பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணின் உயிர் உருகும் ஓலம்…!!
வாஷிங்டன் போஸ்டில் வெளியான
வன்முறைக்கு ஆளான அந்தப்பெண்ணின் கடிதத்தை , [‘You took away my worth’] இடையிடையே தன் கருத்துக்களோடு சேர்த்து இன்றைய தினமணியில் கட்டுரையாக்கித் தந்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசி திரு பிரபாஸ்ரீதேவன். மனச்சாட்சி எஞ்சியுள்ளோர் தப்பவிடக்கூடாத கட்டுரை இது,
//இந்தப் பெண் அந்த நேரத்தில் தங்கையுடன் பார்ட்டி செல்கிறார், மதுவும் அருந்துகிறார். உடனே அதான்... என்று சொல்லக்கூடாது. மது அருந்துவது பலருக்கு வழக்கம் இங்கேயே... குடி குடியைக் கெடுக்கும் என்று நாம் கரடியாக கத்தினாலும். அமெரிக்காவில் அது மிக சகஜம். ஒரு பெண் மது அருந்தினால் அவரை எல்லோரும் அணுகலாம் என்று பொருளல்ல. இதை கருத்தில் வைத்து மேலே படிக்கவும்.//
/அவர் தந்தை கூறுகிறார்: இருபது நிமிட ஆக்ஷனுக்கு இத்தனை பெரிய தண்டனையா?//என்று....
வாஷிங்டன் போஸ்டில் வெளியான
வன்முறைக்கு ஆளான அந்தப்பெண்ணின் கடிதத்தை , [‘You took away my worth’] இடையிடையே தன் கருத்துக்களோடு சேர்த்து இன்றைய தினமணியில் கட்டுரையாக்கித் தந்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசி திரு பிரபாஸ்ரீதேவன். மனச்சாட்சி எஞ்சியுள்ளோர் தப்பவிடக்கூடாத கட்டுரை இது,
இது கடிதம் அல்ல; இதயம்
கணவனே ஆயினும் மனைவி.விரும்பாத தருணத்தில் அவளை உறவுக்கு அழைப்பது தார்மீகப்பாலியல் வன்முறை போன்றதே என, அண்மையில் ஒரு சர்ச்சை படித்தேன்...
பொதுமகளாக்கப்பட்டோருக்கும் கூட இது பொருந்தக்கூடியதே.
அந்தப்பிஞ்சுப்பெண் எப்படிப்பரிதவித்திருப்பாள் அவள் வாழ்வே
அவளுக்கு ஓர் இருள் கனவாக கொடூர மிரட்டலாக அல்லவா இருக்கும்...அந்தநிலையில் அவனை மன்னிக்கும் உள்ளம் எப்படி வாய்த்தது...விளங்காத புதிரேவாழ்க்கையும் அவரவர் உள்ளமும்.
என்ற அந்த முன்னுரைக்காகவே கட்டுரையாளருக்கு ஒரு மலர்க்கொத்தை அளிக்கத் தோன்றுகிறது.
காரணம் உடனே கலாசாரக்காவலர்கள்..அவள் ஏன் அங்குபோக வேண்டும்..ஏன் மது அருந்த வேண்டும் , ....எல்லாம் இந்தப்பெண்கள் இப்படிச்செய்வதால்தான் என்ற உளறலைத் தொடங்கி விடுவார்கள்
[ பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்ற ஜேசுதாஸ் போல,- செலிப்ரிடி என்றால் எதுவும் பேசலாம் போலிருக்கிறது-
தில்லியின் முனீர்க்காவில் ஓடும் பஸ்ஸில் மானபங்கம் செய்யப்பட்ட நிர்பயாவை , இரவில் , அவள் ஏன் அப்படிப் போகவேண்டும் என்று கேட்டதுபோல..]
கட்டுரையில் என்னை உறைய வைத்த வரிகள்...
//அவன் நினைத்தானாம் எனக்கு விருப்பமாக இருந்தது என்று. எனக்குப் பிடித்ததாம். இன்றும் அந்த உணர்வை விவரிக்க என் வசம் வார்த்தைகள் இல்லை...என்னைப் புரட்டிப் போட்டு என் ஆடைகளை கழற்றி, இலை முட்களையும் விரல்களையும் என்னுள் நுழைத்து ... நான் எப்படி நிரூபிக்கவேண்டும்? எனக்கு அது பிடிக்கவில்லை என்று.//
பாவம் மகனின் ஒலிம்பிக்ஸ் தவறிய சோகம் அவருக்கு...
அவளின் வாழ்க்கையே திசை தடுமாறியதற்கு யார் விடை சொல்வது?
இன்னும் கூட அந்த மனநிலையிலிருந்து விடுபட முடியாத தத்தளிப்புடன் இருக்கிறேன்..
மூலம்;
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக