துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.5.20

மீனாட்சியின் கிளி



Meenakshi’s Parrot
Poem By Lakshmi Kannan
மீனாட்சியின் கிளி, என் தமிழ் மொழியாக்கம்..

ஆங்கிலம்,தமிழ் இரண்டிலும் காணொலியாய்..
( கவிதை மீதான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்)
நான் புதுதில்லியில் ஏழாண்டுக்காலம் (2006-2013) வசித்த காலகட்டத்தில் என் இலக்கியத்தோழியாகிப் பின்பு உற்ற தோழியும் ஆனவர் காவேரி என்ற புனைபெயரில் தமிழிலும், லட்சுமி கண்ணன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதும் இருமொழி எழுத்தாளர் ‘ காவேரி’ லட்சுமி கண்ணன். அவரது புகழ் பெற்ற நாவலாகிய ‘ஆத்துக்குப் போகணும்’,பிறந்த வீட்டின் சொத்துரிமை பெண்ணுக்கும் உண்டென்பதை நுட்பமாய்ச்சொல்வது. அண்மையில் க்ளாஸிக் வரிசையில் காலச்சுவடு வெளியீடாகவும் அந்நாவல் வெளிவந்துள்ளது. கணையாழி இதழின் தொடக்க காலகட்டத்திலிருந்து எழுதி வரும் அவரது தமிழ்ச் சிறுகதைகள் காவேரி கதைகள் என்ற தலைப்பில் இரண்டு தொகுப்புக்களாக - எஸ் பொவின் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கின்றன.குறிப்பிட்ட அவரது பத்துச் சிறுகதைகள் அமிர்தாவால் ‘முத்துக்கள் பத்து’ என்னும் தொகுப்பாகவும் வந்திருக்கின்றன.( விக்கிபீடியா குறிப்பில் அவர் குறித்து மேலும் காணலாம்).
ஆங்கிலத்தில் அவர் எழுதியிருக்கும் Meenakshi’s Parrot (Sipping the Jasmine Moon, Poems by Lakshmi Kannan) என்ற கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு அண்மையில் என்னிடம் உரிமையோடு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழிலும் எழுதும் திறன் பெற்றவர் அவர் என்பதால் சிறிது தயக்கத்தோடுதான் அதை ஏற்றுக்கொண்டேன். அதே வேளையில் ஒரு சவாலை எதிர்கொள்ளும் ஆர்வத்தோடும்தான்...காரணம் நாவல்,சிறுகதைகளை மொழிபெயர்த்திருந்தாலும் இது என் முதல் கவிதைப்பெயர்ப்பு. தற்போது ஆங்கிலம்,தமிழில் என் பெயர்ப்பு இரண்டிலும் காவேரி அவர்களை வாசிக்கச்செய்து காணொலியாகத் தந்திருக்கிறது Nyogi books - presentation - Poems by midnight.
காணொலியை ரசிப்பதோடு மூலம்,பெயர்ப்பு இரண்டையும் வாசிக்க விரும்புவோருக்காக இப்பகிர்வு.
MEENAKSHI’S PARROT*
Lakshmi Kannan
Perched on her shoulder in stone, silver, bronze, panchloh, copper or wood the parrot was worshipped too for literally rubbing shoulders with the goddess Meenakshi.
In her quest for divinity, the parrot, frozen in stone, silver, bronze, panchaloh, copper or wood slowly forgot to fly. She stayed on Meenakshi’s shoulder.
For she always kept her place, trusted bird.
The legendary best friend of the Nayika, the parrot now perched on the dancer’s mudra, sees kohl-lined eyes and gleaming lips from a jewelled face pleading, asking her to fly across dense forests, over heaving rivers, past the stern sentinels of palaces, to carry a message for a secret lover.
The parrot carries the message, trusted bird.
In a home, the parrot dangled on a tiny swing inside a cage and watched the woman, her keeper, getting pickled along with the sliced mangoes marinating in the sun.
‘Mittoo, Mittoo!’ the woman called out the parrot’s cloying, syrupy name unchanged over the years in homes, novels and films. The parrot nodded her smooth head and kept her place, trusted bird.
‘Want some fresh fruit, Mittoo? Or you prefer a red chilli perhaps?’ asked the woman. ‘Chilli, chilli!’ replied Mittoo.
‘Can you keep Mummy’s sad secret? My man has another woman, I know.’
The parrot kept the secret, trusted bird.
On her page, the poet brushed the bird with vivid parrot-green and flame orange colours. She also gave her some words. But the parrot refused to speak the tutored words. She turned into a thrush instead, sang her own tune, and then flew off the page.
---------------------
Acknowledgment: Sipping the Jasmine Moon, Poems by Lakshmi Kannan
மீனாட்சியின் கிளி
மொழியாக்கம்: எம் ஏ சுசீலா
அவள் தோளில்
தொற்றிக்கொண்டிருக்கிறது
அது..
கல்லோ..வெள்ளியோ..
வெண்கலமோ..பஞ்சலோகமோ..
தாமிரமோ..மரமோ……
ஏதோ ஒன்றாலானபடி !
அன்னை மீனாட்சி தோளில்
அமர்ந்திருக்கும் காரணத்தால்
தனக்குமே வாய்த்து விட்ட
வழிபாட்டுத் தகுதி
தந்த
தெய்வபத மயக்கத்தில்
பறத்தலை மறந்தபடி..
கல்..வெள்ளி…
வெண்கலம்..பஞ்சலோகம்
தாமிரம்…மரம்……என்னும்
இவற்றில் உறைந்தபடி….
மீனாட்சி தோளிலேயே
தங்கியும் விடுகிறது அது..!
தங்குமிடத்தை மட்டும்
ஒருபோதும் மறக்காத
விசுவாசப் பறவைதான் அது!
காவிய நாயகியர்க்கு
உடன் பிரியா நட்பாகி
நாட்டிய முத்திரைகளில்
குடியிருக்கிறது கிளி!
அஞ்சன விழிகளோடும்
சாயம் மின்னும் இதழ்களோடும்
தகதகக்கும்
தங்க முகநாட்டியப்பெண்
மன்றாடுகிறாள் அதனிடம்
அடர் காடுகள்…
பிரவாக ஆறுகள்…
கட்டுக்காவல் அரண்மனைகள்
பல கடந்து பறந்தபடி..
தன் நாயகனிடம்
காதல்தூது போவதற்காய்..
அதுவும்..
தட்டாமல்
தூது போகிறது..
விசுவாசப் பறவைதான் அது
மென் சங்கிலி பிணைத்த
கூண்டுக்கிளியாய்
வீடொன்றில்..
தன் எசமானி
உப்பிலிட்டுப் போடும்
ஊறுகாய் மாங்காய் பார்த்தபடி..
‘’மிட்டூ..மிட்டூ…’’
கதைகளும் படங்களும்
வீடுகளும்
காலங்காலமாய்ச் சொன்ன
அதே பெயர்..!
திகட்டிப்போன இனிப்பாய்ச்
சலித்துப்போன
அதே பெயரில்…..
அவளும் அழைக்கிறாள்….!
மென் தலையை மெள்ள ஆட்டி
இருக்கும் இடத்துக்கு
விசுவாசம் காட்டுகிறது
அது
‘’மிட்டூவுக்குப் பழம் வேணுமா..
சிவப்பு மிளகாய் வேணுமா..?’’
அவள் கேட்க..
‘’மிளகாய் மிளகாய்..’’
குரல் தருகிறது கிளி!
“அம்மாவின் ரகசியத்தைக்
அயலார் அறிந்திடாமல்
காப்பாய்தானே நீ...
என்னவர் வாழ்க்கையிலே
இன்னொரு பெண்ணுமுண்டு
தெரியும்
எனக்கும் அது..”
அதுவும்
ரகசியத்தைத் தட்டாமல் காக்கிறது
விசுவாசப்பறவைதான் அது
கவிதாயினி ஒருத்தி
தன்
விஸ்தார வருணிப்பால்
கிளிப்பச்சை வண்ணமும்
தீச்சுவாலை நிறமும்
தந்து
தாள்களில் கிளி ஒன்றை
ஓவியமாய்த் தீட்டுகிறாள்
வார்த்தைகள் சிலவும் கூடக்
கற்றுத் தருகிறாள்..
சொல்லித் தந்த
வார்த்தைகளைப்
பேச மறுத்துவிட்டுப்
பாடும் பறவையாகிச்
சொந்த ராகம் இசைத்தபடி
அவள் தாளிலிருந்து
விடுபட்டுப்
பறக்கிறது கிளி..


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....