துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.2.18

’நிலவறைக்குறிப்புக்கள்’ -ஓர் எதிர்வினை





அம்மா 
​​
நிலவறைக் குறிப்புகள் படித்துவிட்டேன். மிக அற்புதமான மொழிநடை. 

ரஷ்ய இலக்கியங்களை பலரது மொழிபெயர்ப்பிலும் படித்துள்ளேன். சில பக்கங்களை படித்து கடக்கும்போதே மனம் சோம்பேறியாகிவிடும். ஆனால் இந்த இரண்டு நாட்கள் மிக மகிழ்ச்சியாக நிலவறைக் குறிப்புகள் புத்தகத்தோடு (மடிக்கணினி யோடு) பயணித்தேன். இரவுக்காவலில்,
அலுவலகத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தஸ்தயெவ்ஸ்கியோடு ஆத்மார்த்தமாக பயணித்தேன்.
லிசாவிற்காக தஸ்தயெவ்ஸ்கி வருந்தும்போது அவர் எனக்காக வருந்துவது போன்ற உணர்வு உண்டானது.
அற்புதமான நாவல், இசை போன்ற மொழி நடை .

உங்கள் மொழியில் தஸ்தயெவ்ஸ்கி மேலும் அழுத்தமாக பதிந்துவிடுகிறார்.

ஒரு வார்த்தையைக் கூட skip செய்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.. 

தஸ்தயெவ்ஸ்கியின் அகவுலகில் முன்னும் பின்னுமாய் பயணித்தேன். 
கேள்விகளை அவரே கேட்கிறார். அவரே பதில் சொல்கிறார்

ஒரே அலைவரிசையில் புத்தகத்தை படித்து முடித்தால்தான் 
புத்தகத்தை பற்றிய முழு ஜீவனையும் புரிந்து கொள்ள முடிகிறது.

''எனது இருண்ட அறையில்
முழு நிலவொளியின்
வெளிச்சம் தெரிகிறது!

நீங்கள் 
முட்டாள் 
மூடன் என
எள்ளி நகையாடலாம்!

கொஞ்சம் பொறுங்கள்

நீங்களும் என் கண்களோடு
கொஞ்சம் ஒத்துப்போங்கள் 
நான்
பார்க்கும் வானம்
என் கண்கள் வழியாயல்ல

தஸ்தயெவ்ஸ்கியின்
கண்கள் கொண்டு

உங்களுக்கும்
வெளிச்சத்தின் மேன்மை தெரியும்
தஸ்தயெவ்ஸ்கியின்  இருண்ட நிலவறைக் குறிப்புகளை கொஞ்சம் புரட்டுங்கள்
புரிதல்கள் தானாய் மலரும்!''
என் யாதுமாகி நாவலின் முதல் பிரதியை
ஜெயமோகனிடமிருந்து பெறும் விட்டலன்

.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....