துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.1.11

தேன் குரலுக்கு விருது

தேன் தடவிய குரலில் இசையைக் கசிய விட்டு, உணர்வு பூர்வமான தனது உட்கலப்பால் உரிய ‘பாவ’ பேதங்கள் காட்டிக் கேட்போரை வசீகரிக்கும் மாயத்தைச் செய்பவர் எஸ்.பி.பி.
 குடியரசு நாளான இன்று (26/01/11) அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்
பத்மபூஷண் விருதைக் கொண்டாடுவதற்காக....
அவரது பாடல்களில் என்னை உருகிக் கரைய வைக்கும் பலவற்றுள்.
தேனே தென்பாண்டி மீனே என்ற பாடல் மட்டும் பகிர்வுக்கு இங்கே....

ராஜாவின் இசையும் பாலுவின் குரலும் காதுக்குள் இசைத் தேனாய்ப் பாய்ந்து நம்மை மூழ்கடிக்கும் இந்தப் பாடல் இரவின் மோனத்தையும் , தனிமையின் சோகத்தையும் ஒரு சேரச் சுமந்து வருவது.
பத்மபூஷண் எஸ்பி.பி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.


பி.கு; இந்தப் பாடலை விடவும் பாலச்சந்தரின் அக்கினி சாட்சி (சிவகுமார்,சரிதா நடிப்பில்)படத்தில் அவர் பாடும்‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ பாடலே எனது எஸ்.பி.பி பட்டியலில் முதலிடம் பெறுவது.
என்னைக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்க வைப்பது..
ஒரு முறை எஸ்.பி.பி தந்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்தப்பாடலைக் கேட்ட பிறகே , தான் உறங்கச் செல்வது வழக்கம் என்று கூடக் குறிப்பிட்டிருந்தார்.
யூ டியூபில் தேடிப் பார்த்தபோது அது கிடைக்கவில்லை..
நண்பர் எல்.கே அவர்கள் அனுப்பி வைத்த இணைப்பால் அந்தப் பாடலும் கூடவே...



2 கருத்துகள் :

எல் கே சொன்னது…

http://www.youtube.com/watch?v=AF-ZL8snxws

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி எல்.கே.
அந்தப் பாடலையும் பதிவில் சேர்க்க உதவியமைக்கு மிக்க நன்றி..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....