துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.8.18

நிஜங்களும் கற்பிதங்களும்- இரட்டையர் முன்னுரை

                                


                             இரட்டையர்- நிஜங்களும் கற்பிதங்களும்
                       [இரட்டையர்- மொழியாக்க நாவலில் என் முன்னுரை]

’’துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மாதனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞைநிலவறைக்குள் தப்பித்து முடங்குதல் ஆகிய சிக்கல்களையே இரட்டையர்நாவலிலும் எதிர்ப்படுகிறோம்’’ என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்புக்களையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதிப் புகழ்பெற்றிருப்பவரான கான்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி.[ Konstantin Mochulsky]

இரட்டையர் குறித்த கதைகளும் கருத்தாக்கங்களும் மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டுத் தொடர்ந்து நிலவி வருபவை  என்றபோதும் நவீனஇலக்கியக்களத்தில் அதை அடிப்படையாகக்கொண்டு புனைவிலக்கியம் படைத்த முன்னோடிகளில் ஒருவராக எண்ணப்படுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரியும் யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கின் , தனக்கென எந்தத் தனி அடையாளமும்அற்ற சராசரிகளில் ஒருவர்சமூக வாழ்க்கையிலோ,காதலிலோ,அலுவல் களத்திலோ சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்கு எதையுமே சாதித்திராதவர்தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களுமே இக் குறுநாவலின் உள்ளடக்கம்.

நாவலின் தொடக்கத்தில் மனச்சிதறல் நோய் கொண்டவரென மருத்துவரால் சந்தேகிக்கப்படும் கோலியாட்கின்,இறுதியில் தன் சுயக்கட்டுப்பாட்டைமுற்றிலும் இழந்த நிலையில் மனநோய் விடுதிக்கே  இட்டுச்செல்லப்படுவதோடு நாவல் நிறைவு பெறுகிறதுஇடையிலுள்ள அத்தியாயங்களில் அவர்எதிர்ப்பட நேரும் அந்த நிழல் மனிதன்இரத்தமும் சதையும் கொண்ட உண்மையான ஒரு நபர்தானா அல்லது அது அவரது மனமயக்கமா என்பதும்ஒருக்கால்அவன் உண்மையான நபராக இருந்தாலுமே கூட உருவத்தில் அவன் அவரது இரட்டை போலத்தான் இருக்கிறானா அல்லது அது அவரது கற்பிதமா என்பதும்இலைமறை காயாக மட்டுமே இருப்பதே இந்த நாவலின் தனித்துவம் நாவலில் இடம்பெறும் பல பாத்திரங்களும் அந்தஇரட்டை மனிதனைப் பார்த்தாலும்அவனோடு உரையாடினாலும்அவர்களது எதிர்வினைகள் நமக்கு வெளிப்படுவது கோலியாட்கினின்கண்கள் வழியாகத்தான்

ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி உள்வாங்கும் முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக - இன்னும் கூடத்தொடர்ந்துகொண்டுதான்  இருக்கிறது.

குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்ட ஒரு மனிதரின் கதை இது என்பதே இந்த நாவல் குறித்த பரவலான கருத்துதன் சுய அடையாளம் குறித்த தேடல்ஒருவரைத் தன்னையே தொலைத்துக்கொள்ளும் அளவுக்கு தூண்டிவிடுகிறது என்பதை இதன் சாரமாக்கிச் சொல்வதையும் ஒதுக்கி விட முடியாதுகதையின்பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படிநிலைகளும் பலநெருக்கடிகளை உருவாக்கியிருந்தனஅவற்றுக்குள் சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’[sample]யாகவே கோலியாட்கினின் பாத்திரஉருவாக்கம் முன்வைக்கப்படுகிறது.

எல்லா மனிதர்களோடும் இயல்பாககலகலப்பாகக் கலந்து பழகும் ஒரு சமூக மனிதனாகபெண்களால் நேசிக்கப்படும் கவர்ச்சிகரமான ஓர் இளைஞனாகவேலைத் தளத்தில் மேலதிகாரிகளிடம் சாமர்த்தியம் காட்டி மேன்மேலும் பதவி உயர்வு பெறும் அலுவலராக – இவ்வாறு பலவற்றையும் கோலியாட்கினின்ஆழ்மனம் விரும்பினாலும் நடைமுறையில் அவற்றை சாத்தியமாக்க அவனால் இயலாதபோது அத்தகைய இயல்புகள் கொண்ட ஒரு நிழல்மனிதனைஅவரது உள்ளம் தானாகவே உருவாக்கிக்கொண்டு விடுகிறதுகூடவே அதனோடு இடையறாத போராட்டம் ஒன்றையும் நடத்துகிறதுமனப்பிரமைகள் வரம்புமீறியதாய்க் கட்டற்றுப்பெருகும் நிலையில் எண்ணிக்கையற்ற நிழல் இரட்டையர்கள் தன்னைத் துரத்துவதான தீவிர உளச்சிக்கலுக்கு ஆளாகும்கோலியாட்கின் சராசரி வாழ்க்கையைக்கூடத் தொடர முடியாதபடி,மனநோய் விடுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுகிறார்,

இரட்டை என்பது மனிதர்களில் மட்டும் இல்லைமருத்துவரோடான சந்திப்பு,அலமாரிக்குப்பின் கோலியாட்கின் ஒளிந்து கொள்ளல்,அலுவலகக்காட்சி,வண்டிச்சவாரி என்று நாவலின் பல சம்பவங்களும் இரண்டிரண்டு முறை நாவலில் இடம் பெற்றிருக்கின்றன.

இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கியதொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார்தஸ்தயெவ்ஸ்கிஅந்த முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்இரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் நிலவறைக்குறிப்புக்களோடு சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலை நான் மொழிபெயர்த்த நிலவறைக்குறிப்புக்களைஅடுத்துத் தொடர்ந்து வெளியிட முன் வந்திருக்கும் யுகனுக்கும்,நற்றிணைப்பதிப்பகத்தாருக்கும்ஆங்கில மொழியாக்கங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து செம்மைசெய்து தகுந்த இடங்களில் விளக்கங்கள் கூறி இப்பணியில் என்னுடன் துணை நின்ற தோழி பேரா.காதம்பரி அவர்களுக்கும் என் நன்றி.
எம்  சுசீலா
19/6/18

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....