துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.11.09

ஓராண்டின் முடிவில்...

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

இந்த வலைப்பூ தொடங்கி இன்றோடு சரியாக ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.

இணையம் பற்றியோ ,அதில் தமிழில் எழுதும் முறை பற்றியோ ,வலைப்பூ தொடங்கி அதில் இடுகை இடுவது பற்றியோ எதுவுமே அத்தனை தெளிவாகத் தெரியாமல் ஏதோ குருட்டுத் துணிச்சலில் ஒரு ஆசைக்காகத் தொடங்கிய இந்த முயற்சியில் படிப்படியாக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனதும் ...வலைப்பூ எழுதுவதாலேயே அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நான் பெற முடிந்ததும் வாழ்வில் கிடைத்த அரிய அனுபவங்கள்;கற்றலும்,தேடலும் நமக்குள் கிளர்த்தும் சுவாரசியமான தரிசனங்களைப் பெறுவது எந்த நாளிலும் இதமூட்டும் ஒன்றுதானே?

இன்று...இந்த வலைப்பூ,ஓராண்டை எட்டும் இந்த நிலையில், பெரிதாக எதையும் நான் சாதித்துவிடவில்லையென்றாலும்,நான் அறிந்த தமிழை..நான் அறிந்த சமூகத்தை...நான் ரசிக்கும் தகவல்களை உலகெங்கும் உள்ள பல தமிழ் அன்பர்களோடும்,இலக்கிய ஆர்வலர்களோடும் இணையத்தின் வழி பகிர்ந்து கொள்ள முடிந்திருப்பது எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.வலைப்பூவின் வழி சில வேளைகளில் உடனுக்குடன் கிடைக்கும் எதிர்வினைகளும்,நட்புமுறைக்கடிதங்களும் மேலும் மிகுதியான ஊக்கத்தோடும்,உற்சாகத்தோடும் செயல்பட என் உந்து சக்திக்கு எரிபொருளாகின்றன.

இந்த வலைப்பூ,உலகத்தோடும்....முகம் தெரியாத பல மனிதர்களோடும் எனக்கு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது;

நேசமான பல அரிய நட்புக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது.

இது வரை...50க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து பலவகை எதிர்பார்ப்புக்களோடும்....ஆர்வங்களோடும்,என் வலையின் பல ஆக்கங்களுக்கும் வருகை புரிந்த வாசகர்களுக்கும்....இத் தளத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் இத் தருணத்தில் மனம் நெகிழ்ந்த நன்றி.....

2 கருத்துகள் :

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி முனைவரே...
மேலும் பல்லாண்டு காலங்கள் இணையத்தில் தமிழ்மணம் பரப்ப வாழ்த்துக்களுடன்...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் பதிவுகளை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் பார்க்கும் போது மிகவும் மகிழ்வாகவுள்ளது..
தொடர்ந்து எழுதுங்கள்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....