துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.2.15

சிக்கிமை நோக்கி...-1


 

சாகித்திய அகாதமியின் அழைப்பின் பேரில் 
சிக்கிம் மாநிலத்திலுள்ள காங்டாக் நகரில் நிகழும் 
அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில்[பிப் 7,8] பங்கேற்று என் சிறுகதை ஒன்றை
[ஓர் உயிர் விலை போகிறது
இந்தியில் வாசித்தளிப்பதற்காக செல்கிறேன்.
விமானப்பயணம் தங்குமிடம் அனைத்தும் அவர்களின் ஏற்பாடு.

இந்தி பஞ்சாபி குஜராத்தி மலையாளம் தமிழ் தெலுங்கு உருது வங்காளம் கன்னடம் கொங்கணி எனப்பல இந்திய மொழிக்கதைகளும் 4 அமர்வுகளில் ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசிக்கப்படவிருக்கின்றன. 

இலக்கியத்தின் பல முகங்கள்...
நாட்டின் பலதரப்பட்ட எழுத்தாள அறிமுகங்கள்...


எல்லாவற்றையும் விட 
எனக்கு அறிமுகமில்லாத நம் தாய்நாட்டின் வடகிழக்கு வானம்,,,,,,
எனக்குப் புத்தம் புதியதான அந்த பூமி அன்போடு இலக்கியத்தோடு அழைக்கிறது... தன் கண்கொள்ளா இயற்கை வனப்புக்களோடும்தான்....

பூடான்,நேபாளம்,சீனா ,பங்களா தேஷ் எனப் பல  அண்டை நாடுகள் சூழ அமைந்திருக்கும் அழகிய சிறிய மாநிலம் சிக்கிம்.இந்தியக்குடியரசுடன் கோவா இணையும் வரை நாட்டின் மிகச்சிறிய மாநிலம் அதுதான். 

தலைநகரம் காங்டாக்  செல்ல கொல்கத்தா சென்று அங்குள்ள பாக்தோக்ரா அல்லது சிலிகுரியிலிருந்து சாலை வழி வாடகைக்காரிலோ பேருந்திலோ செல்ல வேண்டும். பனி பொழியும் இமயக்காட்சி.....அருகில் டார்ஜிலிங் கஞ்சன் ஜங்கா எந்தக்காட்சிகள் காத்திருக்கிறதோ....எவற்றைக்காண வாய்ப்புக்கிட்டுகிறதோ பார்ப்போம்....

கோவையிலிருந்து பிப். 5 கிளம்பி கொல்கத்தா
6 கொல்கத்தாவிலிருந்து போக்தோக்ரா-அங்கிருந்து காங்டாக்
7,8 நிகழ்வுகளும் ஊர் சுற்றலும்
9,10 திரும்பும் பயணங்கள்...

நல்ல பயண அனுபவத்தையும் படங்களையும்  விரைவில் பதிவேன் என எண்ணுகிறேன்...








கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....