![](http://2.bp.blogspot.com/-7Tb04QzeRns/UABVjjOyO7I/AAAAAAAAMfA/V5NP29uX7Jg/s400/DSC02274.jpg) |
பூதத்தான்கெட்டு... |
அண்மையில் கேரளப்பயணத்தின்போது பெரும்பாவூர் அருகிலுள்ள தட்டைக்காடு என்னும் இடத்துக்கும் சென்றிருந்தேன்.அங்கிருந்த சலீம் அலி பறவைகள் சரணாலயத்தைப் பார்க்க அப்பொழுது நேரம் வாய்க்கவில்லை என்றாலும் அருகில் இருந்த
பூதத்தான் கட்டு என்னும் அணைக்கும் அது சார்ந்த அடர் காட்டுக்குள்ளும் சற்றுச் செல்ல முடிந்தது.
![](http://1.bp.blogspot.com/-rUCTcCMNi_0/T_smwKtCd6I/AAAAAAAAMcc/DeQ85OJcl-w/s320/Unknown000070.jpg) |
பழைய அணை செல்லும் வழி... |
பாறைகளின் நெருக்கத்தால் இயற்கையாகவே பெரியாறு நதியின் மீது [சர்ச்சைக்குரியஅதே முல்லைப்பெரியாறுதான்..]அணை போல உருவான சிறியதொரு நீர்த்தேக்கம் பூதத்தான் கட்டு
[மலையாள உச்சரிப்பில்
பூதத்தான் கெட்டு].
மானுடக் கண்ணுக்குப் புலப்படாத சில பூதங்கள் கொண்டு வந்து போட்ட கற்பாறைகளாலேயே அப்பகுதி உருவாகியிருக்கிறது என்பது அங்குள்ள மக்களிடையே வழங்கும் தொன்மச் செய்தி.பெயர்க்காரணமும் அது பற்றியதே.
![](http://1.bp.blogspot.com/-n7uXMOhi004/UABV1Rnd7dI/AAAAAAAAMfI/4r6AGoulkIg/s320/DSC02278.jpg) |
பாறைகளும் நீர்த்தேக்கமும் |
![](http://3.bp.blogspot.com/-9GAnY9JLqJo/T_sooOzYMhI/AAAAAAAAMdU/JyAa-IWgyFA/s320/Unknown000261.jpg) |
பூதத்தான்கெட்டுப் பாறையில்... |
பயன்பாட்டுக்கு இன்று அதிகம் உதவாத அந்த நீர்த்தேக்கத்துக்கு மாற்றாகக் காலப்போக்கில் செயற்கையான அணையும் அங்கே உருவாக்கப்பட்டு விட்டது...
![](http://www.elephantpass.in/PlaceImages/ZpBMMY.jpg) |
புதிய அணை.. |
பழைய நீர்த்தேக்கம் பூதங்களால் உருவாகக்கப்பட்டது என்பது போன்ற செவிவழிச் செய்திகளின் நம்பகத்தன்மை ஒரு புறமிருக்க...அதற்குச் செல்லும் அந்த வழி...., மரங்களும் காட்டுக் கொடிகளும் அடர்ந்து நீண்டும் வளைந்தும் செல்லும் தனிமையான அந்தப் பாதை...அங்கே நடந்து சென்றது சுகமான சுவாரசியமான அனுபவங்களை அளித்ததென்னவோ உண்மை...
![](http://1.bp.blogspot.com/-u2V8kXD5lT4/UABUxzPPajI/AAAAAAAAMes/yORXBvqoets/s320/DSC02256.jpg) |
அடர்காட்டில் மகளுடன்.... |
![](http://4.bp.blogspot.com/-n9ww7mTWOo0/UAEKW8wAcKI/AAAAAAAAMjM/bskzx4EpxlM/s640/DSC02241.jpg) |
நம்பிக்கையோடு வலை பின்னியபடி கிளையில் தொங்கும் மெகா சிலந்தி... |
![](http://4.bp.blogspot.com/-oAh8_ETB-8k/UAEKur4mj-I/AAAAAAAAMjY/NIg_7ChfL7M/s640/DSC02247.jpg) |
தரையில் கிடக்கும் தேனடை... |
![](http://2.bp.blogspot.com/-Pc4bVk09Ggs/UAMMXiQcZ2I/AAAAAAAAMoA/hAlj4wOFf40/s320/DSC02246.jpg) |
காட்டு வழியில் சரிந்து கிடக்கும் மரக்கிளைகள்...
மரப்பொந்துகள்.. |
![](http://3.bp.blogspot.com/-5Cn6BCGQ4Yo/UAMNBpK-eSI/AAAAAAAAMoY/dJbVImTf4zc/s320/DSC02260.jpg) |
காட்டுக்குள்ளே ஆராய்ச்சி... |
![](http://4.bp.blogspot.com/-9kUzyMyOPRQ/UAMNxV6vNXI/AAAAAAAAMo0/cZC20_redvY/s320/DSC02283.jpg) |
பாறைக்குள் புதையல் தேடி...[பேரக்குழந்தைகள்..] |
2 கருத்துகள் :
படங்களும் பகிர்வும் அந்த இடத்திற்க்கே எங்களை அழைத்து சென்ற அனுபவம் தருகிறது.
உண்மையில் எதோ பெயர் தெரியாத பூச்சி என்றே நினைத்தேன் சிலந்தியைப் பார்த்து.
ஏங்க வைக்கும் புகைப்படங்கள்.
கருத்துரையிடுக