraaedwin.com சொன்னது…

ஆஹா ஆஹா அற்புதம் தோழர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....