துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.6.19

'நிலவறைக்குறிப்புகள்' -மதிப்புரை

'நிலவறைக்குறிப்புகள்' நாவல்- மொழியாக்கம் குறித்துக் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான தேவராஜ் விட்டலனின் பதிவு
http://devarajvittalan.com/2019/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA/#.XQtkgIkzbMw

ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், ‘இது மனித இயல்புகளைப் பற்றிய அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் – கோபிகிருஷ்ணன்
 நாவலை  படித்துவிட்டு அமைதியாய் என் அறை முன்பிருக்கும் பழமையான ஆலமரத்தின் விழுதுகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்; ஆலமர விழுதுகள் பூமியை அணைத்து ஒன்றாகி உட்சென்று மரத்தை கம்பீரமாக தாங்கி நிற்பது போல்.. மனித மனதை பல நிலைகளிலிருந்து உட்சென்று ஆராய்கிறார் தஸ்தயெவ்ஸ்கி ; என் மனமெங்கும் தஸ்தயெவ்ஸ்கியே நிறைந்திருந்தார்.
நான் ஒரு சிடுசிடுப்பானவன் எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கட்டத்தில்  “ வாய்ப்பேச்சில் நான் குமுறி வெடிக்கலாம், ஆனால் யாராவது விளையாடுவதற்கு ஒரு பொம்மையை என்னிடம் தந்தாலோ, அல்லது சர்க்கரைப்போட்ட ஒரு கோப்பைத் தேநீரைப் பருகத் தந்தாலோ கூட நான் சமாதானமாகிவிடுவேன் எனக் கூறுகிறான்.
நாவலில் தனிமை நிறைந்துள்ளது. தனிமையை நேசிக்கும், அதே வேளை வெறுக்கும் ஒருவனின் உள்ளக்கிடக்கைகள் நாவலில் தெளிவாக கூறியுள்ளார் தஸ்தயெவ்ஸ்கி . நாற்பது வயதுக்கு மேல் வாழ்கிறவர்கள் முட்டாள்கள் எனக் கூறுபவன் .. சில வரிகளுக்கு அடுத்தே… நான் அறுபது வயது , எழுபது வயது வரை வாழ்வேன், வாழ்க்கை அற்புதமானது  என்கிறான்.
அவன் அழகும் உன்னதமும் நிறம்பிய அனைத்தையும் விரும்புபவனாக உள்ளான். காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்,  பகுத்தறிவு, விஞ்ஞானம் சொல்லும் உண்மையான கருத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்கிறான். அபோதுதான் குற்றங்கள் செய்வதை மனிதர்கள் நிறுத்துவார்கள் என தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்.
நாவலின் முதல் பகுதியில் ஓர் அறையிலிருந்து கொண்டு தன் அக உணர்வின் விழிப்பினால் தானாகவே பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் பின் ஒரு பனிக்காலத்தில் தன் இளமைக்கால நினைவுகளை கூறத்துவங்குகிறான். தன் அலுவலக அனுபவங்கள், தன் பால்ய கால நண்பர்கள், அவர்களில் இழிவான எண்ணங்களை கொண்டிருக்கும் நண்பர்களைப் பற்றியும் பதிவு செய்கிறான்.
பல ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள் அப்போதும்  தனது வாழ்க்கையில் இருள்மண்டிதான் இருந்தது என்கிறான்.
நண்பர்களின் சகவாசம், நண்பனின் துரோகம் எல்லாம் வற்றையும் பதிவு செயகிறார் .  இழி எண்ணங்கள் கொண்ட நண்பனை எப்படியாவது கன்னத்தில் அறைந்துவிட வேண்டுமென்ற ஆக்ரோஷத்தோடு குதிரை வண்டிக்காரனிடம் சப்தமிடுகிறான்.
நிலவறையில் வாழும் அந்த மனிதன். உணவு விடுதிக்கு வந்து பார்க்கும் போது அங்கு யாரும் இல்லை, அங்கு லிசாவை பார்க்கிறான். விலை மகளாக இருக்கும் அந்த எளிய பெண்ணின் மீது கருணையும் அன்பும் கொள்கிறான். நீ ஏன் இங்கு இப்படி உள்ளை உன் வீட்டில் உன் தந்தையோடு இருக்கலாம் இல்லையா, இங்கு படும் துன்பத்தை விட அங்கு துன்பம் குறைவுதானே பெண்ணே என ஏங்குகிறான் .
துன்பத்தில் வாழும் ஒருவன், எல்லோரையும் எரிச்சல் மிகுந்த பார்வையில் பார்க்கும் ஒருவன், தனிமையை நேசிக்கும் ஒருவன் , தன்னை எல்லோரும் நேசிக்க வேண்டும் என்றும் , அதே தருணத்தில் யாரும் தன்னை நேசிக்க வேண்டாம் என்ற எண்ணங்கள் கொண்ட ஒருவன் 
எதேர்ச்சையாய் பார்த்த ஒரு பெண்ணின் அழகையும் அன்பையும் ஆராதிக்கிறான் .
அந்த பெண்ணே அவனைத் தேடி வந்து பேசும் போது அவளது அன்பை ஏற்க மறுக்கிறான். அவள் மனதை காயப்படுத்தி அனுப்பி வைக்கிறான் அவள் சென்றதும், லிசா , லிசா என அவள் பெயரைக் கூறி சப்தமிடுகிறான் .
முரண்பட்ட மனிதனின் வாழ்வின் வழியாய்..நேசிப்பையும், அன்பையும், கருணையையும் நம் மனதில் விதைகளாய் விதைத்துச் செல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி . நாவலை தமிழில் அற்புதமான மேம்பட்ட தமிழ் புலமையின் வழியாய், அற்புதமாக  மொழி பெயர்த்துள்ளார் எழுத்தாளர்  பேராசிரியை எம். ஏ. சுசீலா  அம்மா அவர்கள் . நேர்த்தியான வடிவமைப்பில் புத்தகத்தை பதிப்பித்திருக்கிறார்கள் நற்றிணைப் பதிப்பகத்தார்.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....