துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.10.10

ஒரு கடிதம்...

நாராயணன் கிருஷ்ணன்
அன்பான வாசக நண்பர்களுக்கு,
எனக்கு வந்த இந்தக் கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணி இப்பதிவில் அதை வெளியிட்டிருக்கிறேன். 

’’உண்டாலம்ம இவ்வுலகம்....
  தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
எனத் தனக்கென வாழாப்பிறர்க்குரியாளர்கள் பற்றிக்குறிப்பிடுகிறது புறநானூறு.
அவ் வரிசையில் இடம் பெறத் தக்க மனிதநேய மாண்புக்குச் சொந்தக்காரரான திரு நாராயணன் கிருஷ்ணன் பற்றி அறிமுகம் செய்வதில் பெருமையும்பூரிப்பும் கொள்கிறேன்...
பிரியமுடன்,சுசீலா
இனி...அக் கடிதம்...
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களேஅதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம்உண்மையான ஹீரோக்கள், உங்கள் பகுதியில் நேர்மையாகவும்தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்மையுடனும் , துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் .ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராககாவல் துறை அதிகாரியாகஆசிரியராகசமுக சேவகராகதுப்புரவுத் தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்துச் சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்அவர்களைச் சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும்நின்றால் காசுக்கு ஆசைப்படாமல் ஓட்டுப் போடுவோம்.
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்தப் பதிவின் வாயிலாக அறிமுகப்படுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக த் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்ஒரு தமிழனாகமதுரைக்காரனாக ரெம்பவும் பெருமைப் படுகிறேன்இன்னும் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருகிறதுஇதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்கப் பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்தமிழனும் பெருமைப் பட வேண்டும்ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துப் பார்க்கவும் முடியாத கருணைச் செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம்சில சமயம் காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைத் தேடிச் சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்மழைபுயல்,தேர்தல்,கலவரம்பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்கள்விநியோகிக்கபட்டுள்ளன.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செபஃப்- சமையல் கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதைப் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை த் துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களைத் தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார்இது நடந்தது 2002 இல்.. இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையைச் சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களைத் தேடிப்பிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்துக் கவலைப்பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்கநான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துப் போயிருக்கிறார்இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களைப் பார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார்இதைப் படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன்எழுதும் இந்தக் கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லித் தலையில் வைத்துக்  கொண்டாடுகிறோம்பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியக்காரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காகச் செய்கிறோம்முதல் நாள் அவர்கள் படங்களைப் பார்க்க ஆயிரம்இரண்டாயிரம் செலவழிக்கத் தயங்குவதில்லை  அவர்கள் இவரின் கால் தூசுக்குக் கூட வரமாட்டார்கள்இவர் தான் உண்மையான ஹீரோசாகசம் செய்வது சாதனை சாதனை அல்லஇல்லாதவர்க்குத் தேடிச்சென்று ஈவதேசாதனை. 
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க உரிய இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டுப் போட்டுருக்கோம்ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டுப் போடலாம் வாருங்கள்நீங்கள் வோட்டுப் போடவேண்டிய இடம்
இதுவரை இந்தப் பெருமைக்குரிய விஷயம் பத்திரிகைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல !ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்இதைப் பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
-- Original Message --
From: Ganesh V harinisri2002@yahoo.com


என் குறிப்பு;
ஒரே நபருக்குப் பல முறை பல நாள் தொடர்ந்து வாக்களிக்க முடியும்.
இவருக்குக் கிடைக்கும் வாக்கும் அதனால் வரும் பரிசும் இவருக்குப் போய்ச் சேரப் போவதில்லை;இவர் செய்யும் மகத்தான தொண்டின் ஒரு சிறு பகுதியாகவே நம் ஓட்டுக்கள் வழி கிடைக்கும் பரிசுத் தொகை அமையப் போகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
 ஒருமுறைஅன்னை தெரசாவுக்குத் தங்க விருதளித்துக் கௌரவித்தபோது,.’முதல் முறையாக இவ் விருது தனது வரவேற்பறையை அணி செய்யும் ஒருவருக்குக்கிடைக்கவில்லை;இதிலுள்ள தங்கத்தை உருக்கி வார்த்து ஏழைகளின் நலனுக்கு அதைப் பயன்படுத்தும் ஒருவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது இது’என்றாராம் அமெரிக்க அதிபர்.
குறிப்பிட்ட இந்தப் பரிசு நாராயணன் கிருஷ்ணனுக்குப் போய்ச் சேருவதும் கூட அது போன்றதுதான்!



6 கருத்துகள் :

பொன் மாலை பொழுது சொன்னது…

இவருக்கு CNN தலத்தில் சென்று தினமும் ஓட்டு போட்டுவருகிறேன்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி மாணிக்கம்.

meenakshi சொன்னது…

இவரை பற்றி ஒரு பத்திரிக்கையில்தான் நான் படித்தேன். மனம் நெகிழ்ந்து அழுது விட்டேன். இவர்கள்தான் கண்ணெதிரே நடமாடும் தெய்வங்கள். உங்கள் பதிவை பார்த்துவிட்டு நானும் ஒட்டு போட்டுவிடுகிறேன். என் நட்பு வட்டாரங்களிலும் சொல்கிறேன். இவர்களின் இந்த நல்ல செயல் எல்லோருக்கும் தெரிய வந்தால், அதில் ஒரு சில பேர்களுக்காவது இதை போன்ற அருஞ்செயல்களை செய்ய
எண்ணமும், ஆவலும் தோன்றி செய்ய முன் வருவார்கள். இந்த நல்ல விஷயத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விஷயம் செய்து கொண்டு இருக்கும் திரு நாராயணன் கிருஷ்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நானும் அவருக்கு ஓட்டு அளித்தேன். தங்களது இனிய தமிழ் மொழியில் அவரைப் பற்றி இன்னும் ஒருமுறை படிக்க முடிந்தது மகிழ்ச்சியான விஷயம். நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நானும் ஓட்டு போட்டேன் அம்மா.. டீவியில் விசு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியை தற்செயலாக காணநேர்ந்தது.. இப்பதிவு இன்னும் பலருக்கு சென்றடைய வாய்ப்பு.. நன்றி..

ஜோதிஜி சொன்னது…

வணக்கம் அம்மா. சிறப்பான உங்கள் நட்சத்திர வாரம் ஜொலிக்கட்டும். தகுதியான நபருக்கு என் வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....