துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.9.10

பெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3

’’சமூகத்திலும், வேலைத் தளத்திலும்,குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்கு முறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்ணின் உணர்வு நிலைகளும்,இந்நிலையை மாற்ற ஆண்களும் ,பெண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுமே பெண்நிலை வாதம்’’
(தென்னாசியப் பெண்கள் பயிலரங்கில் முன்மொழியப்பட்ட கருத்து


காலந்தோறும் , சூழல்தோறும் பல்வேறு பரிமாணங்கள் பெற்றபடி விரிவும் அழுத்தமும் கூடியதாய் வளர்ந்து வருவது பெண்ணியம் என்னும் இக் கருத்தாக்கம் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் தளங்களுக்கும் பொருத்தமான - ஏற்புடையதான ஒரு விளக்கத்தைச் சற்று விரிவாகவே அமைத்துக் கொள்ளலாம்.
தாய்வழிச் சமூக அமைப்பு , தந்தைவழிப்பட்டதாய் மாற்றமுற்றபின் குடும்பம்,பொருளாதாரம்,அரசியல்,மதம் என முதன்மையான சமூக நிறுவனங்கள் (social institutions)அனைத்தையும் ஆண்களே கையகப்படுத்திக் கொண்டதோடு அவற்றில் மேல்நிலை பெறவும் தொடங்கினர். 

7.9.10

சூழியலும் பிராய்லர் கடையும்

 தலைப்பைக் கண்டு மலைப்பவர்கள் முதலில் செய்தியைச் சற்று நிதானமாகப் படியுங்கள்....

இறைச்சி விற்பனைக் கூடங்கள் என்றாலே அவை சுற்றுச் சூழலை நாசப்படுத்துபவைதான் என்பது நம் பொதுப் புத்தியில் வெகு காலமாகப் படிந்து போயிருக்கும் கருத்துருவாக்கம்.
ஆனால் அதற்கு நேர்மாறாக 5/9/10 தேதியிட்ட தினமலரில் வெளியாகியிருக்கும் கீழ்க்காணும் செய்தி மனதை நெகிழ்த்தி விட்டது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....