துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

21.6.16

’’எதனில் தொலைந்தால்...’’

பல மாதங்களாக நான் என்னையே தொலைத்தபடி அமிழ்ந்து கரைந்து கொண்டிருக்கும் அற்புதமான  பாடல்.இது...!
.



இரவின் அமைதிக்குள் கரைந்தபடி இதில் மட்டுமே தோய்ந்து,கரைய முடிந்தால்  அமிர்தம் .என்ன அதற்கு மேலானதும் கூட வாய்க்கும்
.[அமிர்தம் என்னும்  அந்தச்சொல்லுக்கு சித்ரா தரும் மிக இலேசான அழுத்தமே  காதில் தேன் பாய வைக்கிறதே.]

காதலுக்கு மட்டுமே பொருத்தமானதில்லை என்பதே இப்பாடலின் தனித்துவம். உண்மையானநேசம் எதன் மீது எவர் மீது இருந்தாலும்-
அது,பக்தி பாவனையாகவே இருந்தாலும் ,கூட முற்றிலும் இயைந்து வரும் இந்தப்பாடலை  மனம் தோய்ந்து ஒரு தவம் போலப்பாடியிருக்கிறார் சித்ரா....
[அதிலும் ‘’எதை நான் கேட்பின் ‘’என உச்ச ஸ்தாயியில் எடுத்து விட்டு.- அதே வேளையில்  அந்தத் தருணத்துக்கான நெகிழ்வையும் ,குழைவையும் பரவசச் சிலிர்ப்போடு  வெளிக்காட்டியிருக்கும்,சித்ராவின் ஒட்டு மொத்த அர்ப்பணிப்பு. ஒரு  SUBLIMITY!!  உன்னதக்கணத்தின் உச்சம் தீண்டுவது. ...]

இருளிலிருந்து ஒளியை நோக்கியும்
பொய்மைகளிலிருந்து வாய்மை நோக்கியும்
மரணத்திலிருந்து நித்தியத்துவம் நோக்கியும்
நம்மை நகர்த்தும் அஸதோமா ஸத்கமய மட்டுமல்ல....

தாகூரின் கீழ்க்காணும் வரிகளையும் இந்தப்பாடல் நினைவுபடுத்தத் தவறவில்லை..

“I thought that my voyage had come to its end at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity, but I find that thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart, and where the old tracks are lost, new country is revealed with its wonders.

என் சக்தியின் கடைசி எல்லையில் 
என் பயணம் 
முடிவுக்கு வந்து விட்டது
என் முன்னிருந்த பாதை மூடி விட்டது
சரக்கெல்லாம் தீர்ந்து 
மௌனமான மறைவில் ஒதுங்கவேண்டுமென்று நினைத்தேன்..
ஆனால்...
உன் எண்ணம் வேறு என்பது...
இப்போது புரிகிறது..
பழைய வார்த்தைகள் நாவில் மடிகையில்...
புதிய ராகங்கள் இதயத்திலிருந்து வெடிக்கின்றன..
பழைய பாதைகள் மறந்து போகையில் 
புதிய தேசம் புலனாகிறது...
[கீதாஞ்சலி மொழியாக்க வரிகள்;
எழுத்தாளர் வாஸந்தியின் 
                                                மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் நாவலிலிருந்து].

 வரிகள் எளியவைதான்...ஆனால் அதை
மறக்க முடியாத ஒரு ஆன்மிக அனுபவமாக்கிய சித்ராவின் குரலுக்கு நன்றி...

இன்றைய சந்தைக்கூச்சல்  மந்தை இரைச்சல் பாடல்களுக்கு இடையில்  வாராது வாய்த்த மாமணியாய் இதைத் திரையில்  ,இடம் பெற வைத்த மணிரத்னத்துக்கும் ரஹ்மானுக்கும் கூட....

இந்தப்பாடல் பாடியது  குறித்தசித்ராவின் அனுபவம்...
https://youtu.be/r_5Wk16jakA



கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....