துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
ஆர்.சூடாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்.சூடாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.8.12

’தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-1

’’வேண்டியபொழுது திறக்கவும்,தேவையில்லாத நேரங்களில் அடைத்துக் கொள்ளவும் மனித மனம் ஒரு இயந்திரமில்லை ..’’

’பெருமையின் முடிவில்.’...ஆர்.சூடாமணி

தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் வணிக நோக்கமற்ற இலக்கியத்தரம் வாய்ந்த தன் எழுத்துக்களால் -ஆழமான உளவியல் நோக்கால்- தேர்ந்த ரசனை கொண்ட வாசகர்களின் மதிப்பைப் பெற்றிருப்பவர் அமரர் ஆர்.சூடாமணி


முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உருவாக்கியுள்ள சூடாமணி, தமது படைப்புக்களுக்காகக் கலைமகள்,கல்கி முதலிய இதழ்களிலிருந்தும்,இலக்கியச்சி
ந்தனை ஆகிய அமைப்புக்களிலிருந்தும் பலமுறை பரிசு பெற்றிருப்பவர்.இவரது சிறுகதைகள் கன்னடம்,இந்தி,குஜராத்தி,மராத்தி முதலிய இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.  ’இரவுச்சுடர்’ ‘மனதுக்கினியவள்’ ஆகிய நாவல்களும், ‘இருவர் கண்டனர்’ என்ற நாடகமும் இவரது குறிப்பிடத்தகுந்த ஆக்கங்கள். ’இரவுச்சுடர்’நாவல் இன்னும் கூடச் சரியாக விவாதிக்கப்பட வேண்டும் என்று அதன் அண்மைப்பதிப்பு முன்னுரையில் குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.

இந்தப் பதிவில் இடம் பெறும் பெருமையின் முடிவில்..என்னும் அவரது சிறுகதை, 1978ஆம் ஆண்டில் வெளிவந்த ‘உலகத்தினிடம் என்ன பயம்’என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.
கணவன் மனைவிக்கிடையிலான மௌனப்போராட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டமின்றி அழுத்தமாக முன் வைக்கும் அக்கதை பற்றி.....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....