துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.1.17

'வாழ்க்கையை எழுதுதல்'-உரை




மானுட வாழ்க்கை,  வாழ்க்கைச் சரித்திரங்களாகவும் தன் வரலாறுகளாகவும் நாட்குறிப்புக்கள் மற்றும் நினைவுக்குறிப்புக்களாகவும் தன் வரலாற்று நாவலாகவும்  பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றைத் தொகுத்து நோக்கும் முயற்சியாக சென்னையிலுள்ள எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ’வாழ்க்கையை எழுதுதல்’[ LIFE WRITING] என்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கு ஒன்று ஜன 6ஆம் நாளன்று  நிகழ்ந்தது.

என் ‘யாதுமாகி’ நாவல், வாழ்க்கை வரலாறு ஒன்றைப்  புனைவுப்பாணியில்  தருவது என்பதால்,அந்தக் கருத்தரங்கில் அது சார்ந்த என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள  நானும் ஒரு சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.



தமிழில் எழுதப்பட்டிருக்கும்  வாழ்க்கை வரலாறுகள் தன் வரலாறுகள் தன் வரலாற்று நாவல்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட பிறகு ஒரு ஆளுமையின் தனிப்பட்ட வாழ்வை ஒரு  புனைவிலக்கியமாக மாற்றுவதில் அதை ஒரு  நாவல் வடிவத்துக்குக் கொண்டு வருவதில் நான் எதிர் கொண்ட சிக்கல்கள்,மனத் தடைகள், புனைவுக்காகத் தேர்ந்து கொண்ட உத்திகள் ஆகியவை குறித்து நான் உரையாற்றினேன்.








கருத்தரங்கின் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட  மாணவியர், பேராசிரியர்கள், பிற அழைப்பாளர்கள்  ஆகியோர் ஆங்கிலக்கருத்தரங்கு ஒன்றில் நான் ஆற்றிய தமிழ்ச்சொற்பொழிவுக்குத் தந்த வரவேற்பும் அன்பான ஆர்வம் கலந்த எதிர்வினைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டியதோடு,. உரை முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில்  பல மாணவியர்என்னிடம்  வினாக்களை எழுப்பியதும், ஆலோசனைகள் பெற்றதும்...என்னிடம் கையெழுத்தும் வாழ்த்தும் வேண்டியதும் வளரும் தலைமுறை மீதான நம்பிக்கையையும் என்னுள் தழைக்கச்செய்தன. எளிமையும் இனிமையும் நிறைந்தவர்களாய் அன்று என்னுடன் பழகிய கல்லூரிச் செயலர், முதல்வர் , துறைத் தலைவர், சக பேராசிரியர்கள் ஆகியோர் காட்டிய  அன்பு என்றென்றும் மறக்க முடியாத சித்திரமாய் என்னுள் பதிந்திருக்கும்.




மீண்டும் ஒரு கல்லூரிச் சூழலும் இளம் மாணவியரின் அண்மையும் என் பேராசிரியப்பணிநாட்களை மீட்டெடுக்க அதில் சுகமாய் உலவி விட்டு வந்தது போன்ற பிரமை..!!

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....