துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

2.12.11

தேவந்தி மதிப்புரை- பதிவுகள்...


புது தில்லியிலுள்ள வடக்கு வாசல் பதிப்பக வெளியீடாக,ஜூலை 29 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்பட்ட என் சிறுகதைத் தொகுப்பாகிய தேவந்தி பற்றிய இரு வலைப்பதிவுகள்....
சும்மா வலைப்பூவை எழுதி வரும் என் அன்பு மாணவியும் அருமை மகளுமான தேனம்மையின் பதிவு
http://honeylaksh.blogspot.com/2011/10/blog-post_19.html

மூன்றாம் கோணம் இணைய இதழில்-வாசிக்கலாம் வாங்க பகுதியில் மதிப்புரை வழங்கியுள்ள இணையத் தோழி திரு ஷஹிதாவின் கட்டுரைக்கான இணைப்பு..
எம். ஏ. சுசீலாவின் தேவந்தி - வாசிக்கலாம் வாங்க

மதிப்புரை வழங்கிய தேனம்மைக்கும், ஷஹிதாவுக்கும் என் நன்றி....

பின் குறிப்பு
தேவந்தி நூல் கிடைக்குமிடங்கள் பற்றி மதுரைநண்பர்கள் கேட்டிருந்தார்கள்.மதுரை தானப்ப முதலி தெரு மயூரா வளாகத்தில் உள்ள
மீனாட்சி புத்தக நிலையத்தில் தேவந்தி நூல் கிடைக்கும்.
இணைய வழி பெற உடுமலை.காமில் தொடர்பு கொள்ளலாம்.
உடுமலை.காம்
வடக்கு வாசல் பதிப்பகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.அதன் முகவரி வலையின் முகப்புப் பக்கத்திலேயே உள்ளது.


2 கருத்துகள் :

பால கணேஷ் சொன்னது…

தேவந்தியைப் பற்றி தேனக்கா அழகுத் தமிழில் எழுதியதைப் படித்த போதே படிக்கும் அவா எழுந்தது. அவரிடம் கேட்டு வடக்கு வாசல் முகவரி வாங்கி வைத்துள்ளேன். இம்மாதம் நிச்சயம் வரவழைத்துப் படித்து விடுவேன். நன்றி...

விச்சு சொன்னது…

வாங்கிப் படிச்சிட்டு வரேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....