துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.6.09

'மாதவிக்குட்டி மரிச்சு....'



'என் பெயர் கமலாதாஸ்' என்ற பெயரில்(தமிழ் மொழியாக்கத்தின் தலைப்பு) தன் வாழ்க்கை வரலாற்றை மனத் தடைகள் இன்றிப் பதிவு செய்த மாதவிக்குட்டி என்கிற சுரைய்யா தனது 75ஆம் வயதில் பூனேயில் காலமாகி விட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.தன் தாய் மொழியான மலையாளத்துடன் , ஆங்கிலத்திலும் பல குறிப்பிடத்தக்க படைப்புக்களை உருவாக்கியவர் கமலாதாஸ்.(அவரது வாழ்க்கை வரலாறு இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்திருக்கிறது. தனது 42 ஆம் வயதில் , கமலாதாஸ் பெற்ற முதல் இலக்கிய வெற்றி , 'My Story' என்ற அவரது இந்தத் தன்வரலாற்று நூலுக்கானதாகவே இருந்தது).தேசிய , சர்வதேச இலக்கியப் பரிசுகள் பலவற்றைத் தன் படைப்புக்களுக்காகப் பெற்றிருக்கும் கமலாதாஸின் எழுதுத்துக்கள் வழி வழி வந்த மரபுக் கோட்பாடுகள் பலவற்றை உடைத்துத் தகர்ப்பவையாக - அவர் அவற்றை எழுதத் தொடங்கிய காலச் சூழலுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.

'மாதவிக்குட்டி' என்ற புனை பெயரில் எழுதிய அவரது சில மலையாளச் சிறுகதைகளும் , நாவல்களும் குறிப்பிடத்தக்கவை.கவிதை எழுதுதுவதிலும் தனித் தேர்ச்சி பெற்றவராக விளங்கியவர் அவர்..

உலகெங்கும் தன் எழுத்துக்குப் பரவலான வாசகர்களைப் பெற்றிருந்த கமலாதாஸின் வாழ்க்கை , அவரது படைப்புக்களைப் போலவே சர்ச்சைகளும் சுவாரசியங்களும் நிறைந்தது.10 ஆண்டுகளுக்கு முன் திடீரென இஸ்லாத்துக்கு மாறித் தன் பெயரையும் சுரைய்யா என்று மாற்றிக் கொண்டார் அவர்.

ஓவியக் கலையிலும் திறமை பெற்றிருந்த அவரின் ஓவியங்கள் கண்காட்சிகளாக்கப்பட்டதுடன் பல பரிசுகளையும் வென்றிருக்கின்றன.

அவரது எழுத்துக்களின் மீது பல விமரிசனங்களும் ,வாதப் பிரதிவாதங்களும் இருந்து வந்த போதும் இந்திய - மலையாள இலக்கியத்தின் தனித்துவமான ஒரு படைப்பாளியாக அவர் இருந்து வந்திருக்கிறார் என்பது உண்மை.

அவரது மறைவுக்கு மன நெகிழ்வோடு கூடிய அஞ்சலி.

கமலாதாஸின் ஆங்கிலப் படைப்புக்கள் சில:

'The Sirens' (Asian Poetry Prize winner),
'Summer in Calcutta' (Kent's Award winner),
'The Descendants' (poetry), 'The Old Playhouse and Other Poems' (poetry), 'Alphabet of Lust' (novel), 'The Anamalai Poems' (poetry), 'Padmavati the Harlot and Other Stories' (short stories) 'Only the Soul Knows How to Sing' (poetry) and 'Yaa Allah' (poems).

மலையாள ஆக்கங்கள்:

'Pakshiyude Manam' (short stories), 'Naricheerukal Parakkumbol' (short stories), 'Thanuppu' (short story and Sahitya Academy award winner), 'Balyakala Smaranakal', 'Varshangalkku Mumbu', 'Palayan' (all novels), 'Neypayasam' (short story), 'Dayarikkurippukal' (novel), 'Neermathalam Pootha Kalam' (novel and Vayalar Award winner), 'Chekkerunna Pakshikal' (short stories), 'Nashtapetta Neelambari' (short stories), 'Chandana Marangal' (novel), 'Madhavikkuttiyude Unmakkadhakal' (short stories) and 'Vandikkalakal' (novel).

விருதுகள்:

Asian Poetry Prize
Kent Award for English Writing from Asian Countries
Asan World Prize
Ezhuthachan Award
Sahitya Academy Award
Vayalar Award
Kerala Sahitya Academy Award
Muttathu Varkey Award[4]
(நன்றி; தகவல்- விக்கிபீடியா)

2 கருத்துகள் :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல படைப்பாளரை இழந்த செய்தி உங்கள் மூலம் அறிந்தேன் .நன்றி

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல படைப்பாளரை இழந்த செய்தி உங்கள் மூலம் அறிந்தேன் .அவருடைய பிரிவுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....