(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் பாவண்ணன் எழுதியுள்ள அணிந்துரை..)
’’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி. இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்’’-பாவண்ணன்
பாவண்ணன் |
கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்
குடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது. என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது.

