துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.8.18

இரட்டையர் ஓர் எதிர்வினை-ஜான்மேரி ரோஸ்



இரட்டையர் ஓர் எதிர்வினை
Johnmary Rose -முகநூலிலிருந்து 
[இரட்டையர் - தஸ்தயெவ்ஸ்கி
தமிழில் - எம்.ஏ.சுசீலா]

மிக நேர்மையாகவும் , பணிவாகவும், அடுத்தவர் மனம் காயப்படாமல் பேச்சிலும் நடத்தையிலும் கூட கண்ணியமாக நடந்து கொள்ளும் அதுவும் தன் வாழ்வை தனிமையில் கழிக்கும் ஒரு மனிதனின் வாழ்வில் அதற்கு நேர் எதிராக போக்கிரித்தனமும் வெறுப்பேற்றி சீண்டிப் பார்க்கும் குணமும் அதுவும் ஒரே உருவத்தில் ஒரே பெயரில் இரண்டு மனிதர்களுக்கிடையே நடக்கும் போராட்டம் தான் இந்நாவல்.

வாசிக்கும் பல இடங்களில் ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா இல்லை கற்பனையா என்று என்னை சந்தேகப்பட வைத்து உறுதி செய்ய மீண்டும் வாசிக்க செய்தது ஏன் என்றால் சீனியர் கோலியாட்கின் அப்படிப்பட்ட மனநிலை உடையவர் அவராகவே மனதில் பலவற்றையும் போட்டு வருத்திக் கொண்டு எப்போதும் ஒழிந்து தனிமைப்பட்டு வாழ நினைக்கும் ஒரு மனிதர்
இது இரட்டையர் உருவத்தில் இருக்கும் வெறும் சீனியருக்கும் ஜூனியருக்கும் நடக்கும் போராட்டம் மட்டும் அல்ல, பலபேர் வாழ்க்கையில் - ஏன் நானே கூட ஜூனியர் கோலியாட்கின் போல நபரைக் கடந்ததுண்டு மற்றவரிடத்தில் மிகுந்த நல்லவர்களைப் போலவும் அந்தத் தனிப்பட்ட மனிதரிடம் மட்டும் தன் வேலையைக் காட்டும் அந்தப் போக்கிரி கோலியாட்கின் போன்றுமனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
எனக்கு இன்னும் கூட குழப்பமாகவே இருக்கின்றது. கதையின் ஆரம்பத்தில் கோலியாட்கின் அந்த பாலத்தின் கீழ் உள்ள ரெஸ்டாரெண்டில் தனியாக உட்கார்ந்து இருக்கும் போது யோசிப்பது போல் தெரிகிறது அதன் பின் அந்த பார்ட்டிக்கு செல்வது போலவும் அங்கே அவமானம் அடைந்தது போலவும் வருகின்றது அதன் பின் சில பக்கங்கள் வரை நான் அவர் அங்கு திரும்ப செல்லாமலேயே தான் சென்றால் அங்கு எப்படி இருக்கும் மற்றவர்கள் தன்னை எப்படி நடத்துவார்கள் என்று அவர் அங்கு இருப்பதை போல் நினைத்துக் கொண்டாரோ என்று தான் நினைத்தேன் அதன் பின் நடந்து செல்வது மாதிரி சொல்லும் இடத்தில் தனக்கு எதிராக ஒரு உருவம் தன்னை போன்றே அதுவும் அவர் அணிந்த அதே உடையில் ஒரு மனிதன் தன்னை கடந்து செல்வதாகவும் கூறும் இடத்தில் கூட கற்பனை என்றே நினைத்தேன்.
உளவியல் ரீதியாக ஒரு மனிதன் படும் துன்பங்கள் , அவனது உணர்வுகளோடு மற்றவர் சீண்டி விளையாடும் கொடுமை தாங்க முடியவில்லை. அவன் உண்மையிலையே இரட்டையர்தானா மன பிரமையா? முழுவதும் வாசித்து முடித்தும் அந்த ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா நிஜமா என்று குழப்பமாகவே உள்ளது.
உளவியல் ரீதியாக மனதை சோதித்து பார்க்கிறது இந்நாவல்
எம்.ஏ.சுசீலா மொழி பெயர்ப்பு மிக அருமை
எனது வாழ்த்துகள் அம்மா
அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்
உங்களின் இந்த மகத்தான பணிக்கு வாழ்த்துகள்
Johnmary Rose
salem

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....