துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.1.10

விருதுகள்,பரிசுகள்

மூத்த எழுத்தாளரும்,திறனாய்வாளரும்,சமூக இலக்கிய அக்கறை கொண்டிருப்பவரும்,’தமிழ் நேயம்’இதழைத் தளரா முயற்சியுடன் நடத்தி வருபவருமான திரு கோவை ஞானி அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டிற்கான கானடா இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது,அவரது அயரா உழைப்பிற்கும்,தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மீது அவர் கொண்டிருக்கும் மெய்யான அக்கறைக்கும் கிட்டியுள்ள அங்கீகாரம் என்றே கூறலாம்.

பொதுவான இலக்கிய முயற்சிகளோடு,பெண் எழுத்துக்களை வெளிக் கொணரத் திரு ஞானி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் மிகச் சிறப்பானவை.கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண் எழுத்தாளர்களுக்குச் சிறுகதைப் போட்டி அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கி,இதுவரை எதுவுமே எழுதாதவர்களையும் கூட வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருப்பவர் அவர்.

வாசிப்பையும் எழுத்தையும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நிறுத்திவிடாமல் தமிழியம்,மார்க்ஸியம்,பெரியாரியம்,மெய்யியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் திரு கோவை ஞானி அவர்களுக்கு வணக்கமும்,வாழ்த்துக்களும்.

மைய அரசின் சாகித்திய அகாதமி விருது பெறும் கவிஞர் திரு புவியரசு அவர்கள் வானம்பாடிக் குழுவைச் சேர்ந்த முன்னோடிப் புதுக் கவிஞர்களில் ஒருவர்.பல மொழியாக்க நூல்களையும் உருவாக்கி அளித்திருப்பவர்.கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்று நூலை ‘நான் துணிந்தவள்’என்ற தலைப்பில் தமிழுக்கு அளித்தவர்.
திரு புவியரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் தமிழ்மகன் அவர்கள்,இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் ஒருவர். அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர் சுஜாதா நினைவு அறிவியல் சிறுகதைப்போட்டியிலும் பரிசு பெற்றிருப்பவர்.அவருடைய "எட்டாயிரம் தலைமுறை' என்ற நூல், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருக்கிறது.
திரு தமிழ்மகன் அவர்களின் இலக்கியப்பணி மேன்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

(திரு கோவை ஞானி பற்றிய விரிவும்,ஆழமும் கூடிய பதிவு...ஜெயமோகனின் வலையில் காண்க..)
இணைப்பு;http://www.jeyamohan.in/?p=6123

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....