துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.1.10

விருதுக்கு வாழ்த்து



தமிழகம் தந்த உலக மெல்லிசையின் இருவேறு அடையாளங்கள் இளையராஜாவும்,ஏ.ஆர்.ரஹ்மானும்.

இருவரின் அணுகுமுறையிலும் பேதங்கள் இருக்கலாம்;ஆனால் இருவரின் இசையையும் பேதமின்றி ஏற்றுச் செவிக்கு விருந்தாக்கும் இலட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் உலகின் பல மூலைகளிலும் சிதறிக் கிடக்கிறது.
இந்தியக் குடியரசு நாளன்று 'பத்மபூஷண்' விருதுக்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விரு இசை மேதைகளுக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் திரு ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் சில கூறுகளை உட்செறித்து-அவரது வசனத்துடன் வெளிவந்த 'நான் கடவுள்' திரைப்படத்தைத் தனக்கே உரித்தான பாணியில் இயக்கிய பாலா,சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.தன் முதல் படம் தொடங்கித் தன் ஒவ்வொரு ஆக்கத்திலும் தனி முத்திரையைப் பதித்து வரும் பாலாவால் தமிழ்த் திரை உலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்கிறது.பாலாவுக்கும்,அவருடன் இணைந்து செயல்பட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.



காண்க:
ஏழாம் உலகமும்,நான் கடவுளும்
http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....