துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.12.12

பாரதி பிறந்த திருநாளில்

என் எழுத்தின் ஆதர்சம்...,என் தமிழின் ஆதர்சம்..,என் ஆளுமையின் ஆதர்சம் மகாகவி பாரதி. பாரதி பிறந்த இந்தத் திருநாளில் அவன் சார்ந்த ஒரு நூல்,ஒரு ஓவியம்,ஒரு பாடல்...ஒரு காணொளி...இங்கே பகிர்வுக்கு..

19.9.12

’’மேன்மைத் தொழிலில்..’’

விநாயகர் நான்மணிமாலையில் பாரதி வேண்டுவதே இன்று
நம் வேண்டுதலும்....

‘’பக்தி உடையார் காரியத்தில்
  பதறார் மிகுந்த பொறுமையுடன்
  வித்து முளைக்கும் தன்மை போல்
  மெல்லச் செய்து பயன் அடைவர்
  சக்தி தொழிலே அனைத்தும் எனில்
  சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...
  வித்தைக்கு இறைவா கணநாதா
  மேன்மைத் தொழிலில் பணி எனையே’’

‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
  இமைப்பொழுதும் சோராதிருத்தல்
  மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
  சிந்தையே இம்மூன்றும் செய்’’


காண்க,இணைப்பு;

பாரதியின் விநாயகர் நான்மணிமாலை...



10.9.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3

                                               பாரதியின் ‘அர்ஜுன சந்தேகம்’



’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’-
 பஞ்ச தந்திரக்கதைப்பாணியில் அமைந்த ‘நவதந்திரக்கதைகள்’, ’சில வேடிக்கைக் கதைகள்’ஆகிய குறுங்கதைகளை எழுதியிருக்கும் மகாகவி பாரதி ஒரு அருமையான கதை சொல்லியும் கூட. தனது முற்றுப்பெறாத  நாவலான ‘சந்திரிகையின் கதை’யில் பெண்ணினத்தின் மீதான ஆவேசக் கரிசனத்தையும்,முழுமை பெறாத தன்வரலாற்றுக்கதை[autobiography]யான ‘சின்னச் சங்கரன் கதை’யில் தன் அங்கதப்புலமையையும் காட்டியிருப்பவன். தாகூரின் வங்கமொழிக்கதைகள் சிலவற்றை பாரதி மொழியாக்கம் செய்ததும் உண்டு. தமிழ்ச்சிறுகதை அரும்பு விடத் தொடங்கிய காலகட்டத்தில் அதன் முன்னோடி முயற்சிகளில் அவனும் பங்கு பெற்றிருக்கிறான் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...

31.12.11

’’காக்கை குருவி..’’



’’காற்றடித்ததிலே மரங்கள்
        கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி
        நாடெங்கும் வீழ்ந்தனவே..’’

-பாரதியின் ’பிழைத்த தென்னந்தோப்பு’பாடலிலிருந்து....

’’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே-இந்த
நேரமிருருந்தால் என் படுவோம்..’’

- பாரதியின்  ’புயற்காற்று'
புதுவையையும் புயலையும் பார்த்ததும்... கொஞ்சம் பாரதியின் ஞாபகம்...
பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு முறை கடும்புயல் புதுவையைத் தாக்கத் தாங்க முடியாத உயிர்ச்சேதங்கள்.பொருட்சேதங்கள்....

11.12.11

வீரிய வாசகம்

இன்று பாரதியின் பிறந்த நாள்!
தமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.
எனக்கும் அப்படித்தான்...
பாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும்

1.9.11

பாரதியின் விநாயகர்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்-குடைவரைச் சிற்பம்

உலகின் தலையாய எழுத்தர்களில் ஒருவர் விநாயகர்.
வியாசபாரதத்தை வியாசர் சொல்லிக் கொண்டே போகத் தன் கொம்பின் முனை முறித்து அதை விநாயகர் எழுதியதான ஒரு தொன்மம் நம்மிடை வழங்கி வருகிறது.

விநாயகக் கடவுள் என்னும் உருவகத்துக்குள்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும் தேவருந்தானாய் 

திருமகள் பாரதி உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்’’என அனைத்து சமயங்களின் அனைத்துக் கடவுளரையும் தரிசிக்கும் திறம் பெற்று விளங்கியவன் ஆன்மிக ஞானியாகிய பாரதி.

புதுவை மணக்குள விநாயகரை வழிபடும் வழக்கம் கொண்டிருந்த பாரதிக்கு விநாயக உருவம்...
வாய் திறவா மோன நிலைக்குள் செல்ல வைக்கும் ஓங்காரத்தின் உருவகம்;
அது அகக் கண்ணை விழிக்க வைத்து உள்ளொளியை , ஆக்க சக்தியை மேம்படுத்துவது;                                                                                                                             புறக் கவலைகளிலிருந்து விடுவித்து அச்சமற்ற நிலைக்குக் கொண்டு செல்வது;
சலனமில்லா மனநிலையை வசப்படுத்தித் தருவது.

’கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்
   குணமதில் பலவாம்......
   உட்செவி திறக்கும்
   அகக்கண் ஒளி தரும்
   அக்கினி தோன்றும்
   ஆண்மை வலியுறும்
   திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்
   கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்
   விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
   துச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு
   நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்
   அச்சம் தீரும்
   அமுதம் விளையும்
   வித்தை வளரும் 
   வேள்வி ஓங்கும்
   அமரத் தன்மை எய்தவும் 
   இங்கு நாம் பெறலாம்’’
என்கிறது பாரதியின் பாடல்..


‘’பக்தி உடையார் காரியத்தில்
   பதறார் மிகுந்த பொறுமையுடன்
   வித்து முளைக்கும் தன்மை போல்
   மெல்லச் செய்து பயன் அடைவார்
    சக்தி தொழிலே அனைத்துமெனில்
    சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்
    வித்தைக்கு இறைவா கணநாதா
    மேன்மைத் தொழிலில் பணி எனையே’’
என்னும் பாரதியின் பொருள் பொதிந்த வேண்டுதலே நமது வேண்டுதலுமாகிறது...
’ஆழ்க உள்ளம் சலனமிலாது
   அகண்டவெளிக்கண் அன்பினையே
சூழ்க ! துயர்கள் தொலைந்திடுக!
   தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெலாம்!
   கிருத யுகம்தான் மேவுகவே’’
இணைப்பு;
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....